Wednesday, August 31, 2011


Thursday, August 25, 2011

தகப்பனாக இருந்தாலும் சகோதரனாக இருந்தாலும் தட்டி கேட்டகிர தயிரியம் திருமாவளவனுக்கு உண்டு !சிங்கள சேரி யில் பிறந்த மஹிந்தே  ... அங்கனுர் சேரி யில் பிறந்த திருமா வுக்கு சகோதரனாக இருப்பது ஒன்னும் ஆச்சிரியம் இல்லை எங்கள்! "இந்துத்துவ " தமிழர்களே ..(.சேரி என்பது இங்கு அடக்குமுறையில் இருக்கும் பகுதி -area  என்று பொருள் -ஈழத்தையும் அங்கு வாழு மக்களையும் நாங்கள் சேரி வாழ் மக்களாகத்தான் பார்க்கிறோம்,சேரி என்பது இன்னம்மொரு பொருள் உண்டு (மக்கள் கூடி வாழ்கிற பகுதி ) இந்த விளக்கம்மெல்லாம் இந்துத்துவ தமிழர்களுக்கு வேண்டும்மானால் போருந்ததக்கவையாக இருக்கலாம்- இது மறுக்க பட்ட வரலாறு உண்மையை மட்டும் தான் பேசும் ..... ஈழ விடுதலையில் அதில் உள்ள சாதிய அடக்குமுறைக்கு அப்பாற்பட்டு அந்த மக்களுக்கு தனி நாடே தீர்வு என்று 25 ஆண்டுகளாக போராடும் ஒரு போராளி தலைவனை கொச்சைப்படுத்தும் இந்துத்துவ முகம் (சாதி ) கொண்ட சகோதர்களே தங்கள் நிலைபாட்டை மார்ட்ரிகொள்ள வேண்டும் ,இல்லை எண்றால் இன்னம் ஆயுதம் ஏந்தி முப்பது ஆண்டுகள் போராடினாலும் ,அங்கு மஹிந்தே தான் மன்னன்!!!

Sunday, August 21, 2011

தொல். திருமாவளவன் பிறந்த நாளில் கவியரஙகம், கருத்தரங்கம் நடைபெற்றது மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பேராசிரியர் சுப.வீ. வழங்கினார் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளான ஆகத்து 17 புதன்கிழமை அன்று தமிழகம் முழுவதும் தமிழர் எழுச்சி நாளாக விடுதலைச் சிறுத்தைகள் கொண்டாடினர். சென்னை சாந்தோம் காது கேளார் பள்ளியில் காலை 7 மணியளவில் சுமார் 150 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் தலைவரே இப்பள்ளியில் உணவு வழங்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கமான ஒன்று. இவ்வாண்டு தலைவர் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள புதுதில்லியில் இருப்பதால் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வன்னி அரசு, தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், சைதை பாலாஜி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், சாரநாத், குமரப்பா, பகலவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை மாவட்டத் துணைச் செயலாளர் ஆ. விடுதலைச் செல்வன் ஒருங்கிணைத்தார். மாலை 5 மணியளவில் தியாகராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் பிறந்த நாள் நிகழ்வு மிக்க எழுச்சியுடன் நடைபெற்றது. இசைப் பாலவர் தேனிசை செல்லப்பா இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. மாவட்டச் செயலாளர் இளஞ்செழியன் நிகழ்ச்சிகளைத் தொகுத்தார். 7 மணியளவில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் "தமிழ்நாட்டில் தமிழ்' என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது. "கலைப் படைப்புகளில் தமிழ்' என்னும் தலைப்பில் திரைப்படப் பாடலாசிரியர் கபிலன், "கடைத்தெருவில் தமிழ்' என்னும் தலைப்பில் கவிஞர் ரவிக்குமார், "நீதிமன்றங்களில் தமிழ்' என்னும் தலைப்பில் கவிஞர் ரசாத், "ஆலயங்களில் தமிழ்' என்னும் தலைப்பில் கவிஞர் தமிழமுதன் ஆகியோர் கவிதைகளை சிறப்பாகப் பாடினர். 8.30 மணியளவில் திராவிட இயக்கப் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீ தலைமையில் "தமிழர் உரிமைகளை உயர்த்திப் பிடிப்போம்' என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. "தொழில் வணிகத் துறையில்' என்னும் தலைப்பில் முனைவர் நாகநாதன், "நாம் எழுப்பிய ஆலயங்களில்' என்னும் தலைப்பில் கவிஞர் தணிகைச்செல்வன் "நாடாளுமன்ற அரசியலில்' என்னும் தலைப்பில் தி. வேல்முருகன் , "கலை வளர்க்கும் மேடைகளில்' என்னும் தலைப்பில் பேராசிரியர் கரு. அழ. குணசேகரன் ஆகியோர் உரையாற்றினர். பேராசிரியர் சுப.வீ பேசும் போது, தமிழர் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்து செயல்படும் எழுச்சித் தமிழர் பிறந்தநாளில் தூக்குத் தண்டனை கைதிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யும் வரை போராடுவோம். அதற்காக கட்சி மறந்து, ஒரே களத்தில் செயல்படுவோம் என்று பேசினார். முன்னதாக மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆதரவற்றோர்களுக்கும் மூன்று சக்கர வண்டி, இஸ்திரி பெட்டி, வேட்டி சேலை ஆகியவற்றை பேராசிரியர் சுப.வீ, முனைவர் நாகநாதன் ஆகியோர் வழங்கி நலத்திட்ட உதவிகளைத் துவக்கி வைத்தனர். மாநில நிர்வாகிகள் வன்னிஅரசு, பாவரசு, உஜ்ஜைஅரசன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், தகடுர் தமிழ்ச்செல்வன், எஸ்.எஸ். பாலாஜி, இளஞ்சேகுவேரா, பார்வேந்தன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். இப்படிக்கு வன்னிஅரசு மாநிலச் செய்தித் தொடர்பாளர் 0 comments: Post a Comment Pages 1261234 » Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More Follow me on Twitter!Follow me on Twitter! மாபெரும் கையெழுத்து இயக்கம் ஈழ கொலைக்களம் திருமாவின் வழி நடத்தல் வி.சி.க. புகைப்படத் தொகுப்பு மாபெரும் கையெழுத்து இயக்கம் விருதுகள் வழங்கும் விழா புகைப்பட தொகுப்பு தலித் கலைவிழா விருதுகள் வழங்கும் விழா இலங்கைக்கு எதிரான ஐ.நா.அறிக்கை: ராஜபக்சேவை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் தோழமைகள் அடங்கமறு! விண்ணப்பம் பழந்தமிழன் வீரம் இன்னும்... வாழ்த்துக்கள் இத்தளத்தில் தேட powered by Google Groups இணைய குழுவில் இனைய Email: Visit this group தொடர்புக்கு உங்களுடைய கருத்துக்கள் , எண்ணங்களை எழுச்சி தமிழருடன் பகிர்ந்து கொள்ள : tholthiruma@gmail.com RSS FeedSubscribe to our RSS feed! www.thiruma.in :: திருமா . இன் © 2010


கணவரை தேடிச்சென்ற என்னை உறவுக்கு வற்புறுத்திய இராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல் (Video & photo in )

கணவரை தேடிச்சென்ற என்னை உறவுக்கு வற்புறுத்திய இராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல் (Video & photo in )

Saturday, August 20, 2011

பஞ்சத்துக்குப் புலி Print this Page ‘கீற்று‘ இணையத்தளம் தொடர்ச்சியாக நடத்திவரும் அவதூறுப் பரப்புரைகளுக்கு எதிரான விமர்சனத் தொகுப்பு நூல். ஒன்பது விரிவான கட்டுரைகளுடனும் கொற்றவையின் ‘மார்க்சிய முத்திரையும், இணைய அவதூறுகளும், பெண்ணியச் சிந்தனையும்‘ கட்டுரை உள்ளிட்டு நான்கு பின்னிணைப்புகளுடனும், ஆதவன் தீட்சண்யாவின் பின்னட்டைக் கவிதையுடனும் வெளியாகியிருக்கிறது. பக்கங்கள்: 160. விலை: இந்தியா - ரூ 80. அய்ரோப்பா - 10 Euros. இலங்கை - இலவசம். நூலிலிருந்து: ‘வாய்ச்சொல் தலைச்சுமை‘ என்று கிராமத்து எளிய மனிதர்கள் சொல்வதை நாம் கேட்டிருப்போம். ஒருவர் தனது சொற்களின் மீது எவ்வளவு கவனமாகவும் பொறுப்பாகவுமிருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் வெள்ளாந்தி மனிதர்களின் சொல்லாடலது. ஆனால் அவதூறாளர்களிற்கு சொற்கள் என்பது தலைச் சுமையன்று, சொற்கள் அவர்களுக்கு வெறுமனே தலையிலிருந்து உதிர்த்துவிடும் ரோமங்களே. இந்த ரோமங்களின் சேகரிப்புக் கிடங்குதான் இன்றைய ‘கீற்று‘ இணையத்தளம். அவதூறுகள், சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்திற்கும் முன்னேறிச் செல்லும் விவாத நெறிகளுக்குமான பெரும் தடைக் கற்கள். அவதூறுகள், சனநாயக விழுமியத்தின் கண்களில் விழுந்த குறுணிகள். இன்றைய இணையச் சூழல் அறிவுத் தேடல்களுள்ளவர்களிற்கு எவ்வளவு நல்வாய்ப்போ அதேபோன்று கெடுவாய்ப்பாக அது அவதூறாளர்களிற்கும் வாய்ப்பாகிப் போனது. தமிழ்ச் சூழலில் ‘நிதர்சனம்‘, ‘தேசம் நெட்‘ போன்ற வலதுசாரி வம்பளப்பு இணையங்களும் ‘தமிழரங்கம்‘ போன்ற இரண்டுங்கெட்டான் இணையங்களுமே அவதூறுக் கலாசாரத்தின் முன்னோடிகள் எனினும் ஓர் இடது அரசியல் (ம.க.இ.க) இணையத்தளமாக அறியப்படும் ‘வினவு‘ இணையத்தளமே அவதூறுக் கலாசாரத்தைப் புரட்சிகரச் சாயம் ஏற்றித் தூக்கி நிறுத்தியது. ஆதாரமற்ற அரசியல் அவதூறுகளைச் சொரிந்த அந்த இணையம் பின்னூட்டங்களிலும் அவதூறுத் தூள் கிளப்பிற்று. அநாமதேயப் பின்னூட்ட மன்னர்களின் அவதூறு எழுத்துகளால் வினவு சீரழிந்தது. வினவு இணையத்தளத்தின் நிரந்தரப் பின்னூட்டக்காரர்களாக ஏழரை, அர டிக்கட்டு, கலகம், கேள்விக்குறி போன்ற மூகமுடிகள் வலம் வந்தார்கள். தலைமறைவுப் போராட்டத்திலிருந்து தலைமறைவு அவதூறுகளிற்குப் புரட்சியாளர்கள் பாதை மாறியது வரலாற்றுக் கொடுமையன்றி வேறென்ன! மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழகத்து அரசியல் சூழலில் தவிர்க்கவே முடியாத தரப்பு. அவர்களது நீண்ட அரசியல் வரலாற்றில் கருத்து மாறுபாடு உள்ளவர்கள் கூட அவர்களது எண்ணற்ற களப் போராட்டங்ளை மதிக்கவே செய்வார்கள். ம.க.இ.கவினரின் அரசியல் முன்னோக்கில் உடன்படாதவர்கள் கூட அவர்களது உழைப்பைக் கனம் செய்வார்கள். வினவு இணையத்தளமோ ம.க.இ.கவின் மானத்தை வாங்கியது. பாட்டாளி வர்க்கத்திற்கு ‘கற்று‘க் கொடுப்பதற்கு அவதூறுகளும் ஆபாசமும் வினவுவிற்குத் தேவைப்பட்டன. வினவுவிற்கு எதிர்வினையாக நான் வெவ்வேறு மூன்று கட்டுரைகளை எனது வலைப்பதிவிலே எழுதியிருக்கிறேன். ஓர் அவதூறை உண்மையென நிரூபணம் செய்வது அவதூறாளனிற்கு எவ்வாறு சாத்தியமில்லையோ அவ்வாறே அவதூறால் பாதிக்கப்பட்டவனுக்கும் தன்மேல் ஏவிவிடப்பட்ட அவதூறைப் பொய்யென நிரூபணம் செய்யச் சாத்தியங்கள் குறைவே. அவதூறுகளிள் அடிப்படைப் பலமே இதுதான். ஏனெனில் அவதூறுகள் காட்டிலே மூண்ட தீயல்ல. அவை காற்றிலே நசுக்கிவிடப்பட்ட குசு. காலம் அவதூறாளனைத் தோல்வியுறச் செய்யும். ஆனால் அதற்குள் அவதூறுக்குள்ளானவன் தனது விலையைச் செலுத்தியிருப்பான். அவ்வாறான ஒரு நிகழ்வுதான் வினவு இணையத்தளம் ‘செங்கடல்‘ திரைப்படம் குறித்துக் கட்டியெழுப்பிய அவதூறு. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, வினவு இணையத்தளம் “செங்கடல் திரைப்படம் தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படுவதற்குப் புலிகளே காரணம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது“ எனத் தெரிவித்தது. வினவு இணையத்தளம் உருவாக்கிய இந்த வதந்தி அடுத்த ஒரு வருடத்திற்கு திரைப்படத்தின் உருவாக்க வேலைகளில் சிறிதளவாது பாதிப்பை உண்டாக்காமலில்லை. ஊடகத்தளத்திலும் வினவுவின் இந்த வதந்தி குறிப்பிடத்தக்க பாதிப்பைச் செய்தது. ‘செங்கடல்‘ முடிவடைந்து மாநிலத் தணிக்கைக் குழுவால் முடக்கப்பட்டது. இந்திய அரசையும் இலங்கை அரசையும் கடுமையாக விமர்சிப்பதால் தணிக்கைச் சான்றிதழ் வழங்க முடியாது என மாநிலத் தணிக்கைக் குழு அனுமதி மறுத்தது. ‘செங்கடல்‘ திரைப்படம் சென்னையில் 3 சிறப்புக் காட்சிகளில் திரையிடப்பட்டது. வினவுவின் அவதூறுகளைத் திரைப்படம் முற்றாக முறியடித்துள்ளது. அதற்காக நாங்கள் ஒரு வருடம் காத்திருக்க வேண்டியிருந்தது. எனினும் நாங்கள் வினவுவின் அவதூறுக்கு விலை கொடுக்கத்தானே நேரிட்டது. அவதூறுகளை நியாயப்படுத்த வினவு இணையத்தளத்திற்கு ‘வர்க்கப் போராட்ட‘ முழக்கமென்றால் அதுவே கீற்று இணையத்தளத்திற்கு ‘ஈழப் போராட்ட‘ முழக்கமானது. இந்த முழக்கத்தை முன் வைத்த கீற்றுவின் அருவருக்கத்தக்க அவதூற்று வாயில் விழுந்தவர்கள் எத்தனையெத்தனை பேர்! அ.மார்க்ஸ், ஷோபாசக்தி, ஆதவன் தீட்சண்யா, சுசீந்திரன், எஸ்.வி.ராஜதுரை, லெ.முருகபூபதி, அகிலன் கதிர்காமர், லீனா மணிமேகலை, பௌஸர், ரஞ்சித் ஏக்கநாயக்க, சுகுணா திவாகர், தேவதாசன், கவின்மலர், ராகவன்… என நீண்ட பட்டியலது. தலித் சமூக மேம்பாட்டு முன்னணி, சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு, புலம் பெயர்ந்த இலங்கையர்களிற்கான வலையமைப்பு (அய்.என்.எஸ்.டி), இலங்கை ஜனநாயகப் பேரவை (எஸ்.எல்.டி.எவ்) போன்றவையும் கீற்றுவின் வாயில் விழுந்தவையே. இங்கே நான் பட்டியலிட்டிருக்கும் தனிநபர்கள் விமர்சிக்கப்படக் கூடாதவர்கள் கிடையாது. இங்கே பட்டியலிடப்பட்ட அமைப்புகளின் அரசியலை ஆராய்ந்து சொல்லவும் தடையேதும் கிடையாது. இவர்கள் இலங்கை அரசின் மீது மென்போக்குக் கொண்டவர்களாகவோ அல்லது அதனது ஆதரவாளர்களாகவோ இன்னும் சொன்னால் அதனது அடிவருடிகளாகவோ இருக்கிறார்கள் எனக் கீற்றுக் கருதும் பட்சத்தில் அவர்களை அம்பலப்படுத்துவதும் தனிமைப்படுத்துவதும் கீற்றுவின் முற்றுரிமை. ஆனால் அதைக் கீற்று செய்ய வேண்டியது அரசியல் கருத்துகளாலும் ஆதாரபூர்வமான தகவல்களினாலுமே அல்லாமல் அவதூறுகளினால் அல்ல. அவதூறிற்குப் பெயர் அரசியற் போராட்டமோ, கருத்துச் சுதந்திரமோ கிடையாது. அவதூறிற்குப் பெயர் அவதூறு மட்டுமே. அவதூறுகளின் துணையுடன் எதிராளிகளைத் தனிமைப்படுத்த முயற்சிப்பதும், வெற்றி கொள்ள எண்ணுவதும் ஊடக நெறியல்ல. அது ஈனத்தனமான கோழைத்தனமாகும். ஈழப் போராட்டம் குறித்துக் கீற்றுவில் வெளியாகும் கட்டுரைகள் எவ்வித அடிப்படை அரசியல் அறிவும் வரலாற்று உணர்வும் இல்லாமல் எழுதப்படும் சொற்குப்பைகளே. மிகவும் இலகுவாகப் புலிகள் x துரோகிகள் என்ற இருமை எதிர்வுகளில் எழுதப்பட்ட மூடத்தனமான கட்டுரைகள் அவை. இலங்கை இனச் சமூகங்கள், பண்பாடு, இலங்கையின் பொருளாதார அமைப்பும் சிக்கல்களும், இலங்கையின் அரசியலைத் தீர்மானிப்பதில் பன்னாட்டு மூலதனங்களின் வகிபாகம், அந்நிய வல்லாதிக்க சக்திகளின் நேரடி மற்றும் அரூபத் தலையீடுகள், ஈழத்தின் சாதியமைப்பு, பிராந்திய வேறுபாடுகள், இந்தப் பண்பாட்டு வேறுபாடுகளிற்கும் அரசியலிற்குமான ஊடாட்டங்கள், முஸ்லீம்கள் மற்றும் மலையகத்தவர்களின் தனித்துவமான பிரச்சினைகள், தமிழ்ப் போராளி அமைப்புகளின் வலதுசாரித்தனம், ஆயுதப் போராட்ட அரசியலின் தார்மீக வீழ்ச்சி போன்ற எந்தப் பிரச்சினைகளையும் கவனத்தில் எடுக்காது வெறுமனே குறுகிய தமிழ்த் தேசிய உணர்வால் பொங்கிய தமிழ் கீற்று இணையத்தளத்தில் கட்டுரைகளாக மாற்றப்பட்டன. இந்தக் கட்டுரைகளின் அடிநாதமாக இருந்தவை வன்மத்தில் பிறந்த அவதூறுகளும் திரிப்புகளும் எளிய உணர்சிகரமான அரசியலும் மட்டுமே. ஈழப் போராட்டத்தை மையப்படுத்தி இராம நாராயணன் ஒரு திரைப்படம் எடுத்தால் எப்படியிருக்கும் என மனதைக் கல்லாக்கிக்கொண்டு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். கிராபிக்ஸில் சிங்கம் புலியெல்லாம் வருமல்லவா. அதைத்தான் எழுத்திலே கீற்று இணையத்தளம் செய்கிறது. அவ்வப்போது கிராபிக்ஸ் கூட உண்டு. ஆயுதம் ஏந்திய ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சி இன்று நேற்று உறுதி செய்யப்பட்டதல்ல. சகோதர விடுதலை இயக்கங்களைப் புலிகள் தடைசெய்து, மாற்றுக் கருத்துக் குரல்களை முளையிலேயே கிள்ளி வீசிவிட்டு, போராட்டத்தின் மொத்தக் குத்தகைக்காரர்களாகத் தங்களை நிறுவிக்கொண்டு அப்பட்டமான வலதுசாரிப் பாஸிசப் பாதையைப் புலிகள் தேர்ந்தெடுத்தபோதே ஆயுதப் போராட்டத்தின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது. “ஒரு போராட்டத்தின் வெற்றி தோல்வியைப் போராடுபவர்களின் படைபலத்தை வைத்து அளவிடுவதை விடப் போராட்டத்தின் தார்மீகப் பலத்தை வைத்து அளவிடுவதே சரியானதாக இருக்கும். ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு அரசியல் சாணக்கியத்தனங்களை விட அரசியல் அறங்களே முக்கியமானவைகளாக இருக்கும். ஒரு போராட்டம் சர்வதேச அரசுகளிடம் எவ்வளவுதான் ஆதரவு பெற்றிருந்தாலும் தனது சொந்த மக்களிடம் அது ஆதரவைப் பெறத் தவறினால் போராட்டத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும். புலிகள் பாஸிசத்தால் ஈழப் போராட்ட வரலாறைத் தோல்வி வரலாறாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்“ என்று நான் எழுதினேன் (ஈழப் போராட்டம்: எழுச்சியும் வீழ்ச்சியும்). போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் புறக்காரணிகள் எவ்வளவு முக்கியமாகயிருந்தனவோ அதைவிட முக்கியமானவை அகக் காரணிகள். இந்தத் தெளிவு இல்லாத பட்சத்தில் அல்லது அதைக் கண்டுகொள்ள மறுக்கும் பட்சத்தில் போராட்டத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைச் சரியாக மதிப்பிட்டுவிட முடியாது. அவ்வாறான தட்டையான ஆய்வுகள் கட்டுரையாளனைப் புனைவிலும் பொய்யிலும் முட்டாள்தனத்திலுமே தஞ்சமடையச் செய்யும். இப்போது புகலிடத்தில் சேரமானும் வழுதியும் ஊடகங்களில் செய்வது இதைதான். கீற்றுவில் நடந்துகொண்டிருப்பதும் அதுதான். அவர்கள் ஒருபோதுமே எதிர்பார்த்தேயிராத புலிகளின் வீழ்ச்சியால் பொறி கலங்கிப்போன அவர்களின் கைகள் விசைப் பலகையில் விழுந்த பாட்டுக்குக் குறி சுடுகின்றன. யுத்த மறுப்பைக் கோரியவர்கள், ஈழத்தில் சனநாயத்திற்காக விடாப்பிடியாகப் போரடியவர்கள், இலங்கை அரசினதும் சர்வதேச அரசுகளினதும் ஆதிக்கக் கரங்களை மட்டுமல்லாமல் புலிகளின் நெட்டூரங்களையும் எதிர்த்து நின்றவர்கள், இலக்கியப் பிரதிகளில் அதிகாரங்களிற்கு எதிரான குரலை ஒலித்தவர்கள், ஈழப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய முன்னாள் போராளிகள், மனிதவுரிமைகளிற்காகக் குரல் கொடுத்தவர்கள், தலித் விடுதலை அரசியலாளர்கள், இடதுசாரிகள், இலங்கை அரசின் பேரினவாதப் போக்கைச் சர்வதேச அளவில் பரப்புரை செய்பவர்கள், இலங்கையிலிருந்து தப்பிவந்த பத்திரிகையாளர்களை ஒன்றிணைத்து ஊடகச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் எல்லோருமே கீற்று இணையத்தளத்திற்குத் துரோகிகளாகத் தெரியும் கொடுமையை என்ன சொல்ல. நான் எனது நண்பர்களிடம் அடிக்கடி ஒன்றைச் சொல்வதுண்டு: பரம்பரைப் புலிகளைக் கூடச் சகித்துக்கொள்ளலாம், ஆனால் பஞ்சத்துக்குப் புலியானவர்களோ அருவருப்பானவர்கள். ஈழப் போராட்டத் தலைமைகள் மீது நமக்கு உறுதியான விமர்சனங்களுண்டு. ஆனால் ஈழப் போராட்டத்திற்காகத் தமிழ் மக்களும் அனைத்துப் போராளி இயக்கங்களின் அடிமட்டத் தோழர்களும் கொடுத்த விலைகள் மறக்கவொண்ணாதவை. இரண்டு தலைமுறைகள் இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டன. கணக்கின்றி உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. எஞ்சியவை ஆன்மாவால் சிதைந்திருந்தன. புலம் பெயர்ந்து வாழும் பல்லாயிரக்கணக்கான ஈழத்து இளைஞர்களின் முதன்மை உளவியல் பிரச்சினை துர்க் கனவுகள். யுத்தம் இஸ்லாமியர்களையும் சிங்களவர்களையும் கூட அழித்துப்போட்டது. ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய தமிழகத்தின் ‘திராவிடர் கழகம்‘, ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்‘ போன்ற அமைப்புகள் கூட இழப்புகளைச் சந்திக்க நேரிட்டன. அமைப்புகள் சாராத உதிரியான தமிழகத்துத் தோழர்களும் ஈழப் போராட்டத்திற்காகத் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள். ஈழப் போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் சுய அர்ப்பணிப்புகளும் வீரஞ் செறிந்த தியாகங்களும் அரசியல் கருத்து வேறுபாடுகளிற்கு அப்பாலும் எக்காலத்திலும் நமது மதிப்பிற்குரியவை. ஆனால் எந்தவொரு அரசியல் பொறுப்புணர்வோ அறமோ அற்று ஈழம் கொப்பளித்த இரத்தத்தை நக்கிச் சுவை காண்பவர்களும், ஈழத்தின் இரத்தமும் சதையுமான வலிகளைத் தேர்தல் அரசியலில் தங்களது வாக்குகளாக மாற்றிக்கொள்ள எத்தனிப்பவர்களும், ஈழத்தின் ஒவ்வொரு சாவையும் தங்களது இணையத்தின் ‘ஹிட்ஸு‘களாக மாற்றிக்கொள்ளத் துடிப்பவர்களும், அரசியல் அர்ப்பணிப்புகளின் பெயரால் அல்லாமல் வெறுக்கத்தக்க அவதூறுகளின் பெயரால் தங்களை நிறுவிக்கொள்ள முயல்பவர்களும் தவித்த முயல் அடிப்பவர்கள். இலங்கை அரசிற்கு எதிராக இவர்கள் எழுப்பும் குரல்கள் ஈழ மக்களின் மீதான நேசத்திலிருந்து பிறப்பனவல்ல. ஈழத்து மக்களிற்குப் புலிகளால் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் துரோகத்தையும் மறந்தும் உச்சரிக்க மறுக்கும் இந்தக் கேடுகெட்ட சந்தர்ப்பவாதிகளது அக்கறை வஞ்சிக்கப்பட்ட மக்களைக் குறித்ததல்ல. ஈழ மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆக்கபூர்வமாகச் சிறு கருத்தைக் கூடக் கிள்ளிப் போடமல் அவதூறுகளை மட்டுமே அள்ளிச் சொரிந்து, எரியும் ஈழத்தவர்களின் உடலங்களின் வெளிச்சத்தில் தங்களை அடையாளம் போட்டுக் காட்ட முயற்சிக்கும் இவர்கள் வெறுமனே பஞ்சத்துக்குப் புலியானவர்கள். கீற்று இணையத்தளம் அந்த வகையினம். பிரதிகளிற்கு: கருப்புப் பிரதிகள் B55, Pappu masthan Darga, Lloyds Road, Chennai 600 005 பேச: 00 91 944427 2500 Rating: 0.0/10 (0 votes cast) Rating: +7 (from 9 votes) 1 comment to பஞ்சத்துக்குப் புலி M.fauzer August 12th, 2011 at 00:50 சோபாசக்தி ‍சளையாத உங்களது எழுத்து, அரசியல் போராட்டத்திற்கு எமது ஆதரவு என்றும் உண்டு, அது சரி இலங்கை பேரினவாத அரசால் ஒடுக்கப்பட்ட தேசிய சிறுபான்மை இன மக்களின் உரிமைப் போராட்டத்தை பாசிச வழியில் முன்னெடுத்து, ஈற்றில் மக்களை கொன்றும், கொல்லக்கொடுத்தும் சரணாகதி அடைந்து தோல்வியுற்ற புலிகளின் அரசியல் பற்றி இவர்களால் சுயவிமர்சனமாவது செய்ய முடியவில்லையே , மற்றவர்கள் மீது அவதூறு செய்வதற்கு முன்பு. ஈழ போராட்ட அரசியலை அறிந்து கொள்ள,ஈழத்தின் மாற்று அரசியல் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளோர் யாவரும் சோபாசக்தியின் எழுத்துக்களை ஆழமாக படிப்பது அவசியம். Rating: 0.0/5 (0 votes cast) Rating: -2 (from 2 votes) Leave a Reply Name (required) Mail (will not be published) (required) Website You can use these HTML tags புதியவை பஞ்சத்துக்குப் புலி வல்லினம் பதில்கள் - 3 வல்லினம் பதில்கள் - 2 நெருப்புத் துளி! பகை மறப்பு என்பது சிங்கள மக்களுடன்தானே தவிர போர்க் குற்றவாளிகளுடன் அல்ல! வல்லினம் கேள்வி - பதில் ரூபம் அக்கா அக்கா என்றாய்… அமெரிக்காக்காரன் விண்ணன்தான்! அவதூறுகளிலிருந்து தண்டனையை நோக்கி! (தூற்று.கொம் - பகுதி 9) சக பயணிகள் Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது lm தமிழ்நிருபர்.காம் o யாழ்தேவி அ - நிச்சாமம் அ அTamil Solidarity அகதி அணங்கு-பெண்ணிய வெளி ஊடறு எதிர்- ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம் கரித்துண்டு கீற்று ச ஸ்மைல் பக்கம்…லிவிங் ஸ்மைல் வித்யா சோசலிச சமத்துவக் கட்சி டிசே தமிழன் தமிழ் அரங்கம் தலித் முரசு தூ தூமை நூலகம் ப உலகின் அழகிய முதல் பெண் புது விசை பெட்டைக்குப் பட்டவை மிதக்கும் வெளி முரண்வெளி மொழியும் நிலமும் வல்லினம் விக்கிப்பீடியா ஷ LIBERATION.FR ஸ் LE MONDE.FR Copyright © 2011 ஷோபாசக்தி - All Rights Reserved ®*nicj · WP Themes · SEO WP Themes Rss Feed Tweeter button Facebook button Youtube button Enter your email address: Delivered by FeedBurner


shobasakthiபஞ்சத்துக்குப் புலி Print this Page ‘கீற்று‘ இணையத்தளம் தொடர்ச்சியாக நடத்திவரும் அவதூறுப் பரப்புரைகளுக்கு எதிரான விமர்சனத் தொகுப்பு நூல். ஒன்பது விரிவான கட்டுரைகளுடனும் கொற்றவையின் ‘மார்க்சிய முத்திரையும், இணைய அவதூறுகளும், பெண்ணியச் சிந்தனையும்‘ கட்டுரை உள்ளிட்டு நான்கு பின்னிணைப்புகளுடனும், ஆதவன் தீட்சண்யாவின் பின்னட்டைக் கவிதையுடனும் வெளியாகியிருக்கிறது. பக்கங்கள்: 160. விலை: இந்தியா - ரூ 80. அய்ரோப்பா - 10 Euros. இலங்கை - இலவசம். நூலிலிருந்து: ‘வாய்ச்சொல் தலைச்சுமை‘ என்று கிராமத்து எளிய மனிதர்கள் சொல்வதை நாம் கேட்டிருப்போம். ஒருவர் தனது சொற்களின் மீது எவ்வளவு கவனமாகவும் பொறுப்பாகவுமிருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் வெள்ளாந்தி மனிதர்களின் சொல்லாடலது. ஆனால் அவதூறாளர்களிற்கு சொற்கள் என்பது தலைச் சுமையன்று, சொற்கள் அவர்களுக்கு வெறுமனே தலையிலிருந்து உதிர்த்துவிடும் ரோமங்களே. இந்த ரோமங்களின் சேகரிப்புக் கிடங்குதான் இன்றைய ‘கீற்று‘ இணையத்தளம். அவதூறுகள், சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்திற்கும் முன்னேறிச் செல்லும் விவாத நெறிகளுக்குமான பெரும் தடைக் கற்கள். அவதூறுகள், சனநாயக விழுமியத்தின் கண்களில் விழுந்த குறுணிகள். இன்றைய இணையச் சூழல் அறிவுத் தேடல்களுள்ளவர்களிற்கு எவ்வளவு நல்வாய்ப்போ அதேபோன்று கெடுவாய்ப்பாக அது அவதூறாளர்களிற்கும் வாய்ப்பாகிப் போனது. தமிழ்ச் சூழலில் ‘நிதர்சனம்‘, ‘தேசம் நெட்‘ போன்ற வலதுசாரி வம்பளப்பு இணையங்களும் ‘தமிழரங்கம்‘ போன்ற இரண்டுங்கெட்டான் இணையங்களுமே அவதூறுக் கலாசாரத்தின் முன்னோடிகள் எனினும் ஓர் இடது அரசியல் (ம.க.இ.க) இணையத்தளமாக அறியப்படும் ‘வினவு‘ இணையத்தளமே அவதூறுக் கலாசாரத்தைப் புரட்சிகரச் சாயம் ஏற்றித் தூக்கி நிறுத்தியது. ஆதாரமற்ற அரசியல் அவதூறுகளைச் சொரிந்த அந்த இணையம் பின்னூட்டங்களிலும் அவதூறுத் தூள் கிளப்பிற்று. அநாமதேயப் பின்னூட்ட மன்னர்களின் அவதூறு எழுத்துகளால் வினவு சீரழிந்தது. வினவு இணையத்தளத்தின் நிரந்தரப் பின்னூட்டக்காரர்களாக ஏழரை, அர டிக்கட்டு, கலகம், கேள்விக்குறி போன்ற மூகமுடிகள் வலம் வந்தார்கள். தலைமறைவுப் போராட்டத்திலிருந்து தலைமறைவு அவதூறுகளிற்குப் புரட்சியாளர்கள் பாதை மாறியது வரலாற்றுக் கொடுமையன்றி வேறென்ன! மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழகத்து அரசியல் சூழலில் தவிர்க்கவே முடியாத தரப்பு. அவர்களது நீண்ட அரசியல் வரலாற்றில் கருத்து மாறுபாடு உள்ளவர்கள் கூட அவர்களது எண்ணற்ற களப் போராட்டங்ளை மதிக்கவே செய்வார்கள். ம.க.இ.கவினரின் அரசியல் முன்னோக்கில் உடன்படாதவர்கள் கூட அவர்களது உழைப்பைக் கனம் செய்வார்கள். வினவு இணையத்தளமோ ம.க.இ.கவின் மானத்தை வாங்கியது. பாட்டாளி வர்க்கத்திற்கு ‘கற்று‘க் கொடுப்பதற்கு அவதூறுகளும் ஆபாசமும் வினவுவிற்குத் தேவைப்பட்டன. வினவுவிற்கு எதிர்வினையாக நான் வெவ்வேறு மூன்று கட்டுரைகளை எனது வலைப்பதிவிலே எழுதியிருக்கிறேன். ஓர் அவதூறை உண்மையென நிரூபணம் செய்வது அவதூறாளனிற்கு எவ்வாறு சாத்தியமில்லையோ அவ்வாறே அவதூறால் பாதிக்கப்பட்டவனுக்கும் தன்மேல் ஏவிவிடப்பட்ட அவதூறைப் பொய்யென நிரூபணம் செய்யச் சாத்தியங்கள் குறைவே. அவதூறுகளிள் அடிப்படைப் பலமே இதுதான். ஏனெனில் அவதூறுகள் காட்டிலே மூண்ட தீயல்ல. அவை காற்றிலே நசுக்கிவிடப்பட்ட குசு. காலம் அவதூறாளனைத் தோல்வியுறச் செய்யும். ஆனால் அதற்குள் அவதூறுக்குள்ளானவன் தனது விலையைச் செலுத்தியிருப்பான். அவ்வாறான ஒரு நிகழ்வுதான் வினவு இணையத்தளம் ‘செங்கடல்‘ திரைப்படம் குறித்துக் கட்டியெழுப்பிய அவதூறு. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, வினவு இணையத்தளம் “செங்கடல் திரைப்படம் தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படுவதற்குப் புலிகளே காரணம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது“ எனத் தெரிவித்தது. வினவு இணையத்தளம் உருவாக்கிய இந்த வதந்தி அடுத்த ஒரு வருடத்திற்கு திரைப்படத்தின் உருவாக்க வேலைகளில் சிறிதளவாது பாதிப்பை உண்டாக்காமலில்லை. ஊடகத்தளத்திலும் வினவுவின் இந்த வதந்தி குறிப்பிடத்தக்க பாதிப்பைச் செய்தது. ‘செங்கடல்‘ முடிவடைந்து மாநிலத் தணிக்கைக் குழுவால் முடக்கப்பட்டது. இந்திய அரசையும் இலங்கை அரசையும் கடுமையாக விமர்சிப்பதால் தணிக்கைச் சான்றிதழ் வழங்க முடியாது என மாநிலத் தணிக்கைக் குழு அனுமதி மறுத்தது. ‘செங்கடல்‘ திரைப்படம் சென்னையில் 3 சிறப்புக் காட்சிகளில் திரையிடப்பட்டது. வினவுவின் அவதூறுகளைத் திரைப்படம் முற்றாக முறியடித்துள்ளது. அதற்காக நாங்கள் ஒரு வருடம் காத்திருக்க வேண்டியிருந்தது. எனினும் நாங்கள் வினவுவின் அவதூறுக்கு விலை கொடுக்கத்தானே நேரிட்டது. அவதூறுகளை நியாயப்படுத்த வினவு இணையத்தளத்திற்கு ‘வர்க்கப் போராட்ட‘ முழக்கமென்றால் அதுவே கீற்று இணையத்தளத்திற்கு ‘ஈழப் போராட்ட‘ முழக்கமானது. இந்த முழக்கத்தை முன் வைத்த கீற்றுவின் அருவருக்கத்தக்க அவதூற்று வாயில் விழுந்தவர்கள் எத்தனையெத்தனை பேர்! அ.மார்க்ஸ், ஷோபாசக்தி, ஆதவன் தீட்சண்யா, சுசீந்திரன், எஸ்.வி.ராஜதுரை, லெ.முருகபூபதி, அகிலன் கதிர்காமர், லீனா மணிமேகலை, பௌஸர், ரஞ்சித் ஏக்கநாயக்க, சுகுணா திவாகர், தேவதாசன், கவின்மலர், ராகவன்… என நீண்ட பட்டியலது. தலித் சமூக மேம்பாட்டு முன்னணி, சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு, புலம் பெயர்ந்த இலங்கையர்களிற்கான வலையமைப்பு (அய்.என்.எஸ்.டி), இலங்கை ஜனநாயகப் பேரவை (எஸ்.எல்.டி.எவ்) போன்றவையும் கீற்றுவின் வாயில் விழுந்தவையே. இங்கே நான் பட்டியலிட்டிருக்கும் தனிநபர்கள் விமர்சிக்கப்படக் கூடாதவர்கள் கிடையாது. இங்கே பட்டியலிடப்பட்ட அமைப்புகளின் அரசியலை ஆராய்ந்து சொல்லவும் தடையேதும் கிடையாது. இவர்கள் இலங்கை அரசின் மீது மென்போக்குக் கொண்டவர்களாகவோ அல்லது அதனது ஆதரவாளர்களாகவோ இன்னும் சொன்னால் அதனது அடிவருடிகளாகவோ இருக்கிறார்கள் எனக் கீற்றுக் கருதும் பட்சத்தில் அவர்களை அம்பலப்படுத்துவதும் தனிமைப்படுத்துவதும் கீற்றுவின் முற்றுரிமை. ஆனால் அதைக் கீற்று செய்ய வேண்டியது அரசியல் கருத்துகளாலும் ஆதாரபூர்வமான தகவல்களினாலுமே அல்லாமல் அவதூறுகளினால் அல்ல. அவதூறிற்குப் பெயர் அரசியற் போராட்டமோ, கருத்துச் சுதந்திரமோ கிடையாது. அவதூறிற்குப் பெயர் அவதூறு மட்டுமே. அவதூறுகளின் துணையுடன் எதிராளிகளைத் தனிமைப்படுத்த முயற்சிப்பதும், வெற்றி கொள்ள எண்ணுவதும் ஊடக நெறியல்ல. அது ஈனத்தனமான கோழைத்தனமாகும். ஈழப் போராட்டம் குறித்துக் கீற்றுவில் வெளியாகும் கட்டுரைகள் எவ்வித அடிப்படை அரசியல் அறிவும் வரலாற்று உணர்வும் இல்லாமல் எழுதப்படும் சொற்குப்பைகளே. மிகவும் இலகுவாகப் புலிகள் x துரோகிகள் என்ற இருமை எதிர்வுகளில் எழுதப்பட்ட மூடத்தனமான கட்டுரைகள் அவை. இலங்கை இனச் சமூகங்கள், பண்பாடு, இலங்கையின் பொருளாதார அமைப்பும் சிக்கல்களும், இலங்கையின் அரசியலைத் தீர்மானிப்பதில் பன்னாட்டு மூலதனங்களின் வகிபாகம், அந்நிய வல்லாதிக்க சக்திகளின் நேரடி மற்றும் அரூபத் தலையீடுகள், ஈழத்தின் சாதியமைப்பு, பிராந்திய வேறுபாடுகள், இந்தப் பண்பாட்டு வேறுபாடுகளிற்கும் அரசியலிற்குமான ஊடாட்டங்கள், முஸ்லீம்கள் மற்றும் மலையகத்தவர்களின் தனித்துவமான பிரச்சினைகள், தமிழ்ப் போராளி அமைப்புகளின் வலதுசாரித்தனம், ஆயுதப் போராட்ட அரசியலின் தார்மீக வீழ்ச்சி போன்ற எந்தப் பிரச்சினைகளையும் கவனத்தில் எடுக்காது வெறுமனே குறுகிய தமிழ்த் தேசிய உணர்வால் பொங்கிய தமிழ் கீற்று இணையத்தளத்தில் கட்டுரைகளாக மாற்றப்பட்டன. இந்தக் கட்டுரைகளின் அடிநாதமாக இருந்தவை வன்மத்தில் பிறந்த அவதூறுகளும் திரிப்புகளும் எளிய உணர்சிகரமான அரசியலும் மட்டுமே. ஈழப் போராட்டத்தை மையப்படுத்தி இராம நாராயணன் ஒரு திரைப்படம் எடுத்தால் எப்படியிருக்கும் என மனதைக் கல்லாக்கிக்கொண்டு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். கிராபிக்ஸில் சிங்கம் புலியெல்லாம் வருமல்லவா. அதைத்தான் எழுத்திலே கீற்று இணையத்தளம் செய்கிறது. அவ்வப்போது கிராபிக்ஸ் கூட உண்டு. ஆயுதம் ஏந்திய ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சி இன்று நேற்று உறுதி செய்யப்பட்டதல்ல. சகோதர விடுதலை இயக்கங்களைப் புலிகள் தடைசெய்து, மாற்றுக் கருத்துக் குரல்களை முளையிலேயே கிள்ளி வீசிவிட்டு, போராட்டத்தின் மொத்தக் குத்தகைக்காரர்களாகத் தங்களை நிறுவிக்கொண்டு அப்பட்டமான வலதுசாரிப் பாஸிசப் பாதையைப் புலிகள் தேர்ந்தெடுத்தபோதே ஆயுதப் போராட்டத்தின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது. “ஒரு போராட்டத்தின் வெற்றி தோல்வியைப் போராடுபவர்களின் படைபலத்தை வைத்து அளவிடுவதை விடப் போராட்டத்தின் தார்மீகப் பலத்தை வைத்து அளவிடுவதே சரியானதாக இருக்கும். ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு அரசியல் சாணக்கியத்தனங்களை விட அரசியல் அறங்களே முக்கியமானவைகளாக இருக்கும். ஒரு போராட்டம் சர்வதேச அரசுகளிடம் எவ்வளவுதான் ஆதரவு பெற்றிருந்தாலும் தனது சொந்த மக்களிடம் அது ஆதரவைப் பெறத் தவறினால் போராட்டத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும். புலிகள் பாஸிசத்தால் ஈழப் போராட்ட வரலாறைத் தோல்வி வரலாறாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்“ என்று நான் எழுதினேன் (ஈழப் போராட்டம்: எழுச்சியும் வீழ்ச்சியும்). போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் புறக்காரணிகள் எவ்வளவு முக்கியமாகயிருந்தனவோ அதைவிட முக்கியமானவை அகக் காரணிகள். இந்தத் தெளிவு இல்லாத பட்சத்தில் அல்லது அதைக் கண்டுகொள்ள மறுக்கும் பட்சத்தில் போராட்டத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைச் சரியாக மதிப்பிட்டுவிட முடியாது. அவ்வாறான தட்டையான ஆய்வுகள் கட்டுரையாளனைப் புனைவிலும் பொய்யிலும் முட்டாள்தனத்திலுமே தஞ்சமடையச் செய்யும். இப்போது புகலிடத்தில் சேரமானும் வழுதியும் ஊடகங்களில் செய்வது இதைதான். கீற்றுவில் நடந்துகொண்டிருப்பதும் அதுதான். அவர்கள் ஒருபோதுமே எதிர்பார்த்தேயிராத புலிகளின் வீழ்ச்சியால் பொறி கலங்கிப்போன அவர்களின் கைகள் விசைப் பலகையில் விழுந்த பாட்டுக்குக் குறி சுடுகின்றன. யுத்த மறுப்பைக் கோரியவர்கள், ஈழத்தில் சனநாயத்திற்காக விடாப்பிடியாகப் போரடியவர்கள், இலங்கை அரசினதும் சர்வதேச அரசுகளினதும் ஆதிக்கக் கரங்களை மட்டுமல்லாமல் புலிகளின் நெட்டூரங்களையும் எதிர்த்து நின்றவர்கள், இலக்கியப் பிரதிகளில் அதிகாரங்களிற்கு எதிரான குரலை ஒலித்தவர்கள், ஈழப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய முன்னாள் போராளிகள், மனிதவுரிமைகளிற்காகக் குரல் கொடுத்தவர்கள், தலித் விடுதலை அரசியலாளர்கள், இடதுசாரிகள், இலங்கை அரசின் பேரினவாதப் போக்கைச் சர்வதேச அளவில் பரப்புரை செய்பவர்கள், இலங்கையிலிருந்து தப்பிவந்த பத்திரிகையாளர்களை ஒன்றிணைத்து ஊடகச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் எல்லோருமே கீற்று இணையத்தளத்திற்குத் துரோகிகளாகத் தெரியும் கொடுமையை என்ன சொல்ல. நான் எனது நண்பர்களிடம் அடிக்கடி ஒன்றைச் சொல்வதுண்டு: பரம்பரைப் புலிகளைக் கூடச் சகித்துக்கொள்ளலாம், ஆனால் பஞ்சத்துக்குப் புலியானவர்களோ அருவருப்பானவர்கள். ஈழப் போராட்டத் தலைமைகள் மீது நமக்கு உறுதியான விமர்சனங்களுண்டு. ஆனால் ஈழப் போராட்டத்திற்காகத் தமிழ் மக்களும் அனைத்துப் போராளி இயக்கங்களின் அடிமட்டத் தோழர்களும் கொடுத்த விலைகள் மறக்கவொண்ணாதவை. இரண்டு தலைமுறைகள் இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டன. கணக்கின்றி உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. எஞ்சியவை ஆன்மாவால் சிதைந்திருந்தன. புலம் பெயர்ந்து வாழும் பல்லாயிரக்கணக்கான ஈழத்து இளைஞர்களின் முதன்மை உளவியல் பிரச்சினை துர்க் கனவுகள். யுத்தம் இஸ்லாமியர்களையும் சிங்களவர்களையும் கூட அழித்துப்போட்டது. ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய தமிழகத்தின் ‘திராவிடர் கழகம்‘, ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்‘ போன்ற அமைப்புகள் கூட இழப்புகளைச் சந்திக்க நேரிட்டன. அமைப்புகள் சாராத உதிரியான தமிழகத்துத் தோழர்களும் ஈழப் போராட்டத்திற்காகத் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள். ஈழப் போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் சுய அர்ப்பணிப்புகளும் வீரஞ் செறிந்த தியாகங்களும் அரசியல் கருத்து வேறுபாடுகளிற்கு அப்பாலும் எக்காலத்திலும் நமது மதிப்பிற்குரியவை. ஆனால் எந்தவொரு அரசியல் பொறுப்புணர்வோ அறமோ அற்று ஈழம் கொப்பளித்த இரத்தத்தை நக்கிச் சுவை காண்பவர்களும், ஈழத்தின் இரத்தமும் சதையுமான வலிகளைத் தேர்தல் அரசியலில் தங்களது வாக்குகளாக மாற்றிக்கொள்ள எத்தனிப்பவர்களும், ஈழத்தின் ஒவ்வொரு சாவையும் தங்களது இணையத்தின் ‘ஹிட்ஸு‘களாக மாற்றிக்கொள்ளத் துடிப்பவர்களும், அரசியல் அர்ப்பணிப்புகளின் பெயரால் அல்லாமல் வெறுக்கத்தக்க அவதூறுகளின் பெயரால் தங்களை நிறுவிக்கொள்ள முயல்பவர்களும் தவித்த முயல் அடிப்பவர்கள். இலங்கை அரசிற்கு எதிராக இவர்கள் எழுப்பும் குரல்கள் ஈழ மக்களின் மீதான நேசத்திலிருந்து பிறப்பனவல்ல. ஈழத்து மக்களிற்குப் புலிகளால் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் துரோகத்தையும் மறந்தும் உச்சரிக்க மறுக்கும் இந்தக் கேடுகெட்ட சந்தர்ப்பவாதிகளது அக்கறை வஞ்சிக்கப்பட்ட மக்களைக் குறித்ததல்ல. ஈழ மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆக்கபூர்வமாகச் சிறு கருத்தைக் கூடக் கிள்ளிப் போடமல் அவதூறுகளை மட்டுமே அள்ளிச் சொரிந்து, எரியும் ஈழத்தவர்களின் உடலங்களின் வெளிச்சத்தில் தங்களை அடையாளம் போட்டுக் காட்ட முயற்சிக்கும் இவர்கள் வெறுமனே பஞ்சத்துக்குப் புலியானவர்கள். கீற்று இணையத்தளம் அந்த வகையினம். பிரதிகளிற்கு: கருப்புப் பிரதிகள் B55, Pappu masthan Darga, Lloyds Road, Chennai 600 005 பேச: 00 91 944427 2500 Rating: 0.0/10 (0 votes cast) Rating: +7 (from 9 votes) 1 comment to பஞ்சத்துக்குப் புலி M.fauzer August 12th, 2011 at 00:50 சோபாசக்தி ‍சளையாத உங்களது எழுத்து, அரசியல் போராட்டத்திற்கு எமது ஆதரவு என்றும் உண்டு, அது சரி இலங்கை பேரினவாத அரசால் ஒடுக்கப்பட்ட தேசிய சிறுபான்மை இன மக்களின் உரிமைப் போராட்டத்தை பாசிச வழியில் முன்னெடுத்து, ஈற்றில் மக்களை கொன்றும், கொல்லக்கொடுத்தும் சரணாகதி அடைந்து தோல்வியுற்ற புலிகளின் அரசியல் பற்றி இவர்களால் சுயவிமர்சனமாவது செய்ய முடியவில்லையே , மற்றவர்கள் மீது அவதூறு செய்வதற்கு முன்பு. ஈழ போராட்ட அரசியலை அறிந்து கொள்ள,ஈழத்தின் மாற்று அரசியல் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளோர் யாவரும் சோபாசக்தியின் எழுத்துக்களை ஆழமாக படிப்பது அவசியம். Rating: 0.0/5 (0 votes cast) Rating: -2 (from 2 votes) Leave a Reply Name (required) Mail (will not be published) (required) Website You can use these HTML tags புதியவை பஞ்சத்துக்குப் புலி வல்லினம் பதில்கள் - 3 வல்லினம் பதில்கள் - 2 நெருப்புத் துளி! பகை மறப்பு என்பது சிங்கள மக்களுடன்தானே தவிர போர்க் குற்றவாளிகளுடன் அல்ல! வல்லினம் கேள்வி - பதில் ரூபம் அக்கா அக்கா என்றாய்… அமெரிக்காக்காரன் விண்ணன்தான்! அவதூறுகளிலிருந்து தண்டனையை நோக்கி! (தூற்று.கொம் - பகுதி 9) சக பயணிகள் Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது lm தமிழ்நிருபர்.காம் o யாழ்தேவி அ - நிச்சாமம் அ அTamil Solidarity அகதி அணங்கு-பெண்ணிய வெளி ஊடறு எதிர்- ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம் கரித்துண்டு கீற்று ச ஸ்மைல் பக்கம்…லிவிங் ஸ்மைல் வித்யா சோசலிச சமத்துவக் கட்சி டிசே தமிழன் தமிழ் அரங்கம் தலித் முரசு தூ தூமை நூலகம் ப உலகின் அழகிய முதல் பெண் புது விசை பெட்டைக்குப் பட்டவை மிதக்கும் வெளி முரண்வெளி மொழியும் நிலமும் வல்லினம் விக்கிப்பீடியா ஷ LIBERATION.FR ஸ் LE MONDE.FR Copyright © 2011 ஷோபாசக்தி - All Rights Reserved ®*nicj · WP Themes · SEO WP Themes Rss Feed Tweeter button Facebook button Youtube button Enter your email address: Delivered by FeedBurner


சென்னையில் "தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்" 5:39 PM sara No comments திரு யோகரட்ணம் அவர்களின் தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் நூல் விமர்சனக் கூட்டம் இடம்: இக்சா மையம், பாந்தியன் சாலை, கன்னிமார நூலகம் எதிரில், எழும்பூர், சென்னை. காலம்: 17-08-2011 புதன் மாலை 6.00க்கு பங்கேற்ப்போர்: எழுத்தாளர் பாமா பத்மினிபாலமுருகன் அ.மார்க்ஸ் ராஜன்குறை தேவதாசன் (பிரான்ஸ்) நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : கருப்பு பிரதிகள் Posted in: அறிவித்தல்கள் Older Post Home 0 comments: Post a Comment RSS FeedSubscribe to our RSS Feed Follow Us on Youtube!Follow Us on Youtube Be Our Fan!Be Our Friend on Facebook Follow our Vimeo channe!Follow our Vimeo channel Share Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More காணொளி பகுப்பு பிரிவுகள் காணொளி பெரியார் “ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.." -ஈ.வெ.ரா.பெரியார் பிரிவுகள் 1வது பறை (21) 2வது பறை (14) 3வது பறை (13) 4வது பறை (11) அம்பேத்கார் (1) அறிவித்தல்கள் (4) ஒலி (1) கட்டுரை (40) கவிதை (15) சமுத்திரன் (1) சரவணன் (16) சிறுகதை (3) டானியல் (1) தலித்தியம் (17) நினைவு (1) நூல் வடிவில் (4) நேர்காணல் (8) பெண்ணியம் (10) பெரியார் (8) இடுகைகள் ▼ 2011 (4) ▼ August (3) சென்னையில் "தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்கள... "கிறிஸ்தவத்தில் சாதியம்" தீபம் விவாத காணொளி உண்மை அறியும் குழுவின் அதிர்ச்சித் தகவல்கள் ► July (1) ► 2010 (14) ► 2009 (13) ► 2008 (60) வருகையாளர்கள் Free counter and web stats இணைப்புகசென்னையில் "தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்" 5:39 PM sara No comments திரு யோகரட்ணம் அவர்களின் தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் நூல் விமர்சனக் கூட்டம் இடம்: இக்சா மையம், பாந்தியன் சாலை, கன்னிமார நூலகம் எதிரில், எழும்பூர், சென்னை. காலம்: 17-08-2011 புதன் மாலை 6.00க்கு பங்கேற்ப்போர்: எழுத்தாளர் பாமா பத்மினிபாலமுருகன் அ.மார்க்ஸ் ராஜன்குறை தேவதாசன் (பிரான்ஸ்) நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : கருப்பு பிரதிகள் Posted in: அறிவித்தல்கள் Older Post Home 0 comments: Post a Comment RSS FeedSubscribe to our RSS Feed Follow Us on Youtube!Follow Us on Youtube Be Our Fan!Be Our Friend on Facebook Follow our Vimeo channe!Follow our Vimeo channel Share Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More காணொளி பகுப்பு பிரிவுகள் காணொளி பெரியார் “ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.." -ஈ.வெ.ரா.பெரியார் பிரிவுகள் 1வது பறை (21) 2வது பறை (14) 3வது பறை (13) 4வது பறை (11) அம்பேத்கார் (1) அறிவித்தல்கள் (4) ஒலி (1) கட்டுரை (40) கவிதை (15) சமுத்திரன் (1) சரவணன் (16) சிறுகதை (3) டானியல் (1) தலித்தியம் (17) நினைவு (1) நூல் வடிவில் (4) நேர்காணல் (8) பெண்ணியம் (10) பெரியார் (8) இடுகைகள் ▼ 2011 (4) ▼ August (3) சென்னையில் "தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்கள... "கிறிஸ்தவத்தில் சாதியம்" தீபம் விவாத காணொளி உண்மை அறியும் குழுவின் அதிர்ச்சித் தகவல்கள் ► July (1) ► 2010 (14) ► 2009 (13) ► 2008 (60) வருகையாளர்கள் Free counter and web stats இணைப்புக


http://www.dalittiyam.com/2011/08/blog-post.html


பிறத்தியாள்- இரண்டு வருடம் கடந்து -கற்சுறா- கருப்புப் பிரதிகள் வெளியீடாக வந்திருக்கும் பானுபாரதியின் பிறத்தியாள் கவிதைத் தொகுப்பு. தோழன் விமலேஸ்வரனை நினைவுகூர்ந்து வெளியிடப்பட்ட தொகுப்பு என்பதில் மிக இறுக்கமான வேதனையுடன் மெல்ல பக்கங்களை விரிக்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு நாட்களையும் ஒவ்வொரு நண்பர்களது இழப்பினூடாக தாண்டிக்கொண்டிருந்த தருணங்கள். எந்தவொரு பகலிலும் எந்தவொரு இருளிலும் ஒரு தோழனை ஒரு தோழியை இழந்துகொண்டிருந்தோம். வரலாறு ஈழம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 1980கள் மிகவும் நெருக்குவாரம் நிறைந்த நாட்கள். எங்களில் பலர் சேர்த்துவைத்த அத்தனை தடையங்களும் ஏதோ ஒரு வழியில் காணாமலேயே போய்க் கொண்டிருந்தன. மனங்களில் பதிவாகிய நினைவுகளைத் தவிர இன்று பெரும்பாலும் தடையங்கள் அத்தனையும் அழிந்துதான் போய்விட்டன. இத்தனை காலம் தாண்டி விமலேஸ்வரனை ஒரு கணத்திலேனும் நினைத்துக் கொள்ள வைத்திருக்கிறது இந்தக் கவிதைத் தொகுப்பு. இங்கும் பானுபாரதி அங்கொன்றும் இங்கொன்றுமாக 1980களிலிருந்து எழுதிய கவிதைகள் அவள் தமயந்திக்கு எழுதிய கடிதங்கள் என்று பரவியிருக்கும் இந்தப் பிறத்தியாள், கவிதைகள் குறித்துப் பேசுவதை விட நாம் கடந்து வந்த காலங்களைப் பேசவைப்பது என்பதில் கணிசமான அளவு முக்கியம் பெறுகிறது. இந்தத் தொகுப்பிற்கூடாக நோக்கும் போது பானுபாரதி அவர்களை கவிஞர் என்று என்னால் சொல்ல முடியாது என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். யுத்தகால வாழ்வில் எழுத்துக்களைப் பாதுகாத்தல் என்பதும், அதுவும் ஈழத்தில் எழுத்துக்களைப் பாதுகாத்தல் என்பதும் ஒன்றல்ல. முழுக்க முழுக்க விடுதலை இயக்கங்களது சர்வாதிகாரத்தில் இருந்து தப்பித்தல் என்பதே வாழ்வாகியிருக்கும் தருணத்தில் எழுத்துக்காக தோழர்கள் சாகடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில் ஒரு சிறிய கவிதையை பாதுகாத்தல் என்பது தற்கொலைக்குச் சமனானது. ஆக ஒரு எழுத்தாளனால் தனது எழுத்துக்களை உரிய முறையில் பாதுகாக்க முடியாதுதான் போகும். ஆனால் பானுபாரதியோ ஒரு எழுத்தாளர் என்பதைவிடவும் சமூகச் செயற்பாட்டளியாகவும் போராளியாகவும் இருந்த தருணங்களில் கவிதையைப் பாதுகாத்தல் என்பது அவரது இரண்டாந்தர வேலையாகவே இருந்திருகிறது. அப்போது எழுதப்பட்டவைகள் கவிதைகள் என்பதை விடவும் முக்கியமாக தனக்கும் மக்களுக்கும் இடையேயான கருத்துப்பரிமாற்றமாகவே இருந்திருக்கிறது. ஆனால் நமக்கிடையே வாழும் பல ஈழத்துக் கவிஞர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் தமது கவிதைகளைப் பாதுகாப்பதையே அந்த யுத்தகாலத்திலும் சரி இன்றுகடைசியாக நடந்த கோரச்சண்டையிலும் சரி முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார்கள். அதனால் தான் பானுபாரதி அவர்களை ஈழத்துக் கவிஞர் என்ற குறுகிய அரியண்டத்தனமான சொல்லால் அழைத்து குறுக்கிவிடமுடியவில்லை. பெண்களின் உடலும், மொழியும், அரசியல் அபிலாசைகளும், குழந்தைகளும், கனவுகளும் பெண்களுக்கே சொந்தமில்லாத ஒரு போர்க் காலச்சூழலில் கவிதைகள் எழுதுவதற்கும் எழுதிய ஒரு துண்டுக்கவிதையையும் புலிகளிடமிருந்தும், அரசிடமிருந்தும், ஆண்களிடமிருந்தும், இன்னும் கவிதைத் திருடர்களிடமிருந்தும் மறைத்து பாதுகாக்க எவ்வளவு தூரம் போராட வேண்டியிருந்தது என்ற உண்மையை இந்தத் தொகுப்பு போட்டுடைக்கின்றது. என்று ஜீவமுரளி எழுதியதில் அவ்வளவு உண்மையிருக்கிறது. ஈழத்துக் கவிதைச்சூழல் அவ்வளவு அசிங்கமானதாய்த்தான் இருக்கிறது. சிவரமணியையும் அவளது கவிதையையும் செல்வியையும் அவளது கவிதைகளையும் அழித்தவர்கள் நாங்கள் தானே. நாங்கள் எப்படி இன்னொரு வெளியில் கவிதைகள் குறித்து உரையாடலாம்? செல்வியை ஒருகவிதைக்காகக் கொலைசெய்து விட்டு அதன்பின் எப்படி நவீன கவிதைகள் குறித்தும் புதுக்கவிதைகள் குறித்தும் அரசியல் கவிதைகள் குறித்தும் பெண்கவிஞர்கள் குறித்தும் கவிதைகள் எழுதுவது குறித்தும் நாம் உரையாடுவது? என்ன அசிங்கம் பிடித்த வேலை? இந்த வேலைதான் பிரேமிளின் வாழ்விலும் நடந்தேறியது. “I was killed by the tamils” என்று எழுதினார் பிரேமிள். உண்மையில் உயர்ந்த கலைஞர்களை அவமதித்து மனோதத்துவக் கொலை செய்வதிலும் பட்டினி போட்டுக் கொல்வதிலும் உயர்ந்த கலையை மூச்சடக்குவதிலும் மிகிமிகத் தீவிரம் காட்டுகிறவர்கள் அரை வேக்காட்டுக் கலைஞர்களும் இலக்கியவாதிகளும்தான் என்று எழுதினார் காலசுப்பிரமணியன். இந்த அரைவேக்காட்டாளர்களுடன் கைகோர்த்து பிரேமிளைக் கொன்றவர்கள் நமது முழுவேக்காட்டாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள். பானு எழுதிய கவிதைகள் பேசுவதை விட பானுவிடம் இருந்து தொலைந்து போனகவிதைகள் பேசியவை முக்கியமானவை என்பதால், பிறத்தியாள் குறித்துப் பேசவர இவ்வளவு மனம் உறுத்த உறுத்த இந்த ஒப்பாரியை வைக்க வேண்டியிருக்கிறது. பொதுவாக ஆண்களுக்கில்லாத கதை சொல்லும் வாய்ப்பு பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. வராலற்றை செவி வழியாகவே சொல்லிவிடும் கடத்திவிடும் மனம் அவர்களுடையது. அகத்தை நேசிக்கும் மனம் மறுபுறத்தில் தன்னை அறியாமல் புறத்தை அதிகம் நேசிக்கிறது. நேசிப்பின் மீது படரும் மொழியூடாக வரலாற்றைக் தனக்குள்ளால் கடத்திவிடுகிறது. ஆனால் ஆண்களோ வரலாற்றுக்குள்ளால் தங்களைக் கடத்திவிடுவதிலே கவனம் செலுத்தவதால் உடலுடனும் அதன் மொழியுடனும் ஈர்க்கப்படாமலேயே அந்நியப்பட்டுவிடுகிறார்கள். ஈழப் போராட்டத்தில் இந்தியராணுவ வருகை என்பது மிக முக்கியமான காலகட்டம். இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இருந்த விடுதலை இயக்கங்கள் எவ்வாறு மக்களை மேய்த்தன. மந்தைகளாக்கின என்பதை பலர் மறந்த போதும் தனது கவிதைகளில் குறிப்பிட மறக்காதவர் பானு. அப்போது பாடசாலை இளைஞர்களுக்கு மலவாசலுக்குள்ளால் Fanta போலத்தலை நுளைத்து வதை செய்யும் சித்திரவதை முகாமாக இருந்தது அசோகா ஹோட்டல் என்பதை நம்மில் பலர் மறந்து விடுகிறோம். அசோகா (ஹோட்டல்) ஆட்சியின் ஆதிக்கம் கோடிப்புறத்து கிராமங்களின் குச்சொழுங்கைக்குள்ளும் நீள்கிறது இங்கு மரணத் தீர்ப்பெழுத குறைந்த பட்ச சமுசயங்களே காணுமாயுள்ளது. என்று எழுதுகிறார் பானு. எப்டி கந்தன் கருணையையும் துணுக்காயையும் விசுவமடுவையும் மறக்க முடியாதோ அதேபோல் நாம் மறக்க முடியாதது அசோகா ஹோட்டல். இந்த இந்திய இராணுவக் காலங்களில் ஈழத்துச் சூழலும் அதற்குள் வாழ்ந்த ஈழத்துப் பெண்களது நிலையையும் விமலுக்கு எழுதிய கடிதங்கள் பேசுகின்றன. 1. “மரண பயத்திடமிருந்து தலையை மறைப்பதை விட ஒரு துண்டுக் கவிதையை மறைப்பதே பெரும்பாடாய் இருக்கிறது.” 