Wednesday, October 10, 2012

‘கூண்டு’ (வாசிப்பு மனநிலை விவாதம் -3)
வாசுதேவன் அவர்கள் கார்டன் வைஸ் அவர்களின் ‘கூண்டு’ நூல் குறித்த தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். வாசுதேவன் அவர்கள் பிரான்சில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்து வருவதோடு, ‘மொழிஆக்கப்’ படைப்பாளியாகவும் தன்னை அடையாளப்படுத்திவருபவர். அவர் பிரஞ்சு இலக்கியங்களையும், பிரான்சின் வராலாற்று நூல்களையும் ஆழமாக கற்றுவருபவர். ஐரோப்பிய அறிவொளிக்கால வரலாற்றில் பிரான்சின் வகிபாகம் குறித்தும் ஆர்வமான தேடல்களை மேற்கொண்டவர். ‘தொலைவில்’எனும் தலைப்பிலான இவரது கவிதைத் தொகுப்பும் வெளிவந்தது. அண்மைக்காலமாக நவீன ஓவியங்கள் வரைவதிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றார்.
வாசுதேவன்: நான் இந்த நூல் பற்றி பேசுவதற்கு முன்பாக இங்கு நான் எந்த சூழ்நிலையில் இருந்து பேசப்போகிறேன் என்பதை ஒரு கணம் யோசித்துப்பார்த்தேன். பிரான்சில் 91ஆம் ஆண்டு காலகட்டத்தில் என்று கருதுகின்றேன் ஐரோப்பாவெங்கும் நடைபெற்று வந்த இலக்கியச்சந்திப்பை தொடர்ந்து அவதானித்து வந்தேன். இந்த இலக்கியச் சந்திப்பானது ஆரம்பகாலகட்டத்திலே இலக்கியங்களை முன்னிலைப்படுத்தியே பேசி வந்தது. காலப்போக்கில் இந்த இலக்கியச் சந்திப்பானது ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட நிறுவனமாக மாறி அது விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் ஒரு அமைப்பாக மாறியது. இதில் அநேகமானவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காதென்றே நினைக்கிறேன்.
இப்ப இங்கு இருப்பவர்களை எடுத்துக்கொண்டால், எனக்கு தெரியாத முகங்களைத் தவிர மற்றைய அனைவருமே விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள், அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என தீவிர பிரச்சாரம் செய்தவர்கள். அதற்காக முனைப்பாகவும் செயல்பட்டார்களோ அது எனக்குத்தெரியாது. சோபாசக்தியை எடுத்துக் கொண்டால் தமிழ் நாட்டிலே விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு மிகப்பெரிய ஊன்றுகோலாக அவர் இருந்தவர். அவர் மட்டுமல்ல அவரை ஒரு உதாரணத்திற்காக கூறினேன். என்னைப் பொறுத்தவரையில் நான் விடுதலைப் புலிகளை ஆதரித்தவன்.
குறுக்கீடு: அசோக் பிரகாஸ்: இடையில் தானே.
ஒன்றாக சிலகுரல்கள்: இடையில் தான்.
வாசுதேவன்: உண்மைதான் இடையில் ஆதரித்தவன். யுத்தம் முடிவடைவதற்கு முன்பாக சேரன் அவர்கள் கூறிய ஒரு வசனத்தை இங்கு வரும்போது யோசித்துப் பார்த்தேன். அவர் என்ன சொல்கிறார் என்றால். ‘விடுதலைப் புலிகள் வெற்றியடைந்தால் அது அவர்களது வெற்றியாக இருக்கும். இந்த யுத்தத்தில் விடுதலைப் புலிகள் தோல்வியுற்றார்கள் என்றால் அது ஒட்டுமொத்த தமிழர்களின் தோல்வியாக இருக்கும்’ என்று சொன்னார். இது வந்து மிகவும் அர்த்தம் செறிந்த விசயம். இந்த விடயம் எப்போ எனக்கு விளங்க ஆரம்பித்ததோ அப்போதிருந்து நான் விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்தேன். அது சரியா பிழையா என்பது எனக்குத் தெரியாது. அதே நேரத்தில் எனக்கு எல்லாம் தெரியும், நான் மூன்று காலமும் அறிந்த முனிவன் என்று சொல்லவும் வரவில்லை. நீங்கள் விடுதலைப் புலிகளை எதிர்ப்பதற்கு பல காரணங்களை சொல்லி வந்த நீங்கள். ஒன்று அது சைவவேளாள பாதுகாப்பும், தமிழ்த்தேசிய சிந்தனையும் கொண்டது ஆகவே அதை அழிக்கவேண்டும். மேலும் அவர்கள் பயங்கரவாதிகள், அல்லது அவர்கள் முன்பு சோசலிசத்தை ஆதரித்தவர்கள் பின்பு அவ்வாறு அவர்கள் இல்லை. ஆகவே அவர்களை அழிக்கவேணும். அல்லது அவர்கள் தலித்துகளுக்காக போராடுவதாக வெளிப்படையாக அறிவிக்கவேணும் இவ்வாறு காலத்திற்கு காலம் ஒவ்வொரு காரணங்களை சொல்லி விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள்தான் இங்கு அநேகமானவர்கள். புலிகள் ராஜீவ் காந்தியை கொலை செய்திருக்க் கூடாது என அரவிந் அப்பாத்துரை கூறுவார். இவ்வாறு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தது. இந்த சூழ்நிலைகளுக்குள் இருந்தே இந்த புத்தகம் பற்றி நான் பேச வருகின்றேன். இது சும்மா சாதாரணமான விசயம் அல்ல இது பெரியதொரு றிஸ்க் எனக்கு.
குறுக்கீடு நாதன்: நீங்க ராஜீவ் காந்தியை கொலை செய்ததை நியாப்படுத்திறீங்களா?
வாசுதேவன்: நான் அப்படி சொல்ல வரவில்லை. இங்கு நான் சொல்வதெல்லாம் சரியென்றும் வாதிடவில்லை. நான் ஒரு சாதாரண மனிதன்தான்.
தேவதாசன்: இங்கு எல்லோருமே சாதார மனிதர்கள்தான். அவரை கதைக்கவிடுங்க.
வாசுதேவன்: முதல்ல என்னை கதைக்க விடுங்க. நான் இங்கு கதைப்பதற்கு இவ்வளவு துணிவா வந்திருக்கிறனல்லவா அதை முதலில் பாராட்டுங்க.
