| ஈழத்து எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் சமாதி புதர்மண்டி மோசமான நிலையில் உள்ளது! |
| Friday, January 29, 2010 |
| ஈழத்து எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் சமாதி புதர்மண்டி மோசமான நிலையில் உள்ளதாக தஞ்சாவூர் நகரமன்ற திமுக உறுப்பினர் குமார் அவர்கள் அண்மையில் நடைபெற்ற தஞ்சாவூர் நகரமன்றக் கூட்டத்தில் முறையீடு செய்து பேசினார். அவரது பேச்சின் சுருக்கத்தினையும் அதற்கு ஆனையாளர் நடராஜன் அவர்களின் பதிலையும் உள்ளடக்கி ஜனவரி 26ஆம் திகதி தினமணியில் கீழ் வருமாறு செய்தி வெளியாகியுள்ளது. தஞ்சாவூர், ஜன. 25: […] திமுக உறுப்பினர் குமார்: ராஜகோரி மயானத்தில் பட்டுக்கோட்டை அழகிரி, புகழ்பெற்ற ஈழத்து எழுத்தாளர் கே. டானியல் உள்ளிட்ட பலரின் சமாதிகள் உள்ளன. இவற்றை பார்ப்பதற்காக பல ஊர்களிலிருந்தும் இங்கு வருகின்றனர். ஆனால், இந்த மயானம் புதர்மண்டி மோசமான நிலையில் உள்ளது. முள்புதர்களை அகற்றி, வேலி அமைப்பதோடு, தண்ணீர் வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையர் நடராஜன்: மயானத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு ஜாதியினர் தனித்தனி பகுதியில் கல்லறைகள் கட்டியுள்ளனர். இவற்றை வேலி கொண்டு பிரிப்பதால் பிரச்னை ஏற்படும். ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. மோட்டார் வைத்தால் பாதுகாப்பு இருக்காது. ஏற்கெனவே இங்கிருந்த பல பொருள்கள் திருட்டுப்போயுள்ளன என்றார் அவர்.[…] தகவல்: கவின்மலர் Labels: டானியல் |


0 கருத்துரைகள்:
Post a Comment