2. “ஒரு கவிதையையோ காகிதத்தையோ அல்லதொரு சிறு குறிப்பையோ பெண்ணின் மர்மப் பிரதேசங்களென(?) சுட்டப்படும் இடங்களில் கூட மறைத்து வைப்பதென்பது தற்கொலைக்கச் சமனான செயல் ஏனெனில் எல்லாத் தரப்புச் சோதனைக்காரரும் முதலில் கைவிட்டுத் தேடுவது இந்த இடங்களாய்த்தான் இருக்கிறது.’ 3. ‘தெரு நாய்கள் கூட கடலை எண்ணையின் நாற்றம் தூரத்தில் வரவே வாலை மடக்கி யோனியைப் பொத்திக் கொண்டோடப் பழக்கப்பட்டு விட்டன.’ 4. ‘ஓ பாரதமே எல்லைகள் தாண்டி வெண்கொடி நாட்டுவது இருக்கட்டும் முதலில் உன் புத்திரரின் வேகம் தணியுமட்டும் பிசைந்துருட்டி விளையாட திரண்ட உன் முலைகளை அவர்களுக்குக் கொடு.’ பானு தனது சகோதரன் நக்கீரனுடன் நடாத்திய உரையாடல் இது. நான் இயக்கத்திற்குப் போகப் போகிறேன். சேர்த்து விடுங்கோ. சேர்ந்து…? ஆயுதப்பயிற்சி எடுக்கப்போகிறேன் இந்தியாவுக்கு அனுப்பி விடுங்கோ. எடுத்து…? நாட்டுக்காகப் போரடப் பொகிறேன். ஹா…ஹ…ஹா…ஹா… …. கைகளில் ஆயுதம் ஏந்துவதற்கு முன்பு நீ கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உண்டு. என்று நடந்த உரையாடலில், தான் கற்றுக் கொண்டவை அதிகம் எனக் கூறுகிறார். தனது சனங்களது வேதனை குறித்து அந்த வாழ்வின் தர்க்கம் குறித்து எழுதும் பானுவினது போர்க்குணம் மிகப்பெரியது. பானுவுக்கு அந்தப் போர்க்குணத்தை ஒப்புவிக்க கவிதை வாய்த்திருக்கிறது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றிய பல பெண்கள் ஒதுங்கியிருப்பதைப் போல பானு ஒதுங்கவில்லை என்பது மிகப் பெரிய சந்தோசம். இன்னும் ஒவ்வொரு கணமும் கவிதை மொழியை கைக்குள் பொத்தித் தான் இருக்கிறார் பானு. தற்போது சிட்டுக்குருவி பற்றிய கவிதைகளில் தற்கால விமர்சனம் பரவிக்கிடக்கிறது. பானுவின் கவிதைகள் பெரும்பாலும் விமர்சனமாக அமைவது சமூகம் பற்றிய அதீத அக்கறையின் காரணமாகவே. கடைசிப்பக்கம் என்ற கவிதை ஒரு சமூகவிடுதலைப் போராளியின் கங்கணம் அது. “…. நளத்தியென்றும் பள்ளி பறைச்சியென்றும் அழுகல் வாயால் சொல்லெறிந்து அடித்து விரட்டியதும் இந்தக் கடைசிக் கலட்டி வெளிக்குள்தான். மீண்டும் மீண்டும் கூறியது கூற மறுத்து அடம்பிடிக்கிறதென் கவிதை. முஸ்டியை உயர்த்தி கட்டியம் கூறி ஓங்கியெழுகிறது அது. என்னவென்று? உங்கள் பல்லுக் கில்லெல்லாம் அடித்துடைக்கும் படி. …” இதுதான் பானு. இதுதான் பிறத்தியாள். நன்றி: மற்றது நேரம் 5/28/2011 07:03:00 AM 0 கருத்துரைகள்: Post a Comment இந்த இடுகையின் இணைப்புகள் Create a Link Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) உள்ளே/தலையங்கம் ▼ 2011 (23) ► Jul 2011 (1) ► Jun 2011 (2) ▼ May 2011 (3) பிறத்தியாள்- இரண்டு வருடம் கடந்து -கற்சுறா- பொதுக்கூட்டம் – கலந்துரையாடல் COMMITTEE FOR THE RELEASE OF POLITICAL PRISONERS ► Mar 2011 (1) ► Feb 2011 (8) ► Jan 2011 (8) ► 2010 (229) ► 2009 (77) நூலகம் நூலகம் எமது இணைப்புகள் Indian Vanguard மவுனமொழி ஜாதி ஒழிய வேண்டும் என்றால், அதை உண்டாக்கக் காரணமாய் இருந்த இந்து மதம் ஒழிய வேண்டும்! பெரியார் “மொழி” இந்த ராமன், சுப்பன், கிருஷ்ணன் முதலியோர்களை உடைத்து ரோட்டுக்கு சல்லியாக்கிப் போடணும். இந்த மாநாட்டு மேடைக்கு வந்ததும், இங்கே ஒரு கம்யூனிஸ்ட், ஒரு சோஷியலிஸ்ட், ஒரு காங்கிரசிஸ்ட் ஆக மூவர் பேசினார்கள். மூவரும் பார்ப்பானுக்குப் பரிந்து, மிகச் சலுகையாகப் பேசினார்கள். ஆனால் மூன்று பேரும் ஜாதி ஒழிய வேண்டும் என்ற கருத்துள்ளவர்கள். அப்படி இவர்கள் கருதியிராவிட்டால், சொல்லாவிட்டால் இந்த சாதி ஒழிப்பு மாநாட்டு மேடையில் அவர்களுக்கு இடமேயில்லை; இடமிருக்க நியாயமுமில்லை. இந்த மூன்று பேரும் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்று சொல்லவே மாட்டார்கள். ஏன்? இந்த மூன்று பேருக்கும் தலைவர்கள் பார்ப்பனர்கள். நீங்கள் நினையுங்கள். கம்யூனிஸ்ட் ஏன் பார்ப்பானைத் திட்டவில்லை என்றால், அவர்களின் தலைவர்கள் என்பவர்கள் பார்ப்பனர்கள்தானே! சோஷலிஸ்ட் ஏன் பார்ப்பானைத் திட்டவில்லை என்றால், அந்தக் கட்சித் தலைவரும் பார்ப்பனர்தானே? காங்கிரஸ் கட்சிக்காரர் ஏன் பார்ப்பானைத் திட்டவில்லை என்றால், அவர்கள் தலைவர்கள் யார்? இந்த ஆச்சாரியார், நேரு முதலிய பார்ப்பனர்கள்தானே! ஜாதி ஒழிய வேண்டும் என்றால், அதை உண்டாக்கக் காரணமாய் இருந்த இந்து மதம் ஒழிய வேண்டும்; அந்த இந்து மதத்தில் உள்ள கடவுள்கள் ஒழிய வேண்டும்; அதிலே இருக்கிற ராமனும், சுப்பனும், கணபதியும் ஜாதியைக் காப்பாற்ற வந்தவர்கள் அல்லவா என்று கேட்கிறேன். இங்கே பேசிய கம்யூனிஸ்ட் சொன்னார், ‘‘நீங்கள் கடவுளை ஒழிக்கணும், ஒழிக்கணும் என்று பிள்ளையாரைப் போட்டு உடைத்ததால்தான் இப்போது எங்கேயும் பூஜை நடக்கிறது'' என்று. இன்னும் சொன்னார்: ‘‘சாதி ஒழியணும்; அதற்குப் பார்ப்பான் ஒழியணும் என்று வேகமாகப் போனால் ஜாதி வளரும்'' என்றார். நான் கேட்கிறேன், நீ மட்டும் முதலாளி ஒழியணும் என்றால், முதலாளி மட்டும் வளர மாட்டானா? உண்மையான காரணத்தை அறியாமலோ அல்லது அறிந்தும், மறைத்துப் பேசியே வருவது என்பது என்ன நியாயம்? பார்ப்பானைத் திட்ட இவர் களுக்குத் தைரியம் போதாது. கம்யூனிஸ்டுகள் சும்மா அளப்பார்கள், பணக்காரனை ஒழிக்கணும் என்று. பணக்காரனை நெருக்கினால் என்ன ஆகும் என்று தெரியுமா இவர்களுக்கு? பணக்காரனைக் காப்பாற்றுவதற்குத்தானே அரசாங்கம் இருக்கிறது, போலிஸ் இருக்கிறது? ஏன் என்றால் அவன் அந்தப்படியாகத் தன்னைக் காப்பாற்றிக் கொடுப்பதற்காக என்று சர்க்காருக்கு (அரசுக்கு) வரி செலுத்துகிறான். பணக்காரன் கிட்டே போகிறதுன்னா இவன் முதலில் சர்க்கார்கிட்டே போகணும். பார்ப்பான்கிட்டே இருப்பதெல்லாம் இந்தப் புராணம், இந்த மதம், இந்த சாஸ்திரம் முதலியவைதான். இவர்கள் சொல்கிறார்கள் ஜனங்களுக்குப் படிப்பில்லை என்று. யாருக்குப் படிப்பில்லை? செட்டிக்குப் படிப்பில்லை; படையாச்சிக்குப் படிப்பில்லை; நாயக்கனுக்குப் படிப்பில்லை. பார்ப்பானுக்கா படிப்பில்லை? அவன் வீட்டுப் பூனைக்குட்டி கூடப் படித்திருக்கிறதே! அவனுக்குச் சர்க்காரிலும் நல்ல வசதியிருக்கின்றதே! அதே மாதிரி நாட்டில் வேலையில்லாமை பெருகிவிட்டது என்கிறார்கள். யாருக்கு, எங்கே வேலையில்லா திண்டாட்டம்? நம்மவனுக்கு வேலையில்லை. இந்தக் கம்யூனிஸ்டுகள் என்னவென்றால், இதைப்பற்றின கவலை கொஞ்சம்கூட இல்லாமல் ஜனங்கள் பட்டினி கிடக்கின்றார்களே என்று கூப்பாடு போடுகின்றார்கள்! நான் கேட்கிறேன், எந்தப் பார்ப்பானுக்காவது வறுமையுண்டா? சர்க்காரில் கஞ்சித் தொட்டி வைத்திருக்கின்றார்கள். எந்தப் பார்ப்பானய்யா அந்தக் கஞ்சித் தொட்டியில் போய் கஞ்சிக் குடித்தான்? சொல்ல முடியுமா? இந்தக் கம்யூனிஸ்டுகள், உடை பஞ்சம் என்று சொல்கின்றார்களே! பெரும்பாலான நம் பெண்கள் நான்கு முழம், எட்டு முழம், கட்டிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் பார்ப்பனர்களை எடுத்துக் கொள்ளுங்கள். பன்னிரண்டாறு அல்லவா கட்டிக் கொள்ளுகின்றார்கள்? பார்ப்பனப் பெண்கள் 18 முழம் அல்லவா கட்டிக் கொள்கின்றார்கள்? நம் பெண்கள் தாங்கள் கட்டியிருக்கும் அழுக்குப் பிடித்த புடவையைத் துவைக்கணும் என்றால், புடவையின் ஒரு முனையை இடுப்பில் கட்டிக் கொண்டல்லவா இன்னொரு முனையை நனைத்து துவைக்க வேண்டியிருக்கிறது? ஏன் நமக்கு மட்டும் இந்த நிலை? நாம் கீழ் ஜாதியில் இருப்பதனால்தான். சாதி என்பதை எல்லா வகையிலும் பார்ப்பான் உபயோகப்படுத்திக் கொண்டு முன்னே போகின்றான். உங்களுக்கு இருக்கிற சூத்திரத்தன்மை, உத்தியோகமில்லாத தன்மை ஒழியணும் என்றால், இந்து மதத்தை ஒழிக்கணும். இந்த ராமன், சுப்பன், கிருஷ்ணன் முதலியோர்களை உடைத்து ரோட்டுக்கு சல்லியாக்கிப் போடணும். அப்பொழுதுதான் ஏதாவது வழி பிறக்கும். இங்கு இந்த ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றதற்கு ஒன்று சொல்ல வேண்டும் என்று கருதுகின்றேன். நீங்கள் யாரும் கோயிலுக்குப் போகாதீர்கள்! சாம்பலைப் பூசிக்கொள்ளாதீர்கள்! பெண்களைக் கேட்டுக் கொள்கிறேன் – தயவு செய்து பார்ப்பானை ‘சாமி' என்று கூப்பிடாதீர்கள்! அதைப்போல மடத்தனம் வேறு இல்லை. அத்துடன் அவனைப் ‘பிராமணன்' என்றால் நாம் நம்மை ‘சூத்திரன்' என்றே ஒப்புக் கொள்வதாகாதா? ஆகவே, இப்படிப்பட்ட சாதி ஒழிப்புக் காரியங்களில் எல்லோரும் சற்று அக்கறை செலுத்த வேண்டும். 9.3.1954ம் தேதி அக்கிச் செட்டிப்பாளையத்தில் ஆற்றிய உரை ----------------------------------------------- பாபாசாகேப் பேசுகிறார் ஜாதி மீது பற்று இருப்பவன் தீண்டாமையை எதிர்க்க மாட்டான் -அம்பேத்கர்- இந்து சமூக சீர்திருத்தவாதிகளில் மிதவாதிகளின் பிரிவு ஒன்று உள்ளது. இந்தப் பிரிவினர், தீண்டாமை என்பது சாதி முறையிலிருந்து வேறுபட்டது என்று கருதுகிறார்கள். இந்தக் கருத்தைப் பின்பற்றி இவர்கள் சாதி முறையைத் தாக்காமலேயே தீண்டாமையை ஒழித்துவிட முடியும் என்று கருதுகிறார்கள். மத உணர்வுள்ள இந்து, சாதி முறையை ஒழிப்பதற்கு எதிராக இருப்பது போலவே, தீண்டாமையை ஒழிப்பதற்கும் எதிராகவே இருக்கிறார். சமூக சீர்திருத்தத்தை ஒரே கட்டமாக நடத்துவதை எதிர்ப்பதைப் போலவே, இரண்டு கட்டமாக நடத்துவதையும் அவர் எதிர்க்கிறார். ஆனால், அரசியல் ஈடுபாடு கொண்ட இந்துவுக்கு இந்தக் கருத்து மிகவும் பிடித்திருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஓர் இந்து தான் உண்மையில் நடந்து கொள்வதைவிட மிகச் சிறந்த ஜனநாயகவாதி என்று உலக அரங்கில் காட்டிக் கொள்வதற்கு இது வாய்ப்பளிக்கிறது. இரண்டாவதாக, சாதியை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால் சாதி இந்துக்கள் காங்கிரசைக் கைவிட்டுவிடும் ஆபத்து இருக்காது. சாதி முறைக்குத் தீங்கு இல்லாமல் தீண்டாமையை ஒழிக்க விரும்புவோர், மநுஸ்மிருதி பத்தாம் அத்தியாயம் நான்காம் சுலோகத்தைத் தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் கொள்கிறார்கள். இந்த சுலோகத்தில் மநு, நான்கு வர்ணங்கள்தான் உண்டு என்றும், அய்ந்தாவது வர்ணம் இல்லை என்றும் கூறுகிறார். இந்த சுலோகத்தின்படி, தீண்டத்தகாதவர்கள் நான்காம் வர்ணத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் சூத்திரர்களில் ஒரு பகுதியினர் என்றும், சூத்திரர்களைத் தொடுவதற்குத் தடை இல்லாததால் – தீண்டத்தகாதவர்களைத் தொடுவதற்கும் தடை இருக்க முடியாது என்று பொருள் கூறப்படுகிறது. அரசியல் ஈடுபாடு உள்ள இந்துவுக்கு இவ்வாறு பொருள் கூறுவது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், இது மநு கூற விரும்பும் கருத்துக்குப் பொருந்துவதாக இல்லை. இந்த சுலோகத்துக்கு மற்றொரு விதமாகவும் பொருள் கூற முடியும். நான்கு வர்ணங்களுக்கு வெளியே உள்ள இந்த சமுதாயங்களை, அய்ந்தாம் வர்ணமாக ஏற்றுக் கொண்டு, சதுர்வர்ண முறையைப் பஞ்சவர்ண முறையாக விரிவுபடுத்த மநு தயாராக இல்லை என்பதும் இதன் பொருளாக இருக்க முடியும். அய்ந்தாம் வர்ணம் இல்லை என்று அவர் கூறுவதன் பொருள், இந்த சமுதாயம் நான்கு வர்ணங்களுக்கு பதில் அய்ந்து வர்ணங்களைக் கொண்டதாகச் செய்வதன் மூலம், நான்கு வர்ணங்களுக்கு வெளியில் உள்ள மக்களை இந்து சமூகத்தில் இணைத்துவிட விரும்பவில்லை என்பதேயாகும். அவர் கூற விரும்பிய கருத்து இதுதான் என்பது, ‘பாஹ்யர்கள்' அல்லது ‘வர்ண பாஹ்யர்கள்' என்ற ஒரு பிரிவைப் பற்றி அவர் பேசுவதிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது. எல்லா மக்களையும் நான்கு வர்ணங்களுக்குள் சேர்த்துக் கொள்ள மநு விரும்பியிருந்தால், சிலரை ‘வர்ண பாஹ்யர்கள்' என்று பேச காரணம் இல்லை. உண்மையில் வர்ண பாஹ்யர்களில் இரண்டு உட்பிரிவுகளை அவர் குறிப்பிடுகிறார். இந்த உட்பிரிவுகளை ‘ஹீனர்கள்' என்றும் ‘அந்த்யோவாசின்கள்' என்றும் அவர் அழைக்கிறார். இந்த உண்மைகளை வைத்துப் பார்க்கும்போது, மநுஸ்மிருதி சுலோகத்துக்குக் கூற முயலும் பொருள், தீவிர மதப் பற்றுள்ள இந்துவை ஏமாற்றிவிட முடியாது. தீண்டாமையைப் பின்பற்றுவது மநுஸ்மிருதிக்கு முரணானது என்றும், அதை ஒழிப்பது இந்து மதக் கோட்பாடுகளுக்கு முரணானது அல்ல என்றும் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். மநுஸ்மிருதிக்கு இவ்வாறு பொருள் கூறி எடுத்து வைக்கப்படும் வாதம், கல்வியறிவில்லாத சாதாரண இந்துவுக்குப் புரியாத அளவுக்கு அறிவு நுட்பம் வாய்ந்தது. அவருக்குத் தெரிந்தது, சமூக உறவுகளில் தாம் பின்பற்ற வேண்டிய மூன்று தடைகள் உள்ளன என்பதே. இந்தத் தடைகள் : 1. சேர்ந்து உண்ணக் கூடாது 2. கலப்புத் திருமணம் செய்யக் கூடாது 3. சில வகுப்பு மக்களைத் தொடக் கூடாது. முதல் இரண்டு தடைகளும் சாதிப் பிரிவினையாகும்; மூன்றாவது தடை தீண்டாமையாகும். சாதி இந்துவுக்குத் தடைகளின் எண்ணிக்கை பற்றிக் கவலையில்லை. தடைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதில் அவர் குறியாயிருக்கிறார். தடையைப் பின்பற்ற வேண்டாம் என்று அவரிடம் கூறினால், ஏன் வேண்டாம் என்று அவர் திருப்பிக் கேட்கிறார். அவருடைய வாதம் இதுதான் : முதல் இரண்டு தடைகளையும் நான் பின்பற்றலாம் என்றால், மூன்றாவது தடையைப் பின்பற்றுவதில் என்ன தவறு? உளவியல் ரீதியாக சாதியும் தீண்டாமையும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒருங்கிணைந்த முறையாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் சாதியில் நம்பிக்கை வைத்திருப்பதேயாகும். இந்தக் கருத்தை வைத்துப் பார்த்தால், சாதி முறையை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கலாம் என்று நம்புவது சற்றும் பயனற்றது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்ற கருத்து தவறானது. இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை. சாதி முறையின் நீட்சியே தீண்டாமை. இரண்டும் பிரிந்து நிற்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன, சேர்ந்தேதான் அவை வீழும். (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் 94) ---------------------------------------------------- சாதி அமைப்பை உயிர்த் துடிப்புடன் இயங்க வைக்கும் அங்கீகாரம் எது? -அம்பேத்கர்- சட்டத்தின் மூலமோ, பகுத்தறிவு ரீதியான உத்திகளாலோ தீண்டாமை மறைந்து விடாது என்பதற்கு மற்றொரு காரணம் உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்து சமூக அமைப்பு படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு, படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பிலிருந்து வேறுபடுகிறது. முன்னது பலவீனமானது. பின்னது, தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்டு நிலைக்கும் திறன் கொண்டது. சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பில் கீழ்நிலைப் பிரிவுகள் ஒன்று சேர்ந்து அமைப்பைக் கவிழ்த்துவிட முடியும். அவற்றில் எதற்கும் அந்த அமைப்பைப் பாதுகாப்பதிலும் விருப்பம் இல்லை. ஆனால், படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை நிலவும் அமைப்பில், பாதிக்கப்பட்ட பிரிவுகள் ஒன்றிணைந்து பொதுவான தாக்குதல் நடத்தும் வாய்ப்புக்கு இடமேயில்லை. இத்தகைய அமைப்பில் பாதிக்கப்பட்ட பிரிவினர் பொதுவான நிலையில் இல்லை. உயர்ந்தது, தாழ்ந்தது என்ற நிலைகள் மட்டுமே உள்ள போதுதான் இவ்வாறு இருக்க முடியும். படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை முறையில் மிக உயர்ந்தவர்கள் (பார்ப்பனர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே, சற்று அதிகம் உயர்ந்தவர்கள் (சத்திரியர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே உயர்ந்தவர்கள் (வைசியர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே, தாழ்ந்தவர்கள் (சூத்திரர்கள்) உள்ளனர். அவர்களுக்கும் கீழே, அதிகம் தாழ்ந்தவர்கள் (தீண்டத்தகாதவர்கள்) உள்ளனர். இவர்கள் அனைவருமே மிக உயர்ந்தவர்களிடம் மனத்தாங்கல் கொண்டவர்கள்தாம்; அவர்களைக் கீழே வீழ்த்திவிட விருப்பம் உள்ளவர்கள்தான். ஆனால், இவர்கள் ஒன்றிணைய மாட்டார்கள். சற்று அதிகம் உயர்ந்தவன் மிக உயர்ந்தவனை ஒழித்துவிட ஆவலாயிருக்கிறான். ஆனால் அவன், உயர்ந்தவனுடனும் தாழ்ந்தவனுடனும் மிகத் தாழ்ந்தவனுடனும் இணைய விரும்பவில்லை. அவர்கள், தன்னுடைய நிலையை அடைந்து தனக்கு சமமாகிவிடுவார்களோ என்று