எனக்கு நேரம் போதாத காரணத்தால் இந்தப் புத்தகத்தை மிக வேகமாகவே வாசிக்க முடிந்தது. அது எனது பிழை என்று கூடச்சொல்லலாம். ‘சிங்கத்தின் வெற்றி’ ‘சுவர்க்கம் கண்டுபிடிக்கப்பட்டது’ ’இழந்த சுவர்க்கம்’ ‘புலிகளின் புரட்சி’ ’வாகனத்தொடர்-11’ ‘கூண்டுக்குள்’ ‘உண்மைக்கான போராட்டம்’ ’முற்றுகை’’உலகம்கவனித்துக்கொண்டிருக்கையில்’’மோதல்களுக்குப் பின்’’திரும்பிப் பார்க்கையில்’எனும் அத்தியாயங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய தொகுப்பாக ஆழமான விடயங்ளோடு இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கின்றது. உண்மையிலேயே இந்தப் பணி மிகவும் பாராட்டுக்குரியது. ஆரம்ப அத்தியாயமான ‘சிங்கத்தின் வெற்றி’ எனும் பகுதியில் இலங்கையின் வரலாறு கட்டமைக்கப்பட்ட தன்மைகள் பற்றி குறிப்பிடுகின்றார். தீபவம்சத்திலிருந்து எவ்வாறு மாகவம்ச வரலாறு தோன்றுகின்றது. மாகாவம்சம் தோன்றுவதன் நோக்கம் என்ன. ஆரம்பத்தில் சோழர்களின் படையெடுப்பும் பொலநறுவை ஆட்சியின் தொடக்கம், பிற்பாடு அநுராதபுர வரலாறு என ஆரம்ப இலங்கை வரலாறுகளை பதிவு செய்துள்ளார். இதெல்லாம் எமக்குத் தெரிந்த விடயங்கள். இந்த நூல் ஆசிரியர் சிங்கள, தமிழ் தரப்பினரென இரு பகுதியினரிடமிருந்தும் தகவல்களை பெற்றிருக்கின்றார். இந்த ‘சிங்கத்தின் வெற்றி’ எனும் தலைப்பை வாசிக்கும்போது ஒரு முக்கியமான சரித்திரநாவலின் ஞாபகம் எனக்கு வந்தது. அது குறித்து இங்கு நான் சொல்லாமல் தொடரமுடியாது.
எஸ்.பொ அவர்கள் எழுதிய ‘மாயினி’ என்பதுதான் அந்த சரித்திரநாவல். எஸ்.பொ அவர்கள் ஒரு வரலாற்று ஆசிரியர். அவரிடம் வாரலாறு சம்பந்தமான தூரப்பார்வை ஒன்றிருந்தது. புனைவு நாவலாக இருந்தாலும் நீண்ட தூர வரலாற்றுப்பார்வையில் எழுதப்பட்ட நாவல் அது. சைவ மத பெரியார்கள், தமிழ் வரலாறுகளோடு தென் இந்தியாவில் பௌத்தம் அழிந்த கதை. அதே பௌத்தம் இலங்கையில் நிறுவுவதற்கான மாற்றங்கள் பற்றியெல்லாம் அந்த நாவல் மிக விரிவாக பேசுகின்றது. ‘சிங்கத்தின் வெற்றி’என கார்டன் வைஸ் சுவையில்லாது எழுதிய விடயங்களை எஸ்.பொ. அவர்கள் மிக சுவையாக எழுதியிருக்கின்றார். ஒரு இன காழ்ப்பு இல்லாமலும் எழுதப்பட்ட நாவல் அது.
இந்த நூலிலுள்ள ‘சிங்கத்தின் வெற்றி’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட பகுதியில் இலங்கையில் இனவாதம் தோன்றுவதற்கான அடித்தளம் எவ்வாறு போடப்பட்டதென்பது பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கையில் இனவாதம் இருக்கவில்லை சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றாகத்தான் வாழ்ந்தவர்கள் அநகாரிக தர்மபாலா எதுவும் செய்யவில்லை. ஆறுமுகநாவலரும் மிக நல்ல மனிதன் என்று சொல்பவர்களெல்லாம் பச்சை பொய்சொல்பவர்கள்.
பல்-மொழி பல்-காலாச்சாரங்களை பேணிவந்த இலங்கை வாழ் சமூகங்களானது எவ்வாறு சிறுக, சிறுக இனவாதத்தை நோக்கி நகர்ந்தது என்பதை மிகதெளிவாக சொல்லுகிறார். ‘சுவர்க்கம் கண்டுபிடிக்கப்பட்டது’ என்ற பகுதியும் அவ்வாறான சம்பவங்களையே பேசுகின்றது. காலனிய ஆட்சிக்காலத்தில் இருந்து விடுபடும்போது மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்கள் குறித்தெல்லாம் இதில் கூறப்பட்டிருக்கின்றது. தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்க இருந்ததும் பிற்பாடு தமிழர்கள் எவ்வாறு ஏமாற்றம் அடைந்தார்கள் என்பது பற்றியும் கூறுகின்றார். ‘இழந்த சுவர்க்கம்’எனும் இந்த பகுதியில் வந்து சுவர்க்கமாக இருந்த நிலமானது எவ்வாறு அந்த நிலையிலிருந்து மாற்றம் அடைகின்றதென்பது பற்றி கூறப்பட்டுள்ளது. இதற்கு பிற்பாடு ’புலிகளின் புரட்சி’எனும் பகுதியில் 83 யூலைக் கலவரத்திலிருந்து இயக்கங்கள் எப்படி உருவாகின்றது, புலிகள் மற்ற இயக்கங்களை அழித்தது குறித்து பேசுகின்றபோது எங்கு இயக்கங்கள் தோன்றினாலும் அவைகளுக்குள் உடைவுகள் ஏற்படுவதை தடுக்கமுடியாதென்பதாகவும் கூறுகின்றார். இவைகளை வரலாற்றுரீதியாக பார்ப்பதா, அல்லது இவை தவிர்க்கக்கூடிய ஒன்றாக இருந்தா என்பது குறித்தெல்லாம் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய விசயங்கள். அடுத்ததாக ‘வாகனத்தொடர் 11’இது வந்து முக்கியமான பகுதி இது குறித்து சோபாசக்தி கூடுதலாக கதைப்பார் என நினைக்கின்றேன். அது அவருக்கு பிடித்தமான விசயமாகவும் இருக்கும். விடுதலைப் புலிகள் இறுதி நேரத்தில் செய்த அட்டூழியங்கள் பற்றிய விபரங்கள் இந்தபகுதியில் அடங்கியுள்ளது. அதே நேரத்தில் அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் அதைவிட அதிகமாகவே இருக்கின்றது. விடுதலைப் புலிகள் பல அட்டூழியங்கள் செய்தவர்கள் என்ற போதிலும் மக்களின் பாரிய அழிவுகளுக்கு அரசாங்கமே காரணமாக இருந்ததாக கார்டன் வைஸ் அவர்கள் இந்த