அவன் நினைக்கிறான். உயர்ந்தவன் தனக்கு மேலே உள்ளவனான சற்று அதிகம் உயர்ந்தவனை வீழ்த்திவிட விரும்புகிறான். ஆனால், அவன் தாழ்ந்தவனுடனும் மிகத் தாழ்ந்தவனுடனும் சேர விரும்பவில்லை. அவர்கள் தனது சமூக நிலைக்கு உயர்ந்து தன்னுடன் சமநிலைப் பெற்று விடுவார்களோ என்று அவன் அஞ்சுகிறான். தாழ்ந்தவன், மிக உயர்ந்தவனையும், சற்று அதிகம் உயர்ந்தவனையும், உயர்ந்தவனையும் கீழே தள்ளி விட விரும்புகிறான். ஆனால் அவன் மிகத் தாழ்ந்த வனுடனும் கூட்டுச் சேரமாட்டான். மிகத் தாழ்ந்தவன் சமூக நிலையில் உயர்ந்து தனக்குச் சமமாகி விடுவான் என்று அவன் அஞ்சுகிறான். படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை நிலவும் அமைப்பில், சமூகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் உள்ள பிரிவைத் தவிர, முற்றிலும் உரிமைகள் இல்லாதவர்கள் என்று எந்த வகுப்பினரும் இல்லை. மற்ற வகுப்புக்குகூட, மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்புடன் ஒப்பிடும்போது, ஓரளவு உரிமைகள் உள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் உரிமைகள் இருப்பதால், இந்த சமூக அமைப்பைப் பராமரிப்பதில் ஒவ்வொரு வகுப்புக்கும் அக்கறை இருக்கிறது. தீண்டாமை, தீண்டத்தகாதவர்களுக்கு கெடுவாய்ப்பாக இருக்கலாம். ஆனால், இந்துக்களுக்கு அது ஒரு நல்வாய்ப்பே என்பதில் சந்தேகம் இல்லை. தங்களைவிட தாழ்ந்தவர்களாகக் கருதுவதற்கு ஒரு வகுப்பை, அது அவர்களுக்குக் கொடுக்கிறது. யாருமே முக்கியமானவர்களாயில்லாத ஓர் அமைப்பையும்; எல்லோருமே முக்கியமானவர்களாக உள்ள ஓர் அமைப்பையும் இந்துக்கள் விரும்பவில்லை. தாங்கள் முக்கியமானவர்களாகவும் மற்றவர்கள் முக்கியமில்லாதவர்களாகவும் உள்ள ஓர் அமைப்பையே அவர்கள் விரும்புகின்றனர். தீண்டத்தகாதவர்கள் முக்கியமில்லாதவர்கள். இது, இந்துக்களை முக்கியமானவர்களாக ஆக்குகிறது. தீண்டாமை முறை இந்துவின் இயல்பான பெருமை உணர்வுக்குத் தீனி போட்டு, அவர்கள் தங்களைப் பெரியவர்களாக நினைக்கவும், பெரியவர்களாகக் காட்டிக் கொள்ளவும் உதவுகிறது. இந்துக்கள், முக்கியமாக குறுகிய சிந்தனை உள்ளவர்களாக இருக்கும் இப்பெரும்பான்மை மக்கள், தீண்டாமை முறையைக் கைவிடும் வாய்ப்பு ஏன் இல்லை என்பதற்கு இது மற்றொரு காரணமாகும். இந்து சமூக அமைப்பு முழுவதும் குறிப்பாக, சாதி முறை ஒழிந்தால்தான் தீண்டாமை மறையும். இது சாத்தியமா? ஒவ்வொரு அமைப்பு முறையும் ஏதேனும் ஓர் அங்கீகாரத்தை ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது. ஓர் அமைப்பு முறைக்கு இவ்வாறு உயிர் ஆற்றல் அளிக்கும் அங்கீகாரங்கள் மூன்று வகைப்படும். அவை சட்ட, சமூக, மத அங்கீகாரங்கள் ஆகும். சாதி முறைக்குப் பின்னால் உள்ள அங்கீகாரத்தின் தன்மை என்ன? கெடுவாய்ப்பாக, சாதி முறையின் பின்னே உள்ள அங்கீகாரம் மத அங்கீகாரம் ஆகும். வர்ண முறையின் புதிய வடிவமான சாதி முறை, தனது அங்கீகாரத்தை இந்து மதத்தின் புனித நூலாகவும், தவறுதல் அற்றதாகவும் கருதப்படும் வேதங்களிலிருந்து பெறுகிறது. கெடுவாய்ப்பாக என்று நான் கூறுவதற்குக் காரணம், மத அங்கீகாரம் பெற்ற எதுவும், புனிதமானதாகவும் நிரந்தரமானதாகவும் ஆகிவிடுகிறது என்பதே. ஓர் இந்துவுக்கு சாதி புனிதமானது, நிரந்தரமானது. சாதி மறைந்து போக முடியாது என்றால், தீண்டாமை ஒழிந்து போகும் என்ற நம்பிக்கைக்கு இடம் ஏது? (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கபிறத்தியாள்- இரண்டு வருடம் கடந்து -கற்சுறா- கருப்புப் பிரதிகள் வெளியீடாக வந்திருக்கும் பானுபாரதியின் பிறத்தியாள் கவிதைத் தொகுப்பு. தோழன் விமலேஸ்வரனை நினைவுகூர்ந்து வெளியிடப்பட்ட தொகுப்பு என்பதில் மிக இறுக்கமான வேதனையுடன் மெல்ல பக்கங்களை விரிக்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு நாட்களையும் ஒவ்வொரு நண்பர்களது இழப்பினூடாக தாண்டிக்கொண்டிருந்த தருணங்கள். எந்தவொரு பகலிலும் எந்தவொரு இருளிலும் ஒரு தோழனை ஒரு தோழியை இழந்துகொண்டிருந்தோம். வரலாறு ஈழம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 1980கள் மிகவும் நெருக்குவாரம் நிறைந்த நாட்கள். எங்களில் பலர் சேர்த்துவைத்த அத்தனை தடையங்களும் ஏதோ ஒரு வழியில் காணாமலேயே போய்க் கொண்டிருந்தன. மனங்களில் பதிவாகிய நினைவுகளைத் தவிர இன்று பெரும்பாலும் தடையங்கள் அத்தனையும் அழிந்துதான் போய்விட்டன. இத்தனை காலம் தாண்டி விமலேஸ்வரனை ஒரு கணத்திலேனும் நினைத்துக் கொள்ள வைத்திருக்கிறது இந்தக் கவிதைத் தொகுப்பு. இங்கும் பானுபாரதி அங்கொன்றும் இங்கொன்றுமாக 1980களிலிருந்து எழுதிய கவிதைகள் அவள் தமயந்திக்கு எழுதிய கடிதங்கள் என்று பரவியிருக்கும் இந்தப் பிறத்தியாள், கவிதைகள் குறித்துப் பேசுவதை விட நாம் கடந்து வந்த காலங்களைப் பேசவைப்பது என்பதில் கணிசமான அளவு முக்கியம் பெறுகிறது. இந்தத் தொகுப்பிற்கூடாக நோக்கும் போது பானுபாரதி அவர்களை கவிஞர் என்று என்னால் சொல்ல முடியாது என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். யுத்தகால வாழ்வில் எழுத்துக்களைப் பாதுகாத்தல் என்பதும், அதுவும் ஈழத்தில் எழுத்துக்களைப் பாதுகாத்தல் என்பதும் ஒன்றல்ல. முழுக்க முழுக்க விடுதலை இயக்கங்களது சர்வாதிகாரத்தில் இருந்து தப்பித்தல் என்பதே வாழ்வாகியிருக்கும் தருணத்தில் எழுத்துக்காக தோழர்கள் சாகடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில் ஒரு சிறிய கவிதையை பாதுகாத்தல் என்பது தற்கொலைக்குச் சமனானது. ஆக ஒரு எழுத்தாளனால் தனது எழுத்துக்களை உரிய முறையில் பாதுகாக்க முடியாதுதான் போகும். ஆனால் பானுபாரதியோ ஒரு எழுத்தாளர் என்பதைவிடவும் சமூகச் செயற்பாட்டளியாகவும் போராளியாகவும் இருந்த தருணங்களில் கவிதையைப் பாதுகாத்தல் என்பது அவரது இரண்டாந்தர வேலையாகவே இருந்திருகிறது. அப்போது எழுதப்பட்டவைகள் கவிதைகள் என்பதை விடவும் முக்கியமாக தனக்கும் மக்களுக்கும் இடையேயான கருத்துப்பரிமாற்றமாகவே இருந்திருக்கிறது. ஆனால் நமக்கிடையே வாழும் பல ஈழத்துக் கவிஞர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் தமது கவிதைகளைப் பாதுகாப்பதையே அந்த யுத்தகாலத்திலும் சரி இன்றுகடைசியாக நடந்த கோரச்சண்டையிலும் சரி முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார்கள். அதனால் தான் பானுபாரதி அவர்களை ஈழத்துக் கவிஞர் என்ற குறுகிய அரியண்டத்தனமான சொல்லால் அழைத்து குறுக்கிவிடமுடியவில்லை. பெண்களின் உடலும், மொழியும், அரசியல் அபிலாசைகளும், குழந்தைகளும், கனவுகளும் பெண்களுக்கே சொந்தமில்லாத ஒரு போர்க் காலச்சூழலில் கவிதைகள் எழுதுவதற்கும் எழுதிய ஒரு துண்டுக்கவிதையையும் புலிகளிடமிருந்தும், அரசிடமிருந்தும், ஆண்களிடமிருந்தும், இன்னும் கவிதைத் திருடர்களிடமிருந்தும் மறைத்து பாதுகாக்க எவ்வளவு தூரம் போராட வேண்டியிருந்தது என்ற உண்மையை இந்தத் தொகுப்பு போட்டுடைக்கின்றது. என்று ஜீவமுரளி எழுதியதில் அவ்வளவு உண்மையிருக்கிறது. ஈழத்துக் கவிதைச்சூழல் அவ்வளவு அசிங்கமானதாய்த்தான் இருக்கிறது. சிவரமணியையும் அவளது கவிதையையும் செல்வியையும் அவளது கவிதைகளையும் அழித்தவர்கள் நாங்கள் தானே. நாங்கள் எப்படி இன்னொரு வெளியில் கவிதைகள் குறித்து உரையாடலாம்? செல்வியை ஒருகவிதைக்காகக் கொலைசெய்து விட்டு அதன்பின் எப்படி நவீன கவிதைகள் குறித்தும் புதுக்கவிதைகள் குறித்தும் அரசியல் கவிதைகள் குறித்தும் பெண்கவிஞர்கள் குறித்தும் கவிதைகள் எழுதுவது குறித்தும் நாம் உரையாடுவது? என்ன அசிங்கம் பிடித்த வேலை? இந்த வேலைதான் பிரேமிளின் வாழ்விலும் நடந்தேறியது. “I was killed by the tamils” என்று எழுதினார் பிரேமிள். உண்மையில் உயர்ந்த கலைஞர்களை அவமதித்து மனோதத்துவக் கொலை செய்வதிலும் பட்டினி போட்டுக் கொல்வதிலும் உயர்ந்த கலையை மூச்சடக்குவதிலும் மிகிமிகத் தீவிரம் காட்டுகிறவர்கள் அரை வேக்காட்டுக் கலைஞர்களும் இலக்கியவாதிகளும்தான் என்று எழுதினார் காலசுப்பிரமணியன். இந்த அரைவேக்காட்டாளர்களுடன் கைகோர்த்து பிரேமிளைக் கொன்றவர்கள் நமது முழுவேக்காட்டாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள். பானு எழுதிய கவிதைகள் பேசுவதை விட பானுவிடம் இருந்து தொலைந்து போனகவிதைகள் பேசியவை முக்கியமானவை என்பதால், பிறத்தியாள் குறித்துப் பேசவர இவ்வளவு மனம் உறுத்த உறுத்த இந்த ஒப்பாரியை வைக்க வேண்டியிருக்கிறது. பொதுவாக ஆண்களுக்கில்லாத கதை சொல்லும் வாய்ப்பு பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. வராலற்றை செவி வழியாகவே சொல்லிவிடும் கடத்திவிடும் மனம் அவர்களுடையது. அகத்தை நேசிக்கும் மனம் மறுபுறத்தில் தன்னை அறியாமல் புறத்தை அதிகம் நேசிக்கிறது. நேசிப்பின் மீது படரும் மொழியூடாக வரலாற்றைக் தனக்குள்ளால் கடத்திவிடுகிறது. ஆனால் ஆண்களோ வரலாற்றுக்குள்ளால் தங்களைக் கடத்திவிடுவதிலே கவனம் செலுத்தவதால் உடலுடனும் அதன் மொழியுடனும் ஈர்க்கப்படாமலேயே அந்நியப்பட்டுவிடுகிறார்கள். ஈழப் போராட்டத்தில் இந்தியராணுவ வருகை என்பது மிக முக்கியமான காலகட்டம். இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இருந்த விடுதலை இயக்கங்கள் எவ்வாறு மக்களை மேய்த்தன. மந்தைகளாக்கின என்பதை பலர் மறந்த போதும் தனது கவிதைகளில் குறிப்பிட மறக்காதவர் பானு. அப்போது பாடசாலை இளைஞர்களுக்கு மலவாசலுக்குள்ளால் Fanta போலத்தலை நுளைத்து வதை செய்யும் சித்திரவதை முகாமாக இருந்தது அசோகா ஹோட்டல் என்பதை நம்மில் பலர் மறந்து விடுகிறோம். அசோகா (ஹோட்டல்) ஆட்சியின் ஆதிக்கம் கோடிப்புறத்து கிராமங்களின் குச்சொழுங்கைக்குள்ளும் நீள்கிறது இங்கு மரணத் தீர்ப்பெழுத குறைந்த பட்ச சமுசயங்களே காணுமாயுள்ளது. என்று எழுதுகிறார் பானு. எப்டி கந்தன் கருணையையும் துணுக்காயையும் விசுவமடுவையும் மறக்க முடியாதோ அதேபோல் நாம் மறக்க முடியாதது அசோகா ஹோட்டல். இந்த இந்திய இராணுவக் காலங்களில் ஈழத்துச் சூழலும் அதற்குள் வாழ்ந்த ஈழத்துப் பெண்களது நிலையையும் விமலுக்கு எழுதிய கடிதங்கள் பேசுகின்றன. 1. “மரண பயத்திடமிருந்து தலையை மறைப்பதை விட ஒரு துண்டுக் கவிதையை மறைப்பதே பெரும்பாடாய் இருக்கிறது.” 2. “ஒரு கவிதையையோ காகிதத்தையோ அல்லதொரு சிறு குறிப்பையோ பெண்ணின் மர்மப் பிரதேசங்களென(?) சுட்டப்படும் இடங்களில் கூட மறைத்து வைப்பதென்பது தற்கொலைக்கச் சமனான செயல் ஏனெனில் எல்லாத் தரப்புச் சோதனைக்காரரும் முதலில் கைவிட்டுத் தேடுவது இந்த இடங்களாய்த்தான் இருக்கிறது.’ 3. ‘தெரு நாய்கள் கூட கடலை எண்ணையின் நாற்றம் தூரத்தில் வரவே வாலை மடக்கி யோனியைப் பொத்திக் கொண்டோடப் பழக்கப்பட்டு விட்டன.’ 4. ‘ஓ பாரதமே எல்லைகள் தாண்டி வெண்கொடி நாட்டுவது இருக்கட்டும் முதலில் உன் புத்திரரின் வேகம் தணியுமட்டும் பிசைந்துருட்டி விளையாட திரண்ட உன் முலைகளை அவர்களுக்குக் கொடு.’ பானு தனது சகோதரன் நக்கீரனுடன் நடாத்திய உரையாடல் இது. நான் இயக்கத்திற்குப் போகப் போகிறேன். சேர்த்து விடுங்கோ. சேர்ந்து…? ஆயுதப்பயிற்சி எடுக்கப்போகிறேன் இந்தியாவுக்கு அனுப்பி விடுங்கோ. எடுத்து…? நாட்டுக்காகப் போரடப் பொகிறேன். ஹா…ஹ…ஹா…ஹா… …. கைகளில் ஆயுதம் ஏந்துவதற்கு முன்பு நீ கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உண்டு. என்று நடந்த உரையாடலில், தான் கற்றுக் கொண்டவை அதிகம் எனக் கூறுகிறார். தனது சனங்களது வேதனை குறித்து அந்த வாழ்வின் தர்க்கம் குறித்து எழுதும் பானுவினது போர்க்குணம் மிகப்பெரியது. பானுவுக்கு அந்தப் போர்க்குணத்தை ஒப்புவிக்க கவிதை வாய்த்திருக்கிறது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றிய பல பெண்கள் ஒதுங்கியிருப்பதைப் போல பானு ஒதுங்கவில்லை என்பது மிகப் பெரிய சந்தோசம். இன்னும் ஒவ்வொரு கணமும் கவிதை மொழியை கைக்குள் பொத்தித் தான் இருக்கிறார் பானு. தற்போது சிட்டுக்குருவி பற்றிய கவிதைகளில் தற்கால விமர்சனம் பரவிக்கிடக்கிறது. பானுவின் கவிதைகள் பெரும்பாலும் விமர்சனமாக அமைவது சமூகம் பற்றிய அதீத அக்கறையின் காரணமாகவே. கடைசிப்பக்கம் என்ற கவிதை ஒரு சமூகவிடுதலைப் போராளியின் கங்கணம் அது. “…. நளத்தியென்றும் பள்ளி பறைச்சியென்றும் அழுகல் வாயால் சொல்லெறிந்து அடித்து விரட்டியதும் இந்தக் கடைசிக் கலட்டி வெளிக்குள்தான். மீண்டும் மீண்டும் கூறியது கூற மறுத்து அடம்பிடிக்கிறதென் கவிதை. முஸ்டியை உயர்த்தி கட்டியம் கூறி ஓங்கியெழுகிறது அது. என்னவென்று? உங்கள் பல்லுக் கில்லெல்லாம் அடித்துடைக்கும் படி. …” இதுதான் பானு. இதுதான் பிறத்தியாள். நன்றி: மற்றது நேரம் 5/28/2011 07:03:00 AM 0 கருத்துரைகள்: Post a Comment இந்த இடுகையின் இணைப்புகள் Create a Link Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) உள்ளே/தலையங்கம் ▼ 2011 (23) ► Jul 2011 (1) ► Jun 2011 (2) ▼ May 2011 (3) பிறத்தியாள்- இரண்டு வருடம் கடந்து -கற்சுறா- பொதுக்கூட்டம் – கலந்துரையாடல் COMMITTEE FOR THE RELEASE OF POLITICAL PRISONERS ► Mar 2011 (1) ► Feb 2011 (8) ► Jan 2011 (8) ► 2010 (229) ► 2009 (77) நூலகம் நூலகம் எமது இணைப்புகள் Indian Vanguard மவுனமொழி ஜாதி ஒழிய வேண்டும் என்றால், அதை உண்டாக்கக் காரணமாய் இருந்த இந்து மதம் ஒழிய வேண்டும்! பெரியார் “மொழி” இந்த ராமன், சுப்பன், கிருஷ்ணன் முதலியோர்களை உடைத்து ரோட்டுக்கு சல்லியாக்கிப் போடணும். இந்த மாநாட்டு மேடைக்கு வந்ததும், இங்கே ஒரு கம்யூனிஸ்ட், ஒரு சோஷியலிஸ்ட், ஒரு காங்கிரசிஸ்ட் ஆக மூவர் பேசினார்கள். மூவரும் பார்ப்பானுக்குப் பரிந்து, மிகச் சலுகையாகப் பேசினார்கள். ஆனால் மூன்று பேரும் ஜாதி ஒழிய வேண்டும் என்ற கருத்துள்ளவர்கள். அப்படி இவர்கள் கருதியிராவிட்டால், சொல்லாவிட்டால் இந்த சாதி ஒழிப்பு மாநாட்டு மேடையில் அவர்களுக்கு இடமேயில்லை; இடமிருக்க நியாயமுமில்லை. இந்த மூன்று பேரும் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்று சொல்லவே மாட்டார்கள். ஏன்? இந்த மூன்று பேருக்கும் தலைவர்கள் பார்ப்பனர்கள். நீங்கள் நினையுங்கள். கம்யூனிஸ்ட் ஏன் பார்ப்பானைத் திட்டவில்லை என்றால், அவர்களின் தலைவர்கள் என்பவர்கள் பார்ப்பனர்கள்தானே! சோஷலிஸ்ட் ஏன் பார்ப்பானைத் திட்டவில்லை என்றால், அந்தக் கட்சித் தலைவரும் பார்ப்பனர்தானே? காங்கிரஸ் கட்சிக்காரர் ஏன் பார்ப்பானைத் திட்டவில்லை என்றால், அவர்கள் தலைவர்கள் யார்? இந்த ஆச்சாரியார், நேரு முதலிய பார்ப்பனர்கள்தானே! ஜாதி ஒழிய வேண்டும் என்றால், அதை உண்டாக்கக் காரணமாய் இருந்த இந்து மதம் ஒழிய வேண்டும்; அந்த இந்து மதத்தில் உள்ள கடவுள்கள் ஒழிய வேண்டும்; அதிலே இருக்கிற ராமனும், சுப்பனும், கணபதியும் ஜாதியைக் காப்பாற்ற வந்தவர்கள் அல்லவா என்று கேட்கிறேன். இங்கே பேசிய கம்யூனிஸ்ட் சொன்னார், ‘‘நீங்கள் கடவுளை ஒழிக்கணும், ஒழிக்கணும் என்று பிள்ளையாரைப் போட்டு உடைத்ததால்தான் இப்போது எங்கேயும் பூஜை நடக்கிறது'' என்று. இன்னும் சொன்னார்: ‘‘சாதி ஒழியணும்; அதற்குப் பார்ப்பான் ஒழியணும் என்று வேகமாகப் போனால் ஜாதி வளரும்'' என்றார். நான் கேட்கிறேன், நீ மட்டும் முதலாளி ஒழியணும் என்றால், முதலாளி மட்டும் வளர மாட்டானா? உண்மையான காரணத்தை அறியாமலோ அல்லது அறிந்தும், மறைத்துப் பேசியே வருவது என்பது என்ன நியாயம்? பார்ப்பானைத் திட்ட இவர் களுக்குத் தைரியம் போதாது. கம்யூனிஸ்டுகள் சும்மா அளப்பார்கள், பணக்காரனை ஒழிக்கணும் என்று. பணக்காரனை நெருக்கினால் என்ன ஆகும் என்று தெரியுமா இவர்களுக்கு? பணக்காரனைக் காப்பாற்றுவதற்குத்தானே அரசாங்கம் இருக்கிறது, போலிஸ் இருக்கிறது? ஏன் என்றால் அவன் அந்தப்படியாகத் தன்னைக் காப்பாற்றிக் கொடுப்பதற்காக என்று சர்க்காருக்கு (அரசுக்கு) வரி செலுத்துகிறான். பணக்காரன் கிட்டே போகிறதுன்னா இவன் முதலில் சர்க்கார்கிட்டே போகணும். பார்ப்பான்கிட்டே இருப்பதெல்லாம் இந்தப் புராணம், இந்த மதம், இந்த சாஸ்திரம் முதலியவைதான். இவர்கள் சொல்கிறார்கள் ஜனங்களுக்குப் படிப்பில்லை என்று. யாருக்குப் படிப்பில்லை? செட்டிக்குப் படிப்பில்லை; படையாச்சிக்குப் படிப்பில்லை; நாயக்கனுக்குப் படிப்பில்லை. பார்ப்பானுக்கா படிப்பில்லை? அவன் வீட்டுப் பூனைக்குட்டி கூடப் படித்திருக்கிறதே! அவனுக்குச் சர்க்காரிலும் நல்ல வசதியிருக்கின்றதே! அதே மாதிரி நாட்டில் வேலையில்லாமை பெருகிவிட்டது என்கிறார்கள். யாருக்கு, எங்கே வேலையில்லா திண்டாட்டம்? நம்மவனுக்கு வேலையில்லை. இந்தக் கம்யூனிஸ்டுகள் என்னவென்றால், இதைப்பற்றின கவலை கொஞ்சம்கூட இல்லாமல் ஜனங்கள் பட்டினி கிடக்கின்றார்களே என்று கூப்பாடு போடுகின்றார்கள்! நான் கேட்கிறேன், எந்தப் பார்ப்பானுக்காவது வறுமையுண்டா? சர்க்காரில் கஞ்சித் தொட்டி வைத்திருக்கின்றார்கள். எந்தப் பார்ப்பானய்யா அந்தக் கஞ்சித் தொட்டியில் போய் கஞ்சிக் குடித்தான்? சொல்ல முடியுமா? இந்தக் கம்யூனிஸ்டுகள், உடை பஞ்சம் என்று சொல்கின்றார்களே! பெரும்பாலான நம் பெண்கள் நான்கு முழம், எட்டு முழம், கட்டிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் பார்ப்பனர்களை எடுத்துக் கொள்ளுங்கள். பன்னிரண்டாறு அல்லவா கட்டிக் கொள்ளுகின்றார்கள்? பார்ப்பனப் பெண்கள் 18 முழம் அல்லவா கட்டிக் கொள்கின்றார்கள்? நம் பெண்கள் தாங்கள் கட்டியிருக்கும் அழுக்குப் பிடித்த புடவையைத் துவைக்கணும் என்றால், புடவையின் ஒரு முனையை இடுப்பில் கட்டிக் கொண்டல்லவா இன்னொரு முனையை நனைத்து துவைக்க வேண்டியிருக்கிறது? ஏன் நமக்கு மட்டும் இந்த நிலை? நாம் கீழ் ஜாதியில் இருப்பதனால்தான். சாதி என்பதை எல்லா வகையிலும் பார்ப்பான் உபயோகப்படுத்திக் கொண்டு முன்னே போகின்றான். உங்களுக்கு இருக்கிற சூத்திரத்தன்மை, உத்தியோகமில்லாத தன்மை ஒழியணும் என்றால், இந்து மதத்தை ஒழிக்கணும். இந்த ராமன், சுப்பன், கிருஷ்ணன் முதலியோர்களை உடைத்து ரோட்டுக்கு சல்லியாக்கிப் போடணும். அப்பொழுதுதான் ஏதாவது வழி பிறக்கும். இங்கு இந்த ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றதற்கு ஒன்று சொல்ல வேண்டும் என்று கருதுகின்றேன். நீங்கள் யாரும் கோயிலுக்குப் போகாதீர்கள்! சாம்பலைப் பூசிக்கொள்ளாதீர்கள்! பெண்களைக் கேட்டுக் கொள்கிறேன் – தயவு செய்து பார்ப்பானை ‘சாமி' என்று கூப்பிடாதீர்கள்! அதைப்போல மடத்தனம் வேறு இல்லை. அத்துடன் அவனைப் ‘பிராமணன்' என்றால் நாம் நம்மை ‘சூத்திரன்' என்றே ஒப்புக் கொள்வதாகாதா? ஆகவே, இப்படிப்பட்ட சாதி ஒழிப்புக் காரியங்களில் எல்லோரும் சற்று அக்கறை செலுத்த வேண்டும். 