நூலில் பதிவு செய்திருக்கின்றார். இதில் நாம் யாரையும் மன்னித்துவிட முடியாது. இதில் வந்த ஐக்கியநாடுகள் சபையின் பொறுப்பென்ன? ஏன் இந்த இனப்படுகொலைகள் மீது அக்கறையில்லாமல் இருந்தது? நடந்தது இனப்படு கொலைதான் என்பதை நூலாசிரியரே குறிப்பிட்டுள்ளார். இந்த யுத்தத்தில் சீனாவின், இந்தியாவின், அமெரிக்காவின் பங்குகள் என்ன என்பது பற்றியெல்லாம் சொல்லியிருக்கின்றார். இவ்வாறான சர்வதேச சூழலை இலங்கை எவ்வாறு தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளது என்பது குறித்தும் விரிவாக பேசப்பட்டிருக்கின்றது. இதில் வந்து எமக்கு தெளிவாக புலனாகிற விசயம் என்னவென்றால் இந்த தமிழத் தேசியப் போராட்டமானது சீரோ நிலையிலிருந்து ஆரம்பமாகி தமிழர்களுக்குள்ளேயே முரண்பட்டு, முரண்பட்டு உடைந்து சின்னாபின்னமாகியும், தமிழத் தேசியப்போராட்டமானது முன்னால் சென்று கொண்டிருக்கும்போது…, இவர்கள் தோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன? இதில் இந்தியாவானது புலிகளை அழிக்கவேண்டும் என்பதாகவும், அழிக்ககூடாதென்பதான மதில்மேல் பூனை எனும் நிலைப்பாட்டில் ஏன் இருந்தது? பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் வருவதை எதிர்ப்பதில் சீனா மேற்கொண்ட இறுக்கமான நிலைப்பாடு, அதேபோன்று பாக்கிஸ்தானின் உதவிகள் போன்ற தகவல்களெல்லாம் இதில் அடங்கியிருக்கின்றது. மேலும் இதில் முக்கியமான விடயமாக இந்த புத்தகத்தின் வெளிச்சத்தின் ஊடாக நாம் பார்க்கக்கூடியதென்னவென்றால், உண்மையிலேயே இந்த இனப்படுகொலையை நிகழ்த்தத் தூண்டியதும், அதற்கு துணையாக இருந்ததும் இந்த வல்லரசுகள்தான். இந்த வல்லரசுகளின் நோக்கம் எதுவாக இருந்ததெனில் தமது அனைத்து ஆதரவுகளையும் வழங்கி இனப்படுகொலைகளை தூண்டுவது, அதன்பிற்பாடு அதன் ஆதாரங்களை எடுத்துக்கொள்வது. இஸ்ரேலிலுள்ள தனியார் சற்றலைற் நிறுவனங்களுடாக பெறப்பட்ட பலதகவல்கள் அமெரிக்கா வசம் உள்ளது் எனவே இதில் அமெரிக்காவினது பங்கு முக்கியமானது. அந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு இலங்கையோடு பேரம்பேசுகின்றது. இலங்கையை தனது நண்பனாக காட்டுவதற்காக சீனா தனது பங்கிற்கு பல உதவிகளைசெய்து வருகின்றது. இவைகளுக்குள் என்ன செய்வதென்று அறியாது இந்தியா தடுமாறுகின்றது. இது இன்றைய இலங்கையின் அவல நிலையாகவும், இதற்குள்தான் தமிழர்களும் கைதிகளாகவும் இருக்கின்றார்கள். இந்த நிலையில் தமிழ் நாட்டில் எவர் கொடி தூக்கினால் என்ன, இங்கு ஐம்பதுநாயிரம் பேர் திரண்டு ஊர்வலம் நடத்தினாலென்ன எதுவும் நடக்கப்போறதில்லை. எமக்கு அவை தெளிவாக விளங்கினாலும், இந்த நூலும் அவற்றை ஆதரபூர்வமாக கூறுகின்றது.
இலங்கை ஒரு இறையாண்மை உள்ள நாடு என்று நாம் பேசுவதற்காக சொல்லலாம். ஆனால் இலங்கையின் இறையாண்மையின் ஒரு பகுதி வல்லரசுகளிடம் சிக்கியுள்ளது என்பதை இந்த நூலினூடாக நாம் தெளிவாக புரிந்து கொள்ளமுடியும். உண்மையில் இந்த நூல் ஆசிரியர் மிகநேர்மையாக நடந்துள்ளார். விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று கூறுவதோடு, அவர்களது நல்ல பக்கங்களையும் கூறுவார். கோத்தாபாயா பற்றிக்கூறும் போது அவர் போரில் வல்லவர், தீரன் என்பதாகவும், அதே நேரம் இரக்கமனம் இல்லாதவர், கொடுமையானவர், மக்கள் கொல்லப்படுவது பற்றி அவருக்கு அக்கறை இருந்ததில்லை என்றும் கூறுகிறார். பிரபாகரன் பற்றிக் கூறும்போதும் அவர் ஒரு காட்டுமிராண்டி, தான் எடுத்த முடிவுகள்தான் சரியென்ற நிலைப்பாட்டில் இருப்பவர். அதோபோன்று அவர் தீவிரமான போராளி, யாருக்கும் அஞ்சாதவர் என இரண்டு பக்கமும் நடுநிலையாக பேசுகிறார். இது அவரது திட்டமிட்ட முறையாக கருதமுடியாது. அவை அவரது மனதில் இருந்து இயல்பாக எழுந்த விடயமாகத்தான் பார்க்கவேண்டும். சில இடங்களில் திரும்ப திரும்ப சொன்னதை சொல்லுகிறார். காலக்கிரமங்களை மாற்றிச் சொல்லுகிறார் எனவே அவர் இதை திட்டமிட்டு வடிவமைத்து எழுதவில்லை என்றுதான் நான் சொல்லுவேன். கார்டன் வைஸ் அவர்கள் யூத இனத்தைச் சேர்ந்தவர் அவர் இலங்கைப் போராட்டத்தை பலஸ்தீன-ஸ்ரேல் போராட்டத்துடன் ஒப்பிட்டும் பேசுகிறார்.
இதில் சேரன் குறிப்பிட்டதுபோல் ‘பக்கச் சார்பின்றி அறக்கடப்பாட்டோடு எழுதப்பட்டுள்ள இந்த நூலின் கருத்துக்கள் எல்லாவற்றோடும் ஒருவர் உடன்பட வேண்டியதில்லை. எனினும் இந்த நூல் அம்பலப்படுத்துகிற ஏராளமானவற்றை நாம் எதிர்கொண்டேயாக வேண்டும். ‘ எனும் கருத்தோடு எனக்கும் முழு உடன்பாடுள்ளதென்பதைக் கூறிக்கொள்கின்றேன். மிகுதியை சோபாசக்தி தனது தொகுப்புரையில் கூறுவார்.
உரையாடல்:
வரதன்: நீங்க விடுதலைப்புலிகளின் உண்மையான ஆதரவாளரா அல்லது நடிக்கிறீங்களா?
வாசுதேவன்: அதை உங்களால கண்டுபிடிக்கமுடியாதா?
அரவிந்த அப்பாத்துரை: நீங்க சொன்னீங்க இங்க மிகப்பெரிய அளவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்பட்டார்களென்று. நான் அப்படி கருதவில்லை. இங்கே விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பே இல்லாமல் இருந்ததுதான் அவங்களுக்கு இருந்த பிரச்சனை என்று தான் நான் சொல்லுவேன். ஒரு அரசியல் எதிர்ப்பு பலமாக இருந்திருக்குமானால் அவர்கள் அழிந்திருக்கமாட்டார்கள்.
விஜி: எங்க எதிர்கிறது அரவிந்…! அவங்க சுட்டுப்போடுவாங்களே.
அரவிந் அப்பாத்துரை: அதுதான் நான் சொல்லுறேன் இவர் சொன்னார் வந்து சோபாசக்தி தமிழ் நாட்லேயே புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் எல்லாம் செய்தார் என்று அதெல்லாம் கட்டமைக்கப்பட் பிம்பங்கள்தானே தவிர அப்படியெல்லாம் இருக்கவில்லை.
வாசுதேவன்: உங்களுடைய விடுதலைப் புலிகள் எதிர்ப்பு சம்பந்தமாக என்னால் சில விசயங்களை இங்கு சொல்லாமுடியாமல் இருக்கின்றேன் ஏனெனில் தொழில் சார்ந்த விடயமாக இருப்பதால் என்னால் சொல்லமுடியாது. சில விசயங்களை வெளிப்படையாக பேசமுடியாது.
உதயகுமார்: புத்தகம்பற்றி பேசுவம்
தேவதாசன்: தனிநபர்கள் பற்றியெல்லாம் நாங்க பேசத்தேவையில்லை.
வாசுதேவன்: உதாரணத்திற்கு இந்த நூலில் ஒரு இடத்தில் சொல்லப்படுகின்றது விடுதலைப்புலிகளிடம் சிறிய அளவிலேனும் விமானப் படை இருப்பது, அது எந்தளவுதூரம் சர்வதேசத்தில் பீதியை உருவாக்குகிறது என. இதன் காரணமாக ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் தடைசெய்யப்படுகின்றது. பிரான்சிலும் விடுதலைப் புலிகளின் செயலகம் தடைசெய்யப்படுகின்றது. அதற்கு இங்கு கொடுக்கப்பட்ட ஆதரவுகள், ஏற்கனவே தாயாரிக்கப்பட்ட ஆவணங்கள் யாவும் விடுதலைப் புலிகள் பிரான்சில் தடைசெய்யப்பட்ட அன்று பின்நேரமே தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகின்றது. அத்தகவல்களை கொடுத்தவர்கள் யார் என்பதெல்லாம்…
தேவதாசன்: அடிப்படையே அதுதான், இந்த போராட்டத்தை தொடக்கிவைத்ததும் சர்வதேசம் தான். அழிக்கப்பண்ணியதும் சர்வதேசம்தான். இந்த நூலிலும் சொல்லப்படுகின்றது ஜப்பானுக்கு அடுத்து வளர்ச்சியடைந்த ஒரு நாடாக இலங்கை இருந்திருப்பதாகவும், 1948 ஆம் ஆண்டு காலத்திற்கு பின்பு டி.எஸ்.சேனநாயக்காகவின் ஆட்சியை தொடர்ந்து இலங்கை பொருளாதாரரீதியாக வளர்ச்சியடைந்த நாடாகவும் இருந்துள்ளது என்று. ஆனால் இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணம் சர்வதேசம்தான்.
வாசுதேவன்: குறிப்பாக இந்தியா…. ஆரம்பித்து வைத்தது இந்தியா.
தேவதாசன்: இல்ல அப்படி சொல்லேலாது. ஆரம்பிச்சது அமெரிக்கா. அமெரிக்கா ஆரம்பிச்சு வைக்க இந்தியா நுழைந்தது. அதுதான் உண்மை இவற்றையெல்லாம் அழகாக சொல்லியிருக்கிறார். ஆனால் கார்டன் வைஸ் அவர்களின் தகவல்களும் அவரது சொந்த அனுபவமாக இல்லைதானே. தனது நம்பிக்கை சார்ந்தவர்களிடம் இருந்து பெற்ற தவல்கள்தான்.
வாசுதேவன்: அவர் பெற்ற தகவல்கள் கூடுதலாக வந்து சிங்கள புத்திஜீவகளிடமிருந்து பெறப்பட்டவை. சிலரது பெயர்களையும் குறிப்பிடுகிறார். மற்றது யு.ரி.எச்.ஆர். இடமிருந்து பெற்றவைகள். யு.ரி.எச்.ஆரின் பொசிசன் வந்து எங்களுக்கு ஆரம்பித்திலேயே தெரியும்.
அசுரா: இந்த நூல் பற்றிய எனது பார்வை வந்து வாசுதேவன் சொன்னது மாதிரி பலன்ஸ் பண்ணி பலன்ஸ் பண்ணித்தான் போகுது. ஒரு கட்டுரைப் படைப்பை எப்படி முடிப்பது என்ற வகையில் இந்த நூல் அமையேல்ல. மற்றது சர்வதேச நிலைப்பாட்டில் வந்து சீனா இந்தியா என்பதற்கு அப்பால் அமெரிக்க செனெட் சபை இலங்கையில் அமெரிக்கா தலையிட தடைவிதித்தது. இலங்கைக்கும் சீனாவுக்கும் உள்ள உறவு, இலங்கைப்பிரச்சனையில் தலையிடுவதால் சீனாவுடனான அமெரிக்க எதிர்ப்பு, சீனாவின் உலகப்பொரளாதார வளர்ச்சி இவைகளெல்லாம் கவனத்தில் கொள்ளப்பட்டதாலேயே மேற்குலகம் இலங்கைப்பிரச்சைனையில் தலையிட முடியாத நிலை ஏற்பட்டதென்பதும், இதுவே இலங்கைக்கு சாதகமாக இருந்ததாகவும் இங்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதோட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கையாலாகாத நிலை குறித்தெல்லாம் இதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மற்றது இந்த போர்க்குற்றம் பற்றிய ஒரு கேள்வி எனக்கு. போர் என்பதே குற்றம்தான். நாங்களல்ல, இந்த நூலில் கார்டன் வைஸ் அவர்களே சொல்லுறார் புலிகள் இறுதி நேரம்வரை தற்கொலைப்படைகளை பாவித்திருக்கிறார்களென. இராணுவத்தின் மனநிலை பற்றி அவர் சொல்லும்போது இராணுவத்தில் இருக்கும் சிலர் வருகிற மக்களை அனுதாபத்துடன் வரவேற்றதாகவும், சில இராணுவத்தினர் மக்களை தற்கொலைப்படையினராக சந்தேகித்ததாகவும் கூறுகிறார். வெள்ளைக் கொடியுடன் வருபவர்களையும் அவ்வாறே சந்தேகிக்கும் நிலை இராணுவத்திற்கு நேர்ந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார். போர் குற்றம் எனும்போது அதை இரண்டு நாடுகளுடன் தானே நாம் ஒப்பிடலாம். ஒரு சட்டதிட்டங்களுக்கும் உட்படாத ஒரு அமைப்புடன் ஒரு நாடு எப்படி போர்குற்றங்களை அனுசரிக்கமுடியும். வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் கூட குண்டுடன் பாய்ந்ததாக தெரியவருகின்றது. ஆகவே இதை நாம் எப்படி பார்ப்பது.