9.3.1954ம் தேதி அக்கிச் செட்டிப்பாளையத்தில் ஆற்றிய உரை ----------------------------------------------- பாபாசாகேப் பேசுகிறார் ஜாதி மீது பற்று இருப்பவன் தீண்டாமையை எதிர்க்க மாட்டான் -அம்பேத்கர்- இந்து சமூக சீர்திருத்தவாதிகளில் மிதவாதிகளின் பிரிவு ஒன்று உள்ளது. இந்தப் பிரிவினர், தீண்டாமை என்பது சாதி முறையிலிருந்து வேறுபட்டது என்று கருதுகிறார்கள். இந்தக் கருத்தைப் பின்பற்றி இவர்கள் சாதி முறையைத் தாக்காமலேயே தீண்டாமையை ஒழித்துவிட முடியும் என்று கருதுகிறார்கள். மத உணர்வுள்ள இந்து, சாதி முறையை ஒழிப்பதற்கு எதிராக இருப்பது போலவே, தீண்டாமையை ஒழிப்பதற்கும் எதிராகவே இருக்கிறார். சமூக சீர்திருத்தத்தை ஒரே கட்டமாக நடத்துவதை எதிர்ப்பதைப் போலவே, இரண்டு கட்டமாக நடத்துவதையும் அவர் எதிர்க்கிறார். ஆனால், அரசியல் ஈடுபாடு கொண்ட இந்துவுக்கு இந்தக் கருத்து மிகவும் பிடித்திருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஓர் இந்து தான் உண்மையில் நடந்து கொள்வதைவிட மிகச் சிறந்த ஜனநாயகவாதி என்று உலக அரங்கில் காட்டிக் கொள்வதற்கு இது வாய்ப்பளிக்கிறது. இரண்டாவதாக, சாதியை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால் சாதி இந்துக்கள் காங்கிரசைக் கைவிட்டுவிடும் ஆபத்து இருக்காது. சாதி முறைக்குத் தீங்கு இல்லாமல் தீண்டாமையை ஒழிக்க விரும்புவோர், மநுஸ்மிருதி பத்தாம் அத்தியாயம் நான்காம் சுலோகத்தைத் தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் கொள்கிறார்கள். இந்த சுலோகத்தில் மநு, நான்கு வர்ணங்கள்தான் உண்டு என்றும், அய்ந்தாவது வர்ணம் இல்லை என்றும் கூறுகிறார். இந்த சுலோகத்தின்படி, தீண்டத்தகாதவர்கள் நான்காம் வர்ணத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் சூத்திரர்களில் ஒரு பகுதியினர் என்றும், சூத்திரர்களைத் தொடுவதற்குத் தடை இல்லாததால் – தீண்டத்தகாதவர்களைத் தொடுவதற்கும் தடை இருக்க முடியாது என்று பொருள் கூறப்படுகிறது. அரசியல் ஈடுபாடு உள்ள இந்துவுக்கு இவ்வாறு பொருள் கூறுவது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், இது மநு கூற விரும்பும் கருத்துக்குப் பொருந்துவதாக இல்லை. இந்த சுலோகத்துக்கு மற்றொரு விதமாகவும் பொருள் கூற முடியும். நான்கு வர்ணங்களுக்கு வெளியே உள்ள இந்த சமுதாயங்களை, அய்ந்தாம் வர்ணமாக ஏற்றுக் கொண்டு, சதுர்வர்ண முறையைப் பஞ்சவர்ண முறையாக விரிவுபடுத்த மநு தயாராக இல்லை என்பதும் இதன் பொருளாக இருக்க முடியும். அய்ந்தாம் வர்ணம் இல்லை என்று அவர் கூறுவதன் பொருள், இந்த சமுதாயம் நான்கு வர்ணங்களுக்கு பதில் அய்ந்து வர்ணங்களைக் கொண்டதாகச் செய்வதன் மூலம், நான்கு வர்ணங்களுக்கு வெளியில் உள்ள மக்களை இந்து சமூகத்தில் இணைத்துவிட விரும்பவில்லை என்பதேயாகும். அவர் கூற விரும்பிய கருத்து இதுதான் என்பது, ‘பாஹ்யர்கள்' அல்லது ‘வர்ண பாஹ்யர்கள்' என்ற ஒரு பிரிவைப் பற்றி அவர் பேசுவதிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது. எல்லா மக்களையும் நான்கு வர்ணங்களுக்குள் சேர்த்துக் கொள்ள மநு விரும்பியிருந்தால், சிலரை ‘வர்ண பாஹ்யர்கள்' என்று பேச காரணம் இல்லை. உண்மையில் வர்ண பாஹ்யர்களில் இரண்டு உட்பிரிவுகளை அவர் குறிப்பிடுகிறார். இந்த உட்பிரிவுகளை ‘ஹீனர்கள்' என்றும் ‘அந்த்யோவாசின்கள்' என்றும் அவர் அழைக்கிறார். இந்த உண்மைகளை வைத்துப் பார்க்கும்போது, மநுஸ்மிருதி சுலோகத்துக்குக் கூற முயலும் பொருள், தீவிர மதப் பற்றுள்ள இந்துவை ஏமாற்றிவிட முடியாது. தீண்டாமையைப் பின்பற்றுவது மநுஸ்மிருதிக்கு முரணானது என்றும், அதை ஒழிப்பது இந்து மதக் கோட்பாடுகளுக்கு முரணானது அல்ல என்றும் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். மநுஸ்மிருதிக்கு இவ்வாறு பொருள் கூறி எடுத்து வைக்கப்படும் வாதம், கல்வியறிவில்லாத சாதாரண இந்துவுக்குப் புரியாத அளவுக்கு அறிவு நுட்பம் வாய்ந்தது. அவருக்குத் தெரிந்தது, சமூக உறவுகளில் தாம் பின்பற்ற வேண்டிய மூன்று தடைகள் உள்ளன என்பதே. இந்தத் தடைகள் : 1. சேர்ந்து உண்ணக் கூடாது 2. கலப்புத் திருமணம் செய்யக் கூடாது 3. சில வகுப்பு மக்களைத் தொடக் கூடாது. முதல் இரண்டு தடைகளும் சாதிப் பிரிவினையாகும்; மூன்றாவது தடை தீண்டாமையாகும். சாதி இந்துவுக்குத் தடைகளின் எண்ணிக்கை பற்றிக் கவலையில்லை. தடைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதில் அவர் குறியாயிருக்கிறார். தடையைப் பின்பற்ற வேண்டாம் என்று அவரிடம் கூறினால், ஏன் வேண்டாம் என்று அவர் திருப்பிக் கேட்கிறார். அவருடைய வாதம் இதுதான் : முதல் இரண்டு தடைகளையும் நான் பின்பற்றலாம் என்றால், மூன்றாவது தடையைப் பின்பற்றுவதில் என்ன தவறு? உளவியல் ரீதியாக சாதியும் தீண்டாமையும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒருங்கிணைந்த முறையாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் சாதியில் நம்பிக்கை வைத்திருப்பதேயாகும். இந்தக் கருத்தை வைத்துப் பார்த்தால், சாதி முறையை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கலாம் என்று நம்புவது சற்றும் பயனற்றது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்ற கருத்து தவறானது. இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை. சாதி முறையின் நீட்சியே தீண்டாமை. இரண்டும் பிரிந்து நிற்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன, சேர்ந்தேதான் அவை வீழும். (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் 94) ---------------------------------------------------- சாதி அமைப்பை உயிர்த் துடிப்புடன் இயங்க வைக்கும் அங்கீகாரம் எது? -அம்பேத்கர்- சட்டத்தின் மூலமோ, பகுத்தறிவு ரீதியான உத்திகளாலோ தீண்டாமை மறைந்து விடாது என்பதற்கு மற்றொரு காரணம் உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்து சமூக அமைப்பு படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு, படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பிலிருந்து வேறுபடுகிறது. முன்னது பலவீனமானது. பின்னது, தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்டு நிலைக்கும் திறன் கொண்டது. சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பில் கீழ்நிலைப் பிரிவுகள் ஒன்று சேர்ந்து அமைப்பைக் கவிழ்த்துவிட முடியும். அவற்றில் எதற்கும் அந்த அமைப்பைப் பாதுகாப்பதிலும் விருப்பம் இல்லை. ஆனால், படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை நிலவும் அமைப்பில், பாதிக்கப்பட்ட பிரிவுகள் ஒன்றிணைந்து பொதுவான தாக்குதல் நடத்தும் வாய்ப்புக்கு இடமேயில்லை. இத்தகைய அமைப்பில் பாதிக்கப்பட்ட பிரிவினர் பொதுவான நிலையில் இல்லை. உயர்ந்தது, தாழ்ந்தது என்ற நிலைகள் மட்டுமே உள்ள போதுதான் இவ்வாறு இருக்க முடியும். படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை முறையில் மிக உயர்ந்தவர்கள் (பார்ப்பனர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே, சற்று அதிகம் உயர்ந்தவர்கள் (சத்திரியர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே உயர்ந்தவர்கள் (வைசியர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே, தாழ்ந்தவர்கள் (சூத்திரர்கள்) உள்ளனர். அவர்களுக்கும் கீழே, அதிகம் தாழ்ந்தவர்கள் (தீண்டத்தகாதவர்கள்) உள்ளனர். இவர்கள் அனைவருமே மிக உயர்ந்தவர்களிடம் மனத்தாங்கல் கொண்டவர்கள்தாம்; அவர்களைக் கீழே வீழ்த்திவிட விருப்பம் உள்ளவர்கள்தான். ஆனால், இவர்கள் ஒன்றிணைய மாட்டார்கள். சற்று அதிகம் உயர்ந்தவன் மிக உயர்ந்தவனை ஒழித்துவிட ஆவலாயிருக்கிறான். ஆனால் அவன், உயர்ந்தவனுடனும் தாழ்ந்தவனுடனும் மிகத் தாழ்ந்தவனுடனும் இணைய விரும்பவில்லை. அவர்கள், தன்னுடைய நிலையை அடைந்து தனக்கு சமமாகிவிடுவார்களோ என்று அவன் நினைக்கிறான். உயர்ந்தவன் தனக்கு மேலே உள்ளவனான சற்று அதிகம் உயர்ந்தவனை வீழ்த்திவிட விரும்புகிறான். ஆனால், அவன் தாழ்ந்தவனுடனும் மிகத் தாழ்ந்தவனுடனும் சேர விரும்பவில்லை. அவர்கள் தனது சமூக நிலைக்கு உயர்ந்து தன்னுடன் சமநிலைப் பெற்று விடுவார்களோ என்று அவன் அஞ்சுகிறான். தாழ்ந்தவன், மிக உயர்ந்தவனையும், சற்று அதிகம் உயர்ந்தவனையும், உயர்ந்தவனையும் கீழே தள்ளி விட விரும்புகிறான். ஆனால் அவன் மிகத் தாழ்ந்த வனுடனும் கூட்டுச் சேரமாட்டான். மிகத் தாழ்ந்தவன் சமூக நிலையில் உயர்ந்து தனக்குச் சமமாகி விடுவான் என்று அவன் அஞ்சுகிறான். படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை நிலவும் அமைப்பில், சமூகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் உள்ள பிரிவைத் தவிர, முற்றிலும் உரிமைகள் இல்லாதவர்கள் என்று எந்த வகுப்பினரும் இல்லை. மற்ற வகுப்புக்குகூட, மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்புடன் ஒப்பிடும்போது, ஓரளவு உரிமைகள் உள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் உரிமைகள் இருப்பதால், இந்த சமூக அமைப்பைப் பராமரிப்பதில் ஒவ்வொரு வகுப்புக்கும் அக்கறை இருக்கிறது. தீண்டாமை, தீண்டத்தகாதவர்களுக்கு கெடுவாய்ப்பாக இருக்கலாம். ஆனால், இந்துக்களுக்கு அது ஒரு நல்வாய்ப்பே என்பதில் சந்தேகம் இல்லை. தங்களைவிட தாழ்ந்தவர்களாகக் கருதுவதற்கு ஒரு வகுப்பை, அது அவர்களுக்குக் கொடுக்கிறது. யாருமே முக்கியமானவர்களாயில்லாத ஓர் அமைப்பையும்; எல்லோருமே முக்கியமானவர்களாக உள்ள ஓர் அமைப்பையும் இந்துக்கள் விரும்பவில்லை. தாங்கள் முக்கியமானவர்களாகவும் மற்றவர்கள் முக்கியமில்லாதவர்களாகவும் உள்ள ஓர் அமைப்பையே அவர்கள் விரும்புகின்றனர். தீண்டத்தகாதவர்கள் முக்கியமில்லாதவர்கள். இது, இந்துக்களை முக்கியமானவர்களாக ஆக்குகிறது. தீண்டாமை முறை இந்துவின் இயல்பான பெருமை உணர்வுக்குத் தீனி போட்டு, அவர்கள் தங்களைப் பெரியவர்களாக நினைக்கவும், பெரியவர்களாகக் காட்டிக் கொள்ளவும் உதவுகிறது. இந்துக்கள், முக்கியமாக குறுகிய சிந்தனை உள்ளவர்களாக இருக்கும் இப்பெரும்பான்மை மக்கள், தீண்டாமை முறையைக் கைவிடும் வாய்ப்பு ஏன் இல்லை என்பதற்கு இது மற்றொரு காரணமாகும். இந்து சமூக அமைப்பு முழுவதும் குறிப்பாக, சாதி முறை ஒழிந்தால்தான் தீண்டாமை மறையும். இது சாத்தியமா? ஒவ்வொரு அமைப்பு முறையும் ஏதேனும் ஓர் அங்கீகாரத்தை ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது. ஓர் அமைப்பு முறைக்கு இவ்வாறு உயிர் ஆற்றல் அளிக்கும் அங்கீகாரங்கள் மூன்று வகைப்படும். அவை சட்ட, சமூக, மத அங்கீகாரங்கள் ஆகும். சாதி முறைக்குப் பின்னால் உள்ள அங்கீகாரத்தின் தன்மை என்ன? கெடுவாய்ப்பாக, சாதி முறையின் பின்னே உள்ள அங்கீகாரம் மத அங்கீகாரம் ஆகும். வர்ண முறையின் புதிய வடிவமான சாதி முறை, தனது அங்கீகாரத்தை இந்து மதத்தின் புனித நூலாகவும், தவறுதல் அற்றதாகவும் கருதப்படும் வேதங்களிலிருந்து பெறுகிறது. கெடுவாய்ப்பாக என்று நான் கூறுவதற்குக் காரணம், மத அங்கீகாரம் பெற்ற எதுவும், புனிதமானதாகவும் நிரந்தரமானதாகவும் ஆகிவிடுகிறது என்பதே. ஓர் இந்துவுக்கு சாதி புனிதமானது, நிரந்தரமானது. சாதி மறைந்து போக முடியாது என்றால், தீண்டாமை ஒழிந்து போகும் என்ற நம்பிக்கைக்கு இடம் ஏது? (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் 101) ----------------------------------------------------- பார்வையிட்டவர்கள் breast augmentation தற்போது பார்வையிடுவோர் வாசகர் நாடுகள் free counters படைப்புகள் அனுப்ப, ஏனைய தொடர்புகளுக்கு: E-mail: editor.uyirmei@hotmail.com பனிமொழி -தமயந்தி- பனிமொழி -தமயந்தி- படத்தில் கிளிக் செய்து காண்க


உயிர்மெய் Jul 26, 2011 ஐரோப்பிய நாடுகளில் மதத் தீவிரவாதம்: நார்வேப் படுகொலைகள் - பவானி ஐரோப்பிய நாடுகளில் கிறித்தவ தீவிரவாதம் ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் கிறித்தவ தீவிரவாத, வெள்ளை இளைஞன் ஒருவனால் நார்வேயில் நடத்தப்பட்ட ஒரு படுகொலைச் சம்பவம் "அமைதி மிக்க நாடாகத் தம்மை "அடையாளம் காட்டிக் கொள்ளும் இந்த நாட்டில் வாழும் பிற இன, நிற, மத மக்களைப் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கொலை நடந்து கொண்டிருந்த அதே வேளையிலும், செய்தி முழுமையாக வெளிவராதும் இருந்த நேரத்தில் இஸ்லாமிய இயக்கங்களைச் சந்தேகத்திற்குள்ளாக்கி பி.பி.சி, ஸ்கை உள்ளிட்ட டி.