வரதன்: இதில என்ன பிரச்சனை என்றால். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் மாதிரித்தான் இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும். இரண்டு பேரும் போர்க்குற்றவாளிகள்தான். இது எல்லாருக்கும் தெரியும். உலகமும் அறிந்த விசயம்.
வாசுதேவன்: அதை நான் மறுக்கேல்ல. எனக்கு சரியான உண்மைகள் தெரியாது. இப்ப இவரும் (கார்டன் வைஸ்) அந்த இடத்தில் இருக்கவில்லை ஆனால் இருண்டு பேர் அங்கிருந்து தவல்கொடுத்துக் கொண்டிருக்கினம். இதில உள்ள பல விடயங்கள் ஏற்கனவே இணையத்தளங்களில் வந்த விடயங்கள் தான். விடுதலைப் புலிகள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் ஏற்கனவே வந்த விசயங்கள். அதை வாசிக்கும்போது கிட்டத்தட்ட போரடித்ததென்றே சொல்லலாம். சாதாரணமான அரசியல் மயப்படுத்தப்படாத உண்மைகளை சொல்லக்கூடியவர்கள், என்னிடம் மொழி பெயர்ப்பிற்கு வரும்போது அவர்களுடன் நான் கதைத்திருக்கின்றேன். இடையில் ஒன்று சொல்லுறன் இவர் (கார்டன் வைஸ்) சொல்லுறார் ஒட்டுமொத்த மக்களையும் அரசாங்கம் விடுதலைப் புலிகளாகத்தான் பார்த்தார்களென்று. அடுத்ததாக விட்ட விசயத்திற்கு வாறன். நான் என்ன கேக்கிறன் என்றால் விடுதலைப் புலிகள் சுட்டார்கள், அடித்தார்கள் என்ற வசனம் எல்லாம் வருகுது. நான் என்னிடம் வருபவர்களிடம் கேக்கும்போது அவர்கள் என்ன சொல்லுகிறார்களென்றால், வன்னிக்குள் அகப்பட்டடிருந்த மக்கள் கூட்டத்தில இருந்தவர்களில் விருப்பமாக சேர்ந்து பயிற்சியெடுத்த போராளிகள், கட்டாயமாக சேர்க்கப்பட்ட போராளிகள், பிறகு இந்த போராளிகளைச்சேர்ந்த குடும்பங்கள், போரில சம்பந்தப்படாத குடும்பங்கள் என்று. மக்கள் 2002 ஆம் ஆண்டு சமாதான காலத்தில எப்படி போருக்கு இயல்பு நிலையில் உதவி செய்தார்களோ அவர்களெல்லோரும் தங்களது உயிருக்கு ஆபத்து வரப்போகுதென கருதியபோது மிச்ச ஆக்களனைவரையும் விட்டுட்டு தாங்கள் மட்டும் தப்பியோட முயற்சித்தார்கள். மற்றவர்கள் தப்பிப்போகேலாது. காரணம் அவர்கள் போராளியும், போராளியின் தாயும், தகப்பனும், சகோரிகளாகவும் இருந்தவர்கள், சிலவேளை மாமா, மாமி, உளவு பார்த்தவகளும் அடங்கும். இவர்களெல்லாம் தப்பிப்போகேலாது. இந்த சிக்கலுக்க நடந்தது சிவில் யுத்தம்போல. உள்ளுக்குள்ள ஒரு ரென்சன் வந்திட்டுது. கடசி நேரத்திலும் போகாமல் இருந்தவர்கள்தான் யுத்தப் பிரதேசத்தில் இருந்தவர்கள். இவர்களே மிக மோசமான நிலையில் இருந்தார்கள். இவர்களே போராளிகளும், போராளியை சார்ந்தவர்களும். இவர்கள் தப்பிப்போகேலாது. இவர்களே தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக ஆக்களை மயமுறுத்துவது, தப்பியோடுபவர்களை சுடுவது போன்ற வேலைகளை செய்திருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். இது வந்து அரசியல் மயப்படுத்தப்படாதவர்களிடம் இருந்து வரும் செய்திகள்தான் இவை. ஒட்டுமொத்தமாக புலிகளும், மக்களும்தான் அங்கு இருந்தார்கள் என்பது சாத்தியம் இல்லாத கதை. அங்கு புலிகள் இருந்தவர்கள், புலிகளைச் சார்ந்தவர்கள் இருந்தவர்கள், புலிகளைச் சாராதவர்கள் இருந்தவர்கள். இப்படியான ஒரு கட்டமைப்பு இருந்தது. இதை என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில சிலர் சொல்லுகிறார்கள் கட்டளை மையம் கூட கெம்பிளீற்றாக செயலிழந்து போய்விட்டதாக. பின்பு யார் யாரெல்லாம் இருந்தனரோ அவர்களெல்லாம் கட்டளைத் தளபதியாக மாறினார்கள் என்று. இந்தக்கட்டம் தான் தோல்வியின் இறுதிக்கட்டம், எல்லாமே சீர்குலைந்த நேரம் அப்ப அந்த நேரத்தில வந்து, விரும்பியவர்கள் விரும்பிய வேலைகளை செய்தார்கள்.
றமேஸ்: அது விரக்தியில செய்வார்கள். உதாரணத்திற்கு என்ர வமிலி இருக்குது. இன்னொரு வமிலி ஓடுது எனும்போது நின்று சண்டை பிடிப்பவன் யோசிப்பான் என்னடா விட்டுட்டு ஒடுறாங்கள். இவங்களுக்காகத்தானே சண்டை பிடிக்கிறம் என்று யோசிப்பான். எனவே அவர்களே சுயமாக எதாவது முடிவெடுப்பார்கள்.
சோலையூரான்: நீங்க சொன்நீங்க தானே கட்டளை மையம் சீர் குலைந்து போய்விட்டது அதனாலேதான் அப்படி நடந்ததென்று.
வாசுதேவன்: ஒரு பகுதிச் செய்தியை சொன்னேன்.
சோலையூரான்: நீங்க உதாரணத்திற்கு சொன்நீங்க. ஆனால் நாங்க அப்பிடி பார்க்க ஏலாது. ஏனென்று சொன்னால் 15ஆம் திகதி கூட அங்கிருந்த முக்கியமான தளபதிகளால் வெளியில இருப்பவர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது, நாங்கள் தொடர்ச்சியாக போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். மக்களே அணிதிரண்டுவாருங்கள் என்று. இதில நாங்க எப்படி பார்க்கிறதென்றால் புலிகள் ஒரு தொகையான மக்கள் அங்கு கொல்லப்படுவதை விரும்பியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
வாசுதேவன்: அதை கார்டன் வைஸ் அவர்களும் குறிப்பிட்டிருக்கின்றார்.
சோலையூரான்: ஏனென்றால் 15 ஆம் திகதிவரை தாம் போராடிக்கொண்டிருக்கின்றோம் என்று சூசையும் சொல்லிக்கொண்டிருந்தவர். 16ஆம் திகதி பின்நேரம்தான் அவர்கள் எல்லாம் இழந்து பையித்தியக்கார மனநிலைக்கு போனார்கள். ஆனால் அங்கு மக்கள் கொல்லப்படுவதை அவர்கள் விரும்பினார்கள். அதனூடாக தங்களை நிலை நிறுத்தலாம் என நினைத்தார்கள் என்பது உண்மை.
தேவதாசன்: சர்வதேச அனுதாபத்தை பெறுவதற்காக மக்கள் கொல்லப்படுவதை விரும்பினார்கள்.
விஜி: யுத்த காலத்திலதான் புலிகள் இதை விரும்பினார்கள் என்றில்லை அவர்கள் எப்போதும் அதைத்தான் விரும்பினார்கள்.
சோலையூரான்: இதற்கு ஒரு உதாரணததை சொல்லலாம். சந்திரிகாவால் 95ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பிடிக்கப்பட்டிருந்த சமயம். கிழக்கு மாகாணத்தில வந்து பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தவாகள் புலிகள். களவாஞ்சிக்குடியிலிருந்து மட்டக்களப்புவரை தமது கட்டுப்பாட்டுபிரதேசமாக கொண்டுவரவேணும் என்பதற்காக புதுக்குடியிருப்பில ஒரு தாக்குதல் செய்தார்கள். அது எஸ்.ரி.எவ் ஆல் தோற்கடிக்கப்பட்டது. அதில் புலிகள் கொல்லப்பட்டடார்கள். இரண்டாவது வவுணதீவில் ஒரு தாக்குதல் முயற்சியில் 90க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டு அதுவும் தோல்வியில் முடிந்தது. இந்த தோல்விக்கு காரணமாக இருந்தவர்கள் என சமூகத்திலுள்ள முக்கியமான இருவர்களுக்கு மரணதண்டனை கொடுத்தார்கள். இது எதற்காகவென்றால் இப்படியான செயல்களால் தான் எமக்கு தோல்வியே தவிர நாங்கள் எப்போதும் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இவ்வாறான மரணதண்டனைகளை வழங்கினார்கள்.
வாசுதேவன்: கொலம்பியாவிலுள்ள farc எனும் அமைப்பும் இதைத்தான் செய்கிறது.
விஜி: இது நோமலா என்பதுதான் பிரச்சனை.
வாசுதேவன்: யுத்தம் என்றால் இது நோமல். சாதாரணமான சமூகத்தில் இப்படி நடக்காது. இந்த புத்தக விமர்சனம் வந்து புலிகளுக்கு எதிரான விழாவாக நடக்கலாம் என்று நான் எதிர்பார்த்தனான். இப்ப அதுதான் நடந்து கொண்டிருக்கு. இந்த புத்தகத்திலுள்ள ஒரு குட்டிப் பகுதிதான் அவைகள். இந்தப் புத்தகத்தில எவ்வளவோ விசயங்கள் இருக்கு அதுபற்றி கதையுங்கோ பாப்பம்.
சோபாசக்தி: அமைதி..அமைதி என்னையும் பேசவிடுங்கோ. இன்றைய நிகழ்வு சம்பந்தமான விளம்பர நோட்டீசில என்ர தொகுப்புரை என்று போட்டிருக்கினம். அது சும்மா நம்பாதேங்கோ. என்னைக் கேக்காமல் போட்டிருக்கினம்.தொகுப்புரை என்பது ஒரு பிழையான மரபு. வரும் கூட்டங்களில அப்படி தொகுப்புரை என்று போடாதேங்கோ. நான் பேசுவது தொகுப்புரையல்ல நான் பேசினாப்பிறகு எல்லோரும் தொடர்ந்து பேசுவோம். போன கூட்டத்தில இந்த புத்தகம் குறித்து பேசுவதற்கு நான்தான் அபிப்பிராயம் தெரிவித்தனான். இது வந்து ஒரு அருமையான புத்தகம் கடுமையான உழைப்பு. இலங்கையின் போராட்ட வரலாறு அது, இது போக்குவரத்து என்று மிக அருமையாகவும் ஒரு பக்கச்சார்பு இன்றியும் எழுதப்பட்ட புத்தகம். இந்த புத்தகம் பற்றி வாசுதேவன் நிறையப் பேசுவார் என்று பார்த்தனான் ஏனென்றால் அவ்வளவு விசயங்களை உள்ளடக்கிய புத்தகம். அதிகமாக கூடுதலாக பேசக்கூடியவர் இன்று குறைவாக பேசியிருக்கிறார். வாசுதேவன் தனது உரையில் கார்டன் வைஸின் பெயரை ஒருக்காத்தான் குறிப்பிட்டவர் என்ர பெயரை மூன்றுதரம் குறிப்பிட்டார். அங்க இருந்து என்னைப்பார்த்துக் கொண்டே பேசினார். வாசுதேவன் சொன்னதுபோல வல்லரசுகள் சேர்ந்து தோற்கடிச்ச சம்பவத்தை பத்து நாடுகள் சேர்ந்துதான் தோற்கடிச்சதென்று பலரும் சொல்லுகிறார்கள். இந்த சீனா, இந்தியா, அமெரிக்கா எல்லாம் சேர்ந்துதான் தோற்கடிச்சதென்றும் சொல்லப்படுகின்றது இதை கார்டன் வைஸோ, ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவினரோ சொல்லித்தான் எமக்குத் தெரியவேணும் என்றில்லை.
வாசுதேவன்: அதைத்தான் நான் முதலில் சொன்னனான். இதெல்லாம் எங்களுக்குத் தெரிந்த விடயம்தான் என்று முதலே சொல்லிவிட்டேனே.