வி. நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. கொலையில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகள் தான் என்று விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால், அனைவரும் திகைப்படையும் வண்ணம் இந்தக் கொலைகளைச் செய்தது ஒரு வெள்ளையர், அதுவும் நார்வே நாட்டைச் சேர்ந்தவன் என்ற செய்தி வெளி வந்தவுடன் பொது விவாதங்கள் இறந்தவர்களுக்கு இரங்கற்பா பாடும் நோக்கில் திசை திரும்பியுள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதத்தைச் சாடும் ஒருவரும் ஐரோப்பியர்களின் இந்த வெள்ளையின கிறித்தவத் தீவிரவாதத்தை சாடுவதாகக் காணோம். நார்வே படுகொலைகள் நார்வே நாட்டில் வெள்ளையின மேலாதிக்கத்தையும் இன்று இயங்கும் தீவிரவாத இயக்கம் ஒன்றின் உறுப்பினராகக் கருதப்படும் ஆண்டர்ஸ் பெரிங் பெர்விக் (Anders Behring Breivik) ) என்ற இளைஞன் தொண்ணூறு பேரை துப்பாகியால் சுட்டும் வெடிகுண்டு வைத்தும் படுகொலை செய்திருக்கிறான். கொலை செய்யப் பட்டவர்கள் அனைவரும் நார்வே தொழிற்கட்சியின் இளைஞர் அணியினர். தொழிற்கட்சி ஒரு சமுக ஜனநாயகக் கட்சி. அதன் இளைஞர் அணியினரை பெருவாரியாகப் படுகொலை செய்ததற்கு அவன் சொன்ன காரணம்: “இந்த இளைஞர்கள் உருப்படியான வெள்ளையர்களும் இல்லை, கிறித்தவர்களும் இல்லை, இவர்களெல்லாம் இருப்பதைவிட இறப்பதே மேல்”. இத்தகைய மத இன வெறியின் ஊற்றுமூலம் ஐரோப்பாவின் கடந்த கால வரலாற்றில் அடங்கியிருக்கிறது ஐரோப்பிய இனவெறியும் !! வெள்ளை நிறவெறியும் !! ஐரோப்பியர்களின் பழைய வரலாற்றையும், தற்கால நடைமுறைகளையும் அறியாதவர்களுக்கு இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ஒரு அதிர்ச்சி தரக் கூடிய விஷயம். ஆனால், இங்கே ஐரோப்பாவில் பெர்விக் போன்ற நபர்கள் நிறையவே இருக்கின்றனர். அவரைப் போன்றவர்கள் செயல்படும் இயக்கங்கள் பல வெளிப்படையாகவே இயங்குகின்றன. இந்த இயக்கங்கள் கிறித்தவப் புகழ்பாடும் மத்திய காலச் சிலுவைப் போர்களிலிருந்தும், ஐரோப்பிய மேட்டிமையின் தொடக்கமான காலனியாதிக்க மேலாண்மையிலிருந்தும், சமீபத்தில் வாழ்ந்த ஹிட்லர் போன்ற நாஜிகள், பாசிஸ்டுகளின் போதனைகளிளிருந்தும் தமது உற்சாகத்தை பெறுகின்றன. ஐரோப்பாவில் நிலவும் புரட்சிகர அரசியல் வெற்றிடத்தில் இந்த இயக்கங்கள் வளர்கின்றன. அதிதீவிரப் பிரிட்டிஷ் வெள்ளையினத் தீவிரவாத இயக்கமான ஆங்கிலேயப் பாதுகாப்புக் கழகம் (English Defence League), ஐரோப்பிய இஸ்லாமிய எதிர்ப்புச் சங்கம் (Stop the Islamification of Europe (SIOE), போன்றவை அகில ஐரோப்பாவிலும் வெள்ளையின மேட்டிமையை உயர்த்திப் பிடிக்கும் அதிதீவிர இயக்கங்களில் மிகவும் முக்கியமானவை. அதன் மூளையாக இயங்குபவை. இதன் முக்கியக் கோரிக்கைகள் கிறித்தவத்தின் உயர்வு, வெள்ளையின உயர்வு என்பது மட்டுமே. இந்த இயக்கங்களை நேரடியாகக் கண்டித்து ஒடுக்கும் ஜனநாயக வலுவை ஐரோப்பிய அரசியல் இயக்கங்கள் நவ காலனியமாதலின் தொடக்கமான எண்பதாம் ஆண்டுகளிலேயே இழந்து விட்டன. எடுத்துக்காட்டாக, "ஜனநாயக உணர்வு" மிக்க நாடுகளில் முதன்மையாகக் கருதப்படும் பிரிட்டனில் தேசியக் கட்சி (British National Party) தற்சமயம் ஒரு ஒட்டு வங்கி என்ற நிலையை விட்டு மாறித் தானே தேர்தலில் நின்று பிற கட்சியினரின் வெற்றி தோல்விகளைப் பாதிக்கும் வல்லமை மிக்க ஒரு அரசியல் கட்சி என்ற பெயரைப் பெற்று விட்டது. இதே போலவே, பிற ஐரோப்பிய நாடுகளில் இப்படிப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக மாறி ஆட்சிக்கு வரும் நிலையில் இருக்கின்றன. ஜனநாயகம், பல்லின அமைதி (Multiracial co-existence) பற்றி உலகிற்குப் போதிக்கும் ஐரோப்பிய தலைவர்கள், அரசியல் இயக்கங்கள், அதிலும் குறிப்பாக ஐரோப்பிய சமுக ஜனநாயக கட்சிகள் தங்கள் நாட்டில் நடந்து வருவது பற்றி தெரிந்தே மிகவும் அமைதியுடன் இருந்து வருகிறார்கள். இப்படி ஐரோப்பாவின் பல நாடுகளில் வளர்ந்து வரும் இத்தகைய இயக்கங்கள் ஒரு விதத்தில், தம்மை மார்க்சிய விரோத, கம்யுனிச விரோத, சிறுபான்மை எதிர்ப்பு இயக்கங்கள் என்று வெளிப்படையாகப் பிரகடனம் செய்து செயல்படுகின்றன. இதனால், பெரிய கட்சிகள் இவற்றை நேரடியாக எதிர்ப்பதில்லை, மாறாக முடிந்த வரை பயன் படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாத கட்சிகளாக மாறி விட்டன. பெயரளவுக்கு இன்றைய ஐரோப்பிய அரசுகள் மதச் சார்பற்ற அரசுகள் என்று தங்களைக் கூறிக் கொண்டாலும் அவைகளும் மதவாத இயக்கங்கள், வெள்ளையினவாதத்தை முன்மொழிந்து செயல்படும் பல இயக்கங்களை ஏதோ ஒருவகையில் ஆதரித்துத் தங்கள் ஓட்டுவங்கியை வளர்த்துக் கொள்ளவே செய்கின்றனர். ஐரோப்பிய அரசியல் கட்சிகளின் பச்சோந்தித்தனம் கடந்த நூற்றாண்டில் கொடியவன் ஹிட்லர் அத்தகைய வெள்ளை நிற, கிறித்தவ மதத் தீவிரவாதிகளைப் பயன்படுத்தியே ஆட்சிக்கு வந்தான். அவனைப் பின்தொடர்ந்து இன்றும் பல கட்சிகள் அதைச் செய்து வருகின்றன, ஆனால் வேறுபாடு என்னவென்றால், ஹிட்லர் செய்த அதே வேகம் இன்று சாத்தியம் இல்லை, ஆனாலும் பல நிறவெறிக் குழுக்கள் ஐரோப்பாவின் செல்வாக்கு மிக்க பெரிய கட்சிகளில் உட்பிரிவுகளாக இருக்கின்றன. இத்தகைய பிரிவினர் தற்சமயம் பெரும் அளவில் வளர்ந்தும் வருகின்றனர். ஐரோப்பாவின் ஒவ்வொரு நாட்டிலும் இப்படிப்பட்ட இயக்கங்கள் இருக்கவே செய்கின்றன. எந்தொரு புரட்சிகர இயக்கங்களுக்கும் அணியோ, செல்வாக்கோ இல்லாத இன்றைய ஐரோப்பாவில், எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் இந்த நிலையை எதிர்க்கும் துணிச்சல் இன்றி ஒரு பச்சோந்தித்தனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது வெளிப்படை.. பெர்விக் பெர்விக் என்ற இந்தக் கொலைகாரன் நார்வேயின் மேட்டுக்குடியினர் அதுவும் அரசகுடும்பத்தினர் படித்த அதே பள்ளியில் படித்தவன். கூடவே, ஒரு மார்க்சிய எதிர்ப்பு, கம்யுனிச எதிர்ப்பு போராளி என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டவன். வெள்ளையினத்தின் மேன்மையில் முழு நம்பிக்கை கொண்டவன். இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற மதங்கள், இனங்களின் ஆதிக்கம் ஐரோப்பாவில் கூடிவிட்டதாகவும் அதில் இருந்து ஐரோப்பாவைப் பாதுகாக்கத் தம்மைத் தயாரித்து வருவதாகவும் ஒரு பெரும் கொள்கைப் பிரகடனத்தை (1518 பக்கங்கள்) அவன் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. பெர்விக் தான் ஒரு விவசாயி என்று பதிவு செய்து கொண்டு சுமார் ஒன்பது டன் எடையுள்ள அமோனியம் நயிட்ரேட் உப்பை வாங்கிச் சேர்த்துள்ளான். கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு விற்பனை செய்யப்படும் இந்த நயிட்ரேட்உப்பு வெள்ளையினத்தவர் என்பதால் தாராளமாகக் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஏராளமான வெடிபொருளைச் இவன் செய்திருக்க முடியும். ஒரே ஒரு கார் குண்டு மூலம் நார்வே நாட்டுப் பிரதமர் அலுவலகத்தை இவன் தகர்த்திருக்கிறான். நாட்டின் பிரதமர் அலுவலகம் என்பது ஒன்றும் சாதாரணமான கட்டிடமாக இருக்க வழியில்லை. இருந்தும் இப்படி ஒரு தாக்குதல் சாத்தியமாகியுள்ளது எப்படி என்பது தெரியவில்லை. மீதம் இருக்கும் குண்டுகள், அவரது கூட்டாளிகள் குறித்து இதுவரை எந்த விவரமும் இது வரை வெளி வரவில்லை. தனிநபராக இருந்து என்பது பேரை துப்பாக்கியால் சுட்டது இதுவரை ஹாலிவுட் திரைப்படங்களில் கூட நடந்ததில்லை. இருந்தும் இதுவரை இவன் ஒருவனே தாக்கினான் என்று இங்கே நார்வேயில் செய்திகள் வெளியாகியுள்ளன. பெர்விக் ஒரு வேளை தண்டிக்கப்பட்டால் கூட, நார்வே நாட்டுச் சட்டப்படி அவனுக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் இருபத்து இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே வழங்கப்படும். அவன் பின்னாளில், ஏதோ ஒரு அரசியல் கட்சியின் தலைவராகக் கூட வளர முடியும். இதுதான் இங்கே உள்ள நிலைமை. ஐரோப்பிய வெள்ளையின வெறியின் வரலாறு காலனிய வாதிகள் கிறித்தவ மதத்தைக் காட்டித்தான் காலனிய ஆட்சியை உலகம் எங்கும் நிறுவினார்கள். அதில் வெற்றிகண்டபின் பல்வேறு வழிகளில் இன்றும் அதனைத் தொடர்ந்தும் செய்து வருகிறார்கள். அமெரிக்காவின் இரண்டு கண்டங்களிலும் பரவிக் குடியிருந்த லட்சக் கணக்கான மக்களைக் கொன்று ஒழிக்க கிறித்தவப் பாதிரிகள் ஐரோப்பியப் படைகளுடன் சமமாக நின்று உதவினர், தங்கள் மதத்தின் மேட்டிமையைக் காட்டி வெள்ளையின அப்படியொரு கொடூர ஆட்சியை நிறுவினர். கிறித்தவ மதத் தீவிரவாதிகள் காலனிய ஆட்சி தொடங்கி இன்று வரை அழித்து ஒழித்த இனங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமானால் அமெரிக்க வரலாற்றை ஒருவர் படித்து அறிய வேண்டும். பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கி, உலகின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமான பேர் வாழ்ந்த பூர்வகுடிகளான மாயர்கள் உள்ளிட்ட இனங்கள் இன்று வெள்ளையின மக்கள் மட்டுமே வாழும் நிலையை ஏற்படுத்தியிருப்பது கிறித்தவ மதத் தீவிரவாதிகளின் சாதனைகளில் ஒன்று. உலகின் வேறு எந்தவொரு மதமும் இத்தகைய ஒரு பேரழிவை மக்கள் மீது நிகழ்த்தியிருப்பதற்குச் சிறிதும் ஆதாரமில்லை. கொலம்பஸ் அன்றைய கிறித்தவப் பேரரசி என்ற பெயர் பெற்ற ஸ்பெயின் நாட்டின் அரசி இசபெல்லாவின் பண உதவியுடன் தன் அழித்து ஒழிப்புப் பணியை நடத்தினான். அவன் பெற்ற கப்பல், பணம் அனைத்தும் ‘இந்தியாவின் பெருஞ்செல்வத்தை தேடிச் செல்லவும், கிறித்தவ மேட்டிமை உலகிற்கு நிருவவுமே அவனுக்கு வசங்கப்பட்டது’. அப்படிப் பெருஞ் செல்வத்தைத் இன்றும் தேடிச்செல்லும் ஐரோப்பிய அரசுகள் அவன் அடியொற்றிச் செல்வதில் வியப்பேதும் இல்லை. அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த, சிவப்பு இந்தியர்களைக் கொன்று ஒழிக்க கொலம்பசுக்கு அதிகாரம் வழங்கி ஒத்துழைத்தது கிறித்தவ மதத் தலைமையிடமான வத்திகனும் போப்பும். அமெரிக்காவைப் போலவே, ஆப்ரிக்காவிலும் பல நாடுகளில் கிறித்தவ மதத் தீவிரவாதிகள் காலனிய ஆட்சியாளர்களுடன் இணைந்து முதலில் பலரை அடிமை வாணிகத்திற்காக பிடித்துச் சென்றார்கள். தங்கள் ஆட்சியை ஏற்படுத்த அவர்கள் சொன்ன காரணம்- கிறித்தவர்கள் உயர்ந்தவர்கள், வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் பிற இனங்கள் அனைத்தும் தாழ்ந்தவர்கள், அந்த இனங்களை திருத்த வேண்டும் என்பதே. கொலம்பஸ் தேர்நெதேடுத்த கொலைகார வழியில் நேரடியாகச் செயல்படாவிட்டலும், இன்றைய ஐரோப்பிய அரசுகள், அரசியல் கட்சிகள், மதவாத இயக்கங்கள் அதே தீவிரவாதத்தை நம்பியே தமது பணிகளைச் செய்து வருகின்றன. அதன் சமீபத்திய வெளிப்பாடுதான் நார்வே நாட்டில் நடந்த படுகொலைகள் என்றால் அது மிகையல்ல. இப்படிச் வெள்ளையின தீவிரவாதத்தை உற்பத்தி செய்து வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் முக்கியமானவை இன்று புதிதாக பெயர்பெற்றுள்ள ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்சு, ஹாலந்து, போன்ற நாடுகளே. முதல் உலக யுத்தத்திற்கு முன்பு இந்த நாடுகளுக்கு பிற பெயர்கள் இருந்தன. பின்னாளில், மதத் தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு தார்மீக அடிப்படையை அமைத்துத் தந்ததில் இவர்கள் முக்கியமானவர்கள். கொன்றது போக, மிஞ்சியவர்களைக் கிறித்தவர்களாக மாற்ற தீயர மத மாற்றம் உள்ளிட்ட பணிகளைச் செய்தவர்களும் இவர்கள்தான். ஏறக்குறைய உலகின் பெரும் பகுதியையே ஒரு அடிமை நிலைக்கு கொண்டு வந்ததும் அவர்களின் மதக் கடமையில் ஒன்று. அத்தகைய பெருமை மிக்க கிறித்தவம் இன்று ஐரோப்பாவில் மீள் உருவம் பெற்று புதிய வகையில் வருகிறது என்பதே பெர்விக் நடத்திய இந்தத் தாக்குதல். ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தர்ப்பவாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பலமான நாடான ஜெர்மனியின் ஆட்சித் தலைவரான ஏஞ்சலா மேற்கல் (Anjela Merkel) ஐரோப்பாவில் பல இன மக்கள் சேர்ந்து வாழும் முறைமை தோல்வியடைந்து விட்டது என்று சமீபத்தில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் மாநாட்டில் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியைத் தள்ளிய ஹிட்லர் இதையேதான் வேறுவார்த்தைகளில் சொன்னான். அவன் தொடங்கிய போரினால், கடும் இழப்புகளையும் சொல்லொணாத் துயராங்களையும் ஜெர்மானியர்கள் அடைந்தார்கள். ஆனால், இன்று தமது சமீப வரலாற்றை மறந்து மீண்டும் இனவெறியின் பாதையில் ஜேர்மனிய அரசியல் கட்சிகள் தமது பயணத்தை தொடங்கியுள்ளனர். அதேபோலவே, பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன், இனிமேல் பிரிட்டனில் பல்லினக் கலாச்சாரம் (multiculturalism) வெற்றிகரமாக இயங்கும் என்பதைத் தாம் நம்பவில்லை என்று அறிவித்துள்ளார். இப்படி இவர் பல்லினக் கலாச்சாரம் சாத்தியமில்லை என்று சொல்வதன் பொருள் பிரிட்டனிலும் ஐரோப்பாவிலும் கிறித்தவ, வெள்ளையின மேட்டிமை ஒன்றுதான் சரியான வழிமுறை என்பதாகும். ஐரோப்பாவின் பல நாடுகள் இனித் தங்கள் நாடுகளில் தமது பழைய காலனி நாடுகளில் இருந்து அரசியல் காரணத்தால் புலம் பெயரும் அகதிகளை உள்ளே விடாத வகையில் சட்டங்களை இயற்றிவருவதுடன், இங்கே இருப்பவர்களையும் வெளியேற்றப் பாடுபட்டுவருகின்றனர். இது இவர்களே அறிவித்துக் கொண்ட தமது சர்வதேசக் கடமையிலிருந்து பின்னோக்கிப் பயணம் செய்வதையே காட்டுகிறது. உதாரணமாக, ஜெர்மனியிலும், பிரிட்டனிலும் இனி அந்நாட்டு மொழிப் பரிட்சையில் தேர்வு பெற்றால் மட்டுமே இனி அகதிகளின் குடியுரிமை மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகப் பெரிய ஐரோப்பிய அரசியல் கட்சிகள் எல்லாம் இப்படி வெளிப்படையாக வெள்ளையின மேட்டிமையை மட்டுமே நம்பிக் கட்சி நடத்த வேண்டும் என்ற நிலைக்கு மாறியுள்ளது. எடுத்துக்காட்டாக இங்கே சில. ஜெர்மனி ஜெர்மனியில் ஹிட்லரின் அடிச்சுவட்டில் இயங்கும் பல குழுக்கள் வெளிப்படையாகவே இயங்குகின்றன. வெளிப்படையாக, பாசிசக் கட்சிகள் இயங்க முடியாது என்ற போதும், அவை பிற கட்சிகளின் குழுக்களாகவும், கலை கலாச்சார நிறுவனங்களாகவும், ரவுடிக் கும்பல்களாகவும் இயங்கி வருகின்றன. ஹிட்லரின் நினைவைத் தொடர்ந்து பரப்பி வருவதுடன் ஜெர்மனியர்களை மட்டுமின்றி உலகம் எங்கும் ஒரு வெள்ளையின ஆரிய மேலாட்சிக்கு அனைவரும் தயாராக வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆஸ்திரியா இந்த நாடு முதல் உலகப் போருக்கு முன் பெரும் பேரரசாக விளங்கிய நாடு. ஏறக்குறைய ஐரோப்பாவின் பெரும் பகுதியை தம கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்தப் பேரரசு தொடர்ந்து வந்த இரண்டு உலகப் போர்களில் பல்பிடுங்கப்பட்ட கிழமாக மாற்றப்பட்டது. எனினும், இந்த நாட்டில் மதவாத வெள்ளையின மேலாதிக்கக் கட்சிகள் தொடர்ந்து இயங்கவே செய்கின்றன. அமைதியான நாடுகளில் ஒன்றாக வருணனை செய்யப் படும் இந்த நாட்டில் ஹிட்லரின் புகழ் பாடும் ஜோக் ஹெய்தர் (Jorg Heider) என்பவரின் தலைமையில் அமைந்த சுதந்திரக் கட்சி - Freedom party (FPO) என்று அழைக்கப்படும் மதவாதக் கட்சி சுமார் 27% வாக்குகளைப் பெற்று தற்சமயம் ஆட்சியில் இருக்கிறது. இதன் கொள்கைகளில் முக்கியமானது: வெள்ளையின கிறித்தவ மேட்டிமை, ஐரோப்பாவில் குடியேறும் பிற இனங்களை எதிர்ப்பது என்பதே. பெல்ஜியம் காட்டுமிராண்டிகளின் தலைமை என்ற ஒரு பதவி இருக்குமானால் அதற்குத் தகுதியுடைய ஐரோப்பிய நாடு இந்த நாட்தின் ஆட்சியாளர்கள் பாதிரிகளுக்கு உண்டு. ஆப்ரிக்காவின் காங்கோ போன்ற வளம் மிக்க நாடுகளை ஆண்ட இந்த ஏகாதிபத்தியம் செய்த படுகொலைகள் எண்ணிலடங்காதவை. பெயரைக் கேட்டாலே அருவருப்பைத் தரும் அளவுக்கு பெல்ஜியம் ஒரு கொடுரமான நாடு. இந்த நாட்டில் ஃபிலமிஷ் கட்சி என்று அழைக்கப்படும் ஒரு இனவாதக் கட்சி ஒரு செல்வாக்கு மிக்க கட்சியாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் சுமார் பதினைந்து வீதத்திற்கும் அதிகமான இடங்களை பெற்ற செல்வாக்கு மிக்க கட்சியாக உள்ளது. இது வளரும் வேகத்தில் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வந்தாலும் சந்தேகப்பட வேண்டியதில்லை. இதுவும் ஏறக்குறைய ஆஸ்திரியாவின் சுதந்திரக் கட்சி போன்றதே. நெதர்லாந்து டச்சு ஏகாதிபத்தியம் என்று அறியப்பட்ட இந்த நாடு இந்தியா, இலங்கை, இந்தோனேசிய போன்ற பல நாடுகளை அடிமைப் படுத்தி ஆண்ட நாடு. ஆப்ரிக்க அடிமை வாணிபத்தில் செல்வம் கொழிக்கபெற்று இன்று உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றாக இருக்கும் இங்கே வெள்ளையின மேலாதிக்கக் கட்சிகள் பெரும் செல்வாக்கு அடைந்து ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் உள்ளன. இஸ்லாமியர்களின் வணக்கத்திற்குரிய குர்-ஆன் நூலைத் தொடர்ந்து அவமதித்துப் பேசுவதையே தன் முழு நேரமாகக் கொண்டிருக்கும் கீத் வில்தர் (Geert Wilders) என்பவரின் தலைமையில் அமைந்த சுதந்திரக் கட்சி 2011 தேர்தலில் பெரும் வெற்றி பெற்று நாட்டின் பெரும் நகர சபைகளைக் கைப்பற்றியுள்ளது. நாடாளுமன்றத்தில் மொத்தத இடமான 150 க்கு 24 இடங்களைக்க் கைப்பற்றியுள்ளது. வெளிப்படையான இஸ்லாமிய எதிர்ப்புத் திட்டங்கள், வெள்ளையின மேட்டிமைத் திட்டங்கள் அறிவித்துச் செயல்படுத்தப்படும் என அந்தக் கட்சி வெளிப்படையாகவே அறிவித்து உள்ளது. இவருக்கு ஐரோப்பா முழுதும் செல்வாக்கு வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பாடம் இன்றைய ஐரோப்பாவின் பல நாடுகளில் கிறித்தவ மதத் தீவிரவாதிகால் வளர்ந்து வரும் நிலைமை இந்திய நிலைமைக்கு ஒப்பானது. இந்தியாவில் மதவாதக் கட்சியான, பாரதிய ஜனதா தான் ஆட்சியைப் பிடிக்கும் முன்பு நடந்த கடைசித் தேர்தலில் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது. ஆனாலும், இறுதியில் முஸ்லிம் எதிர்ப்பினை மட்டுமே நம்பி வெற்றியடைந்து ஆட்சியையும் பிடித்து விட்டது. "மதச் சார்பற்ற(?) நாடு" எனசொல்லப்பட்ட இந்தியாவில் வெறும் மதவாதத்தை மட்டுமே நம்பி பி.ஜெ.பி போன்ற ஒரு மதவாதக் கட்சி ஆட்சிக்கு வர பிற அரசியல் கட்சிகள் அனைவரும் உடந்தை என்பதை நாம் அறிவோம். இதே நிலை தான் இன்றைய ஐரோப்பாவின் நிலைமை. மதச் சார்பற்ற கட்சிகள் என்று சொல்லிக் கொண்ட காங்கிரசு மறைமுகமாக பி.ஜெ.பி க்கு உதவியது. தி.மு.க, தெலுகு தேசம் போன்ற பிராந்தியக் கட்சிகள் சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டு பி.ஜெ.பி. க்கு நேரடியாகவே உதவினர். இன்று அதே நிலைமைதான் ஐரோப்பாவில் இருக்கிறது. உருப்படியான சமூக ஜனநாயகக் கட்சிகளோ, செயல் ஊக்கமுள்ள தொழிற் சங்கங்களோ , புரட்சிகர இயக்கங்களோ இல்லாத இன்றைய ஐரோப்பாவில் மதவாதக்கட்சிகளுக்குத்தான் பிரகாசமான எதிர்காலம் என்பதை ஆஸ்திரியா பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளின் அரசியல் நிலைமை தெளிவாக்குகிறது. இந்த நாடுகளில் உறுதியாக மதவாதக் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். நார்வேயின் பெர்விக் போன்ற தீவிரவாத இளைஞர்களின் உதவியுடனும், இதர தீவிரவாத இயக்கங்களுடனும் சேர்ந்து இவர்கள் குஜராத் படுகொலைகள் போன்ற சிறுபான்மையின அழித்து ஒழிபுப் பணிகளை இந்தக் கட்சிகள் நிச்சயம் செய்வார்கள். தமிழர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட இன, மத, மொழிச் சிறுபான்மையினர் மற்றும் புலம் பெயர்ந்தோர் கணிசமாகப் பரவி வாழும் பல ஐரோப்பிய நாடுகளில் இப்படிப்பட்ட தீவிரவாதிகளின் வளர்ச்சி எல்லவிதச் சிறுபான்மையினரின் இருப்புக்கே அச்சுறுத்தலாகவும் மாறும். அந்த நாள் நெருங்கி வருகிறது என்று தான் பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஐரோப்பிய ஜனநாயக வாதிகளும், அறிவாளிகளும், மார்க்சியவாதிகளும் இந்த நிகழ்வு எதிர் பார்க்க்கப்பட வேண்டிய ஒன்று என்றும் அதற்கு எதிரான ஜனநாயக இயக்கங்களைக் கட்டமைக்க வேண்டும் என்று நம்புகின்றனர்