சோபாசக்தி: இந்த ஈழவிடுதலைப் போராட்டத்தில எப்படி அந்நிய மேலாதிக்க வல்லரசுகள் குறிப்பாக இந்தியா போன்றவை எப்படி தமது கையில் எடுத்திருக்கிறது. எப்படி பிளே பண்ணுகிறார்கள் என்பது பற்றியெல்லாம் போராட்டம் தொடங்கிய காலகட்டத்திலிருந்தே இவை பற்றிய விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கு. குறிப்பாக ‘வங்கம் தந்த பாடம்’ என்ற புத்தகத்தில் இருந்து நிறைய விமர்சனங்கள் வந்தது. இடது சாரிகள், கொம்யூனிஸ்டுக்கள், தனித்த சிந்தனையாளர்கள் என பலர் மேற்குலகத்தை நம்பாதேங்க அவங்கதான் இந்த கேமை பிளான் பண்ணுகிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால் இந்தக் குரல்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளால் ஒடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை. கம்யூனிஸ்ட் கட்சிகள் தடைசெய்யப்பட்டது, பலர் கொல்லப்பட்டார்கள் விமர்சனம் என்ற பேச்சுக்கெல்லாம் அப்போ இடம் இருக்கவில்லை. 2009 முன்பு சொல்லப்பட்டதென்ன? அமைதியா கம்பென்டு இருங்க தலைவருக்குத் தெரியும்! தலைவர் சிந்திப்பார் அவர் எல்லாம் செய்வார் என்று. நீங்க சும்மா இருந்து கீபோட் மார்க்சிய பிரச்சாரம் செய்யுறது, கூட்டம்போட்டு கதைக்கிறது, இலக்கியச் சந்திப்பை வைத்து குளப்பம் செய்யுறது…. நீங்கள் இதெல்லாம் செய்து ஒன்றும் நடக்கப்போறதில்ல. தலைவர் பிளான் பண்ணுவார் அவர் கெட்டித்தனமாக கையாழுவார் என்றுதான் எங்களுக்கு சொல்லப்பட்ட கதைகள் ‘அந்தப்பக்கத்தில’ இருந்து. அதேநேரம் மேற்குலகத்தின் சதிகள் பற்றி பக்கம் பக்கமாக, புத்தகம் புத்தகமாக எழுதப்பட்டிருக்கிறது, பேசப்பட்டிருக்கிறது, விவாதிக்கப்பட்டிருக்கின்றது. இவை இவ்வாறு இருக்க இறுதியுத்தத்தில் இரண்டு தரப்புமே தவறிழைத்திருக்கின்றன, இரண்டு தரப்புமே போர்க் குற்றங்களை புரிந்திருக்கின்றன. முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்டது ஒரு இனப்படுகொலை இதில எனக்கு எந்த சந்தேகமுமில்லை. இதில மாற்றுக்கருத்துடையவர்கள் இருக்கினம், ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களும் இருக்கினம். என்னும் சொல்லப்போனால் எண்டைக்கு 84 ஆம் ஆண்டில் இருந்து விமானத்தில தமிழ் கிராமங்களில் குண்டு போடத்தொடங்கினார்களோ அன்றில் இருந்து இனப்படுகொலை ஆரம்பித்துவிட்டது என்பதுதான் என்னுடைய கருத்து. அது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் இறுதியுத்தத்தின் நடந்தவைபற்றிய யு.என்.ஓ அறிக்கை வந்து புலிகள் மீது ஆறு குற்றங்களையும், அரசு மீது ஐந்து குற்றங்களையும் சுமத்தியுள்ளது. அதற்கு பிறகு கார்டன் வைஸின் புத்தகம் வருகிறது. இவை இரண்டும் வெளிவந்ததன் பின்புதான் இந்த விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மேலும் விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடகங்கள் எங்கடபக்கமும் கொஞ்சம் பிழை விட்டிருக்கினம்தான், மண்டை குழம்பித்தான் போட்டுது என்று. ஆனால் இந்த யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது, அங்கு மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீங்கள். உங்களுக்கு வடிவாத்தெரியும் 2ஆம் திகதி கிளிநொச்சி விழுகுது, அண்டையில இருந்து மக்களை ஓட்டிக்கொண்டேதிரிந்தார்கள். அரசாங்கம் அறிவிக்குது ஒரு பகுதியை, இது ஒரு யுத்தமற்ற பிரதேசம் இங்கு தாக்குதல்கள் நடத்தப்பட மாட்டாது என்று. யுத்தம் அற்ற பிரதேசம் என்றால் என்ன? அங்கு ஆமியும் போகக்கூடாது. புலிகளும் போகக்கூடாது ஆனால் புலிகள் அங்கேதான் இருந்தார்கள். பாங்களாதேசத்து அதிகாரி சொல்லுறார் தாங்கள் பங்கருக்குள் இருக்கிறம் அது செஞ்சிலுவைச்சங்கம் இருக்கும் இடம் என அறிவித்தல்களெல்லாம் இருக்கு. அப்படியிருக்க அருகில இருந்து புலிகள் அடிக்கிறார்கள். அதை நோக்கி ஆமியும் அடிக்குது. இவ்வாறு இரண்டுதரப்புமே யுத்த மீறல்களை செய்திருக்கின்றார்கள். நந்திக்கடலில் பிரேதங்கள் மிதக்கிறதென்பது எங்களுக்குத் தெரியும் அது யார் சுட்ட பிரேதங்கள்.. புலிகள் சுட்டபிரேதங்கள். அதுகுறித்து நாங்கள் இங்கு பேசுகின்றோம். எழுதுகின்றோம். ஆனால் மே18 புலிகள் விழும்வரை வாய் மூடியிருந்த புலி ஆதரவாளர்கள், புலி ஆதரவு ஊடகங்கள் அனைத்துமே ஒருவிதத்தில் போர்க் குற்றவாளிகளே.
வாசுதேவன்: இதில ஒரு முக்கியமான விசயத்தை சொல்ல மறந்துட்டீங்கள். புலி எதிர்ப்பிற்கு காட்டின முழு சக்தியையும் நீங்கள் மற்றப்பக்கத்திற்கு காட்டவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்த உண்மை. நீங்கள் ஆயிரம் கட்டுரைகள் எழுதியிருக்கிறீங்க. ஆனால் ஒருகட்டுரையில்கூட அதற்கான நியாயத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னொரு விசயம் கேளுங்க. சில உண்மைகளை நான் சொல்லவேணும்.புலிஆதரவாளர்கள் வந்து எப்படி குறுட்டுத்தனமாக புலிகளை ஆதரித்தார்களோ அதேபோல புலி எதிர்ப்பாளர்களும் வந்து என்னதான் நடந்தாலும் புலிசெய்வதுமட்டுமே பிழை, மற்றதைப்பற்றி ஒரு கவலையும் இல்லை என்றுதான் சொன்னார்கள்.
வரதன்: புலி எதீhப்பாளர்களை எவ்வாறு கணிக்கிறீர்கள்.
சோபாசக்தி: கொஞ்சம் அமைதியாக இருங்க அவரை பேசவிடுங்க.