thamizharkalமனித உணர்வுகள் இல்லாத தமிழ் இன உணர்வாளர்கள் ? எலி தொல்லை பெரிய தொல்லை பாருங்கோ. வீட்டில் மட்டுமல்ல வயலிலும் இதன் அட்டகாசம் பயங்கரம் தான் போல். சமீபத்தில் தமிழக சட்ட சபையில் தேமுக கட்சியினர் விவசாயிகளுக்கு எலிப் பொறி இனாமாக கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். கால் நூற்றாண்டு முன்பு, என் வீட்டில் அப்பாவின் நண்பர்கள் குடும்பம் எங்கள் குடும்பம் என 4 குடும்பமாக வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றிருந்தோம். அப்பாவுக்கு வேளாங்கண்ணி போனால் உணவகம் பிடிக்காது எங்களுக்கும் அப்படி தான் ஏன் என்றால் இட்லி தான் வாங்கி சாப்பிட வேண்டும் என கட்டளை இட்டு விடுவார். வெளியூர்காரர்கள் என்றால் அந்நியாயமா பில்லை போட்டிடுவான், கண்டது கடியதும் வாங்கி சாப்பிடாதீங்க என கூறி அடுப்பு, பானை, கரண்டி எல்லாம் வாடகைக்கு பிடித்து வேளாங்கண்ணியில் இருந்து வரும் வரை மீனும் சோறும் தான். அந்த சிறுபிள்ளை புத்தி இப்போது எனக்கு வேறுவிதமாக என் மகன்களிடமும் வருவது உண்டு. நாங்கள் ஹோட்டல் சென்றால் எங்கள் மகன்கள் உணவு அட்டவணயை கையில் எடுக்கும் போதே என்னுள் ஒரு எலி ஓட ஆரம்பித்து விடும். ஒரு போதும் கண்டிராத பெயராக தேடுவார்கள். உலகம் எங்கள் நெல்லையிலும் அடங்குவதால் வாயில் பெயர் வராத அனைத்து உலக- உணவு வகைகளும் இங்கு கிடைக்கும். அதன் விலை தான் கொடுமையானதாக இருக்கும் . பல போதும் சாப்பாடு பில்லை என்னவர் என்னிடம் காட்டுவதில்லை. நானும் பார்க்க விரும்புவதில்லை, பின்பு சாப்பிட்ட ருசி என்னை விட்டு ஓடி மறைந்து விடும் என்பதால்! எலிக்கதைக்கு வருகின்றேன். பாட்டியை வீட்டு காவலுக்கு வைத்து விட்டு வேளான்கண்ணி ஆலயம் சென்றிருந்தோம். நடு இரவில் நடப்பது போல் ஒரு சத்தம் கேட்டுள்ளது. பாட்டியும் பயந்து போய் பக்கத்து வீட்டு வைத்தியரை அழைக்க அவர் எங்க ஊர் ஆட்களை எல்லாம் அழைத்து கம்பும் தடியுமாக வீடு முழுதும் தேடியுள்ளனர். கடைசியில் பார்த்தால் ஒரு பெருச்சாளி தான் வீட்டின் உள்ளில் இருந்து ஓடியுள்ளது. பின்பு அம்மா கள்ளன் கொள்ளையடித்து போயிருந்தால் கூட இந்த மாதிரி வருத்த பட்டிருக்க மாட்டார்; பாட்டி ஊரை கூட்டி அவமானப்படுத்தி விட்டார்கள் என்று தான் பல நாட்கள் துயரத்தில் இருந்தார். எலியை சாவடிப்பது பெரும் பாடு. எங்கள் கடை எலியின் மாளிகையாக தான் இருந்தது. ஒன்றை கொன்றால் போட்டிக்கு என கூட்டம் கூட்டமாக குட்டி போட்டு வைத்திருக்கும். காலில் போடும் ஷூவில் இருந்து சாக்கு, மேஜை அறைகள், என அவை இல்லாது இடமே இல்லை என்றாகி இருந்தது. ஒரு பூனை வளர்த்து எலியை பிடிக்கலாம் என்றால் பூனை தரும் தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது. ஒரு முறை அப்படி தான் என் தம்பியார் எலியை அடிக்கிறேன் என்று தரை ஓட்டை அடித்து உடைத்து அவன் அடி வாங்கினது தான் மிச்சம் எலியோ தப்பி ஓடி விட்டது . இனி விஷம் வைத்து கொல்லாம் என்றால் அதன் நாற்றம் வீட்டை விட்டு விலக பல நாட்கள் ஆகும். விஷம் வைப்பது சொன்னால் எலி காதுக்கு கேட்டு விடும் என்பதால் இரு செவி அறியாது எலிப்பொறியில் சுட்ட தேங்காய் துண்டை இரவு வைத்து விடுவார்கள் அம்மா . பெரிய எலி என்றால் தேங்காயை தின்று விட்டு ஓடி இருக்கும். ஏப்ப சாப்ப குட்டி எலிகள் தான் மாட்டியிருக்கும். அதை லாவகமாக சாக்கில் போட்டு அடித்து கொல்வது தான் எங்கள் கடை பையனுகளின் வீரச்செயல்! எனக்கு எலி கண்ணை கண்டால் இரக்கம் பொத்து கொண்டு வரும் ஆனால் ஒரு முறை எங்கள் வீட்டு அலக்கு இயந்திரத்தின் குழாயை கடித்து சேதப்படுத்திய போது அத்துடன் என் கோபம் ஆரம்பம் ஆகியது. பெருச்சாளி கறி ரொம்ப சுவை என்று சுட்டு தின்னவர்கள் சொல்லியுள்ளார்கள். குற்றாலத்தில் குரங்கு நடப்பது போல் எங்கள் வண்டிபெரியாரில், இரைவில் பெருச்சாளி ரோடு வழி ஓடி நடக்கும். எலி வீட்டிற்க்குள் வந்து விட்டது என்றாலே பின்பு எங்களுக்கு கிலி தான். இதே மாதிரி ஒரு தொல்லை எலிகள் தான் தமிழக அரசியலில் இருக்கும் தமிழ் இன உணர்வாளர்கள்! தமிழன் என்றால் யார் தான் இவர்கள் பார்வையில்? அதற்க்கு என்ன தகுதி வேண்டும் தமிழ் நாட்டில் பிறக்க வேண்டுமா? அல்லது தமிழ் மொழியில் தான் பேச வேண்டுமா? அல்லது ஈழத்தில் பிறக்க வேண்டுமா? நம்மூர் இன உணர்வாளர்களுக்கு தமிழர்கள் என்றால் ஈழ தமிழர்கள் மட்டும் தான்! அவர்களுக்கு ஒன்று என்றால் அறிக்கை விடுவார்கள் அரசியல் விளையாட்டு விளையாடுவார்கள். ஆனால் இது எல்லாம் அவர்கள் மேல் உள்ள பாசமா என்றால் அது தான் இல்லை. ஒன்று அரசியல் வியாபாரம் அடுத்தது பெண்கள் 7 நாட்களில், முகம் வெளுக்க பெfயர் & லவ்லி தேய்ப்பது போல் தன்னை இன உணர்வாளன் என்று நிலை நிறுத்துவது வழியாக அரசியலிலும் கொள்ளையிட ஒரு குறுக்கு வழி மட்டுமே. ஈழ தமிழர்கள் அறிவிலும் எழுத்திலும், தன்மான உணர்விலும், மொழி பற்றிலும் பல தமிழக தமிழர்களை விட சிறந்தவர்களே. சமீபத்தில் பிரான்ஸில் இருந்து வந்த என் ஈழ நண்பர் குடும்பத்துடன் உணவகம் சென்றிருந்தோம். எந்த ஊர் என்று கேட்டவர்களிடம் அவர் இலங்கை என்று சொல்வதை தான் காண இயன்றது. பிரான்ஸில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் கூட தமிழில் நன்றாக கதைக்கின்றனர். அவர்கள் முகநூல், வலைப்பதிவு பக்கங்கள் எல்லாம் தமிழ் மொழியை பாவிப்பதையே விரும்புகின்றார்கள். நம் நிலை என்ன; சென்னை எப்போதோ பறங்கி தேசம் ஆகி விட்டது, இனி மதுரை, நெல்லை, கோயம்ப்த்தூர் என அதன் பிடியில் அகப்படும் நாள் வெகு அருகில் தான் உள்ளது. ஒரு பள்ளி நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்; ஆசிரியை அழகான ஆங்கில உச்சரிப்புடன் ஒரு வெள்ளைகாரியை விட அழகாக ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். எவ்வளவு திறைமையான மொழி ஆற்றல் என்று மனதில் நினைத்து கொண்டிருந்தேன். ஒரு தமிழ் பாட்டுடன் நடனம், என்றதை அவர் இவ்வாறு "அடுத்து வருவது 'நல்ல நல்ல பில்லைகளை நம்பி'…..” நொந்து விட்டேன். இதுவே எல்லா நிகழ்ச்சியிலும் இங்கு காண்பது தான். “டமில் டாய் வால்த்து, குற்றுவிலக்கு” இதெல்லாம் இங்கு அறிவாளிகளின் லட்சணம். தமிழகத்தை பிடித்துள்ள ஒரு நோய்! நாங்கள் கேரளாவில் 75 வருடம் முன்பு குடியேறினோம் அங்கு நான் கண்ட தமிழ் ஆவல் இங்கு இருப்பது போல் தெரியவில்லை. சிறப்பாக சென்னையில் தமிழில் கதைத்து விட்டால் ரொம்ப கேவலைமான பார்வை நம்மை திரும்பி பார்க்கும். இந்த நோய் நம்மை விட ஆங்கிலம் கதைக்கும் மலையாளிகளிடம் கண்டதில்லை. ஈழ தமிழர்கள் கெட்ட நேரம்! போருக்கு முன்பு ஏதோ உங்கள் உதவியை நாடியிருப்பார்கள் அதற்க்கு தான் 3 லட்சத்திற்க்கு மேலான மக்கள் மரணத்திற்க்கும், 50 ஆயிரத்திற்க்கும் அதிகம் பெண்கள் விதைவை ஆவதற்க்கும், அவர்கள் இருந்த நினையை விட மிக மோசமாக ஆடு மாடுகள் போன்று முள் வேலிக்குள் முடக்கப்படுவதற்க்கும் உதவி செய்துள்ளீகள். தலீவா நாங்க உங்க பின்னால் உண்டு என உசுபேற்றி விட்டு தலைவர் பிராபகரன் வீட்டில் புலி வளர்க்கிறார் அப்படி இப்படி என்று பத்திரிக்கைகளில் கொடுத்து விளம்பரம் தேடி தன் அரசியல் வாழ்க்கையை வளப்படுத்தினர் இந்த இன உணர்வாளர்கள். மே 2009 நாளில் இங்கு நடந்தது தான் என்ன?; அங்கு மக்கள் போரில் உயிர் விட்டு கொண்டிருந்த போது எல்லா ஊடகவும் பாடல் ஆட்டத்தில் இருந்த்து. அதைக்கூட வசதியாக மறந்து விடுவோம், போர் மூண்ட போது முத்துகுமார் என்பவர் என் உடலை ஆயுதமாக்குங்கள் என கூறி ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தார். அந்த நிகழ்வை பற்றி இயக்குனர் ராமின் கட்டுரை படிக்கும் போது வெள்ளையன் என்ற வியாபாரிக்கு, படம் பிடிக்கும் இயக்குனர்களுக்கு மற்றும் சாதாரண மக்களுக்கு இருந்த இன பாசம், பற்று கூட தலைவர்களுக்கு இல்லை என்று புரிந்து போய் விட்டது. மக்களுக்கு புரிந்ததாலே ஓய்வெடுத்து கொள்ளுங்கள் என வீட்டுக்கும் அனுப்பி விட்டார்கள். ஆனால் இப்போது இந்த பெருச்சாளி, சுண்டெலி, பன்றி எலி, நச்செலி எல்லாம் சேர்ந்து ஆட்டம் ஆட ஆரம்பித்து விட்டது. நெல்லையில் ஒரே சுவரொட்டிகள் தான் தமிழகத்தை தமிழ் இனத்தை காப்பாற்ற போகிறார்களாம். இது எல்லாமே நாடகம் என்று மக்கள் புரிந்துள்ளதை, இவர்கள் எப்போது புரிய போகிறர்கள்ன் என்று தான் பார்க்க வேண்டியுள்ளது. ஈழத்தில் இருந்து உலகநாடுகள் அனைத்திலும் குடிபெயர்ந்துள்ள ஈழ தமிழர்கள் அவர்கள் பிரச்ச்னைக்கான காத்திரமாக குரல் கொடுத்து கொண்டு இருக்கும் போது இவர்கள் அறிவு சாராது, உணர்ச்சி வேகத்தால் ஊளை இடுவதால் அவர்கள் குரலும் நசுக்கப் படத்தான் போகின்றது. ஈழ மண்ணின் பிரட்சனைகளுக்கு உண்மையாக தோள் கொடுபவர்களாக இருந்தால் போரால் வாழ்க்கை இழந்த பெண்களுக்கு வாழ்க்கைக்கு வழி சொல்லவோ அல்லது அங்கு அனாதமாக்கப்பட்ட குழந்தைகளுக்கு தத்து எடுக்கவோ, அவர்கள் அரசியல் பிரச்சனையை உணர்ச்சி வேகத்தில் எடுக்காது, உண்மையான மனித நேயத்துடன் கதைக்க முன் வருவார்கள். நம் மண்ணில் அகதியாக தஞ்சம் அடைந்த ஈழ மக்களின் கதி தான் என்ன? நாம் இன்று நினைத்தால் நமது தமிழகத்திலிலுள்ள அகதி முகாமில் சென்று எளிதில் அவர்களை சந்திக்க இயலுமா? அல்லது அவர்களையும் நம் சமூக ஓட்டத்தில் இணைத்து விட்டோமா? இலங்கை தமிழன் என்ற பாகுபாடுதான் அவர்களுக்கு இங்கும். ஏதோ தேற்வு நேரம் தலைவர்கள் அவர்களை சந்தித்து சிரித்து கதைக்கின்றனர். ஈழ மக்கள் உரிமைக்கு தன் உயிரை கொடுத்து போராடும் குழுக்கள் முகநூலிலும் உண்டு நானும் நட்பு வைத்திருந்தேன். சமீபத்தில் ஒரு ஈழ சகோதருக்கு படிப்பு வாய்ப்பு அறிய வினவினார். நல்ல பதில், கெட்ட பதில் என்றில்லை எந்த ஒரு பதிலும் வரவில்லை.… ஈழ தமிழர்களை விட ஆதரவில்லாத அடையாளமில்லாத தமிழக தமிழர்கள் உண்டு அவர்களுக்கு என இந்த இன உணர்வாளர்கள் என்றாவது குரல் கொடுத்துள்ளார்களா? குழந்தைகளை பிச்சை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்படும் எத்தனையோ பெற்றோர்கள், ஆதரவு இல்லாத சூழலால் தெருவில் தள்ளப்பட்ட பெண்கள், முதியவர்கள், குறைந்த பட்சம் குடியிருக்க ஒரு வீடு, இரவு சாப்பாட்டுக்கு வழி இல்லாத பல கோடி மக்கள், பன்னாட்டு அடிமைகள் ஆக்கப்படும் நம் இளைஞசர்கள், வானளவில் உயர்ந்த விலை ஏற்றம், இதை எல்லாம் இன உணர்வாளர்கள் அறிய நாம் ஈழத்தில் தான் பிறக்க வேண்டுமோ? இது மட்டுமா பிரட்ச்சனை சமச்சீர் கல்வி என்ற பெயரில் கல்வி மறுக்கப்படும் பள்ளி மாணவர்கள், தண்ணீர், மணல், கல்குவாரி என்ற பெயரில் இயற்க்கை சுரண்டலுகள், மக்கள் உயிரை குடிக்கும் அணு உலைகளின் நிறுவல்கள், எங்கு பார்த்தாலும் நாற்றம் பிடித்த தெருவுகள், சுகாதாரமற்ற பேருந்து நிலையங்கள், லஞ்சம் வாங்கும் அரசு அலுவலங்கள், கொள்ளையடிக்கப் படும் தனியார் ஊழியர்கள், பெண்கள் நலம் பாதிப்பு என எண்ணில் அடைங்காதவை. சமீபத்தில் தமிழகம் வந்த சிங்களர்களை அடித்து தங்கள் வீரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். போரை முன் நின்று நடத்தியவர்களிடம் சீட்டுக்கு என கைகட்டி வாய்கட்டி நின்ற உணர்வாளர்களூக்கு சாதாரண மக்களை கண்டவுடன் எப்படி வீரம் பொத்துகிட்டு வருகின்றது என்று தான் தெரியவில்லை. ஈழப்போர் அமெரிக்க -ரஷியா ; இந்தியா-சீன என்று மாறிவிட்ட சூழலில் உணர்ச்சி பேச்சுக்கு விடை கொடுத்து ராஜபக்சேவின் மனித உரிமை மீறல் பற்றி ஐநாவில் கொண்டு சென்று, அவர்கள் சொந்த மண்ணில் தன்மானமாக வாழ சாதகமான சூழல் உருவாக்கி கொடுப்பது தான் காலச் சிறந்தது. வன்னி மக்கள் இன்றும் முள்கம்பிக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இன்னும் பல ஆயிரம் ஈழப் போராளிகள் நிலை என்ன என்பதே தெரியவில்லை. உண்மையை சொன்னால் ஒரு ஈழ தமிழர்களுக்கும் இன உணர்வாளர்கள் மேல் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. இனியாவது இன உணர்வாளர்கள், தாங்கள் ஊதி கெடுத்த சங்கை உடைக்காது விட்டால் மிஞ்சிய கொஞ்சம் உயிர் வாழ இயலும்! Posted by J.P Josephine Baba at 5:51:00 PM Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz Tags: Social-சமூகம் Reactions: 1 comments: நிரூபன் said... வணக்கம் சகோதரி, எலித் தொல்லைக்குத் தீர்வாக எலிப் பொறி வழங்கும் திட்டம், வரவேற்கப்பட வேண்டியது. ஈழ உணர்வாளர்கள்- தாம் வாழ ஈழ மக்கள் உணர்வினை வைத்துப் பிழைக்கும் நபர்கள். இவர்களைப் பற்றி பேச்செடுத்தாலே கோபம் தான் வரும். August 20, 2011 6:07 PM Post a Comment Links to this post Create a Link Older Post Home Share it About Me My Photo J.P Josephine Baba Tirunelveli, Tamilnadu, India creative,friendly,outspoken View my complete profile Followers Popular Posts பெண்களுக்கு மன அழுத்தம்! உலகில் மன அழுத்தத்தால் அதிகம் துண்புறும் பெண்கள் கொண்ட நாடு இந்தியாவாம் . 87. % பெண்கள் மன அழுத்த நோயால் துன்புறுகின்றார்களாம் .... எனது நண்பனுடைய தோழியும்:என்னுடைய நண்பனும் தனது கல்லூரி நாட்களிலுள்ள தோழியே குறித்து எனது நண்பர் ஒருவர், கதைத்து கொண்டிருந்தார். குடிபோதையில் லாரி ஓட்டியவனால், பேருந்து நிறுத்ததில் நி... உறுமும் "உறுமி"! மலையாளத் திரைப்படம் உறுமி என்பது போரில் பயன்படுத்தும் ஒரு ஆயுதம் ஆகும். சந்தோஷ் சிவம் இயக்கத்தில் பிரத்வி ராஜ், பிரபு தேவா , ஜெனிலியா நடி ப் பில் ... திரைக்கதை - மலையாளம் திரைப்படம் சில நாட்கள் இப்படி தான் எந்த வேலையிலும் மனம் ஈடுபடுவதில்லை . ஒரு மலையாளப்படம் கண்டு விடுவோமே என்று ‘ திரைக்கதை ’(Script) என்ற மலையாளப் பட... தமிழ் ஈழ வலைப்பதிவுகள் : ஓர் ஆய்வு முடிவு திருநென்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகதொடர்பியல் துறை தலைவர் மற்றும் மதிப்பிற்க்குரிய பேராசிரியர் முனைவர் பே.கோவிந்த ராஜு அவர்கள் ... Kudankulam-மரண கோட்டையின் மேல் தவழும் திருநெல்வேலி!!!!! தமிழகத்தின் வீர மண், புராதன கோயில்கள், கிருஸ்தவ ஆலயங்களின் இருப்பிடம், அறிவு ஜீவிகள், அறிஞர்கள் வீர புதல்வர்கள் பிறந்து, வாழ்ந்த மண் என ப... என் பொண்ணு வயசுக்கு வந்துட்டா!!!! இன்று ஒரு சிறு பெண்ணின் பூப் புனித விழாவுக்கு சென்றிருந்தோம். சிறு பெண் என்பதை விட குழந்தையாக இருந்தாள். அவளுக்கு அ... திரும்பி பார்க்கையில்………மே - 19 14 வருடம் முன்பு இதே நாளில் பட்டு சேலை - நகையுடன் அன்றைய நாள் கதாநாயகியாக, உலகிலே அதிக மகிழ்ச்சி கொண்ட பெண்ணாக திளைத்தார் இந்த ஜோசபின். ... பத்மநாப அரண்மனை உங்களை வரவேற்கிறது!!! புலியூர்குறிச்சியில் இருந்து 4 கிலோ மீட்டருக்குள், அல்லது கன்னியாகுமாரியில் இருந்து 35 கி.மி பயணம் செய்தால் பத்மநாப அரண்மனை http://en.wiki... என் பூந்தோட்டம் சொல்லும் கதைகள்............................ காலையில் அவசரமாக ஒரு பயணத்திற்க்கு தயாராகி கொண்டிருக்க எங்கள் வீட்டு நுழைவு வாயில் பக்கம் இருந்து அக்கா என்று ஒரு விளி ! எட்டி பார்த்தே... Recent News Blogger news widgeo.net Copyright (c) 2011 ஜோஸபின் கதைக்கிறேன்.. Designed for Online Scratch Cards and Horse Racing Od