வாசுதேவன்: நீகள் பங்களாதேசத்து அதிகாரிபற்றி குறிப்பிட்டீங்க அவர் சொல்லுறார் ஆஸ்பத்திரிகளுக்குப் பக்கத்திலும், பங்கருக்குப்பகத்திலையும் ஆட்டிலறிகளை வைத்திருந்தவர்கள் என்று அதற்கு கார்டன் வைஸ் என்ன சொல்லுகிறார் என்றால் ஒரு ஒன்றரைக் கிலோ மீற்றர், இரண்டு கிலோ மீற்றர் நெருக்கமான பகுதிக்குள்தான் அவர்கள் நிக்கமுடியும். இவ்வாறான நிலையில் அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும் என்று கார்டன் வைஸ் சொல்லுகிறாரென்றால், அரசாங்கம் தாக்குதலை நிறுத்தி பட்டிணியாக இருக்கவிட்டோ, அல்லது ஏதோ ஒரு வகையில் அவர்களை செயலிழக்கசெய்திருக்கலாம். ஆனால் அரசினது நோக்கம் எவ்வளவு மக்கள் இறந்தாலும் பறவாயில்லை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவர்களது இறுதி நோக்கமாக இருந்ததென்று. அதை நீங்க மறந்து புலிகள் ஆட்டிலறியை வைத்து அடித்தார்கள் என்று சொல்லுகிறீர்கள்.
சோபாசக்தி: கார்டன் வைஸ் சொல்லுகிறார் இந்த யுத்தம் நடந்த ரைமில கொழும்புக்கு அடுத்ததாக அதிக சனத்தொகையிருந்தது அங்குதான் என்று. இது எப்படி ஆனது? அங்கேயே இருந்த மக்களா அனைவரும்? இல்லையே கிளிநொச்சி விள, மந்தைகளாக ஓட்டிக்கொண்டு வந்து சேர்க்கையாக உருவானதுதானே .
இந்த முடிவு
வாசுதேவன்: நீங்க மீண்டும் அந்த தவறை விடுறீங்க புலிகள் மந்தைகளாக மக்களை கொண்டு சென்றார்கள் என்று.
உதயகுமார்: புலிகள்தான் கொண்டு சென்றவர்கள்.
வாசுதேவன்: நீங்கள் நான் சொன்னதை உள்வாங்கவில்லை இந்த பைபிள் பிரச்சாரம் செய்கின்ற ஆக்கள் மாதிரி அங்கு புலிகளும் மக்களும் இருந்தவர்கள். றைட் தற்சோல் இதைத்தவிர அங்கு ஒன்றும் இருக்கவில்லை என்று சொல்லுறீங்க. நான் அப்படி சொல்லவில்லை. அங்க இருந்தது வந்து புலிகள், புலிகளின் ஆதரவாளர்கள், புலிகளால் பிடிக்கப்பட்டவர்கள், யத்தத்தில் சம்மந்தப்படாதவர்கள் என ஒட்டுமொத்தமாக இருந்தவர்கள். அந்த உள் மெக்கானிசம் என்னமாதிரி நடந்ததென்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீங்கள். நீங்கள் என்ன சொல்லுறீங்க அங்க புலிகள் இருந்தவை, மக்கள் இருந்தவை அவ்வளவுதான் நடந்தது என்று.
அரவிந் அப்பாத்துரை: இது வந்து ஒரு பெரியவிசயம் என்ன தெரியுமா? யுத்தம் முடிவடைவதற்கு முன்னால் இராணுவ அதிகாரியான நாணயக்காரா என்ன சொன்னார் தெரியுமா? அங்கு இருப்பவர்கள் அனைவருமே புலிகள் என்று சொன்னார். அதுவே போர்க் குற்றத்தின் தொடக்கம் என்பேன். இது சொல்வகையான ஒரு போர்க்குற்றம்.
வாசுதேவன்: ஆமா அவங்க சொன்னார்கள் புலிகள்தான் இருந்ததென்று இவர் சொல்லுறார் அங்கு புலிகளும் மக்களும் இருந்ததென்று ஆனால் உண்மை அதுவல்ல.
அரவிந் அப்பாத்துரை: இரண்டாவது வந்து விடுதலைப் புலிகள் கனரக ஆயதங்களை மக்களுக்கு எதிராக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றது, எழுதப்பட்டிருக்கின்றது. எந்தவொரு இராணுவமோ, இயக்கமோ தன் மக்களின் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தினால் அதில் என்ன தார்மீக நியாயம் இருக்கிறது என தெளிவாக எழுதியிருக்கிறார்.
வாசுதேவன: இதில 177 வது பக்கத்தில இவ்வாறு எழுதப்பட்டிருக்கு: ’தங்கள் மக்களின் அவலமான சூழல் உலக நாடுகளைத் தலையிடத் தூண்டும், எனவே முக்கோணத்திற்குள் அவர்களை சிறைவைத்து, ராணுவத்தை தாக்கவைத்து, பொதுமக்களை அதிக எண்ணிக்கையில் உயிரிழக்க வைப்பதை ஒரு தந்திரமாக கடைப்பிடித்தனர் விடுதலைப் புலிகள். அனால் அத்தந்திரம் அவர்களுக்கு எதிராய் முடிந்தது.
பொதுமக்களை அவர்கள் கொல்வது வெளியுலகிற்குத் தெரியவர, அதனைச் சுட்டிக்காட்டி நாங்கள் எங்கே கொல்லுகின்றோம் அவர்கள் தானே அப்படிச் செய்கிறார்கள் என்று பிரச்சனையை அவர்கள் பக்கம் திருப்பிவிட்டனர். ஆனால் உண்மை அதுவல்ல. விடுதலைப்புலிகளின் அக்கிரமங்கள் நிறைய என்றாலுங்கூடப் பொதுமக்கள் பெரும்பாலானோரின் மரணததிற்கு அரசின் தாக்குதலே முக்கியகாரணம்.’இரண்டு பேரும் பொறுப்பு என்றாலும் அரசின் தாக்குதலே முக்கியகாரணம் என்று சொல்லுகிறார்.
வரதன்: புலி வந்து மக்களை கொன்றாலும் அரசாங்கத்தின் பிழைதான். மற்றது நீங்க புலி எதிர்ப்பாளர்களென்று அடிக்கடி உபயோகிக்கிறீங்க அதை எப்படி என தெளிவு படுத்துங்க.
வாசுதேவன்: புலிகள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்று கருதியவர்கள்.
அசுரா: வாசுதேவன் சொல்வதுபோல் புலி எதிர்ப்பாளர்களது நோக்கம் வந்து புலி அழியவேணும் என்பதாக
வாசுதேவன்: அப்படி வெளிப்படையாகசொன்னவர்கள்.
அசுரா: இல்ல அப்படியல்ல. புலிகள் வந்து மற்றவர்கள் பேசுவதற்கும், மற்றவர்கள் செயல்படுவதற்கும், இயங்குவதற்கும் வழிவிடவேண்டும் என்பதுதான் தேவையாக இருந்ததே தவிர புலிகள் அழிக்கப்படவேண்டும் என்பதல்ல. இன்று புலிகளின் செயல்பாடுகள் ஜனநாயக பூர்வமாக இருக்குமென்றால் புலிகளின் அழிவெணும் எனும் கருத்து எப்படி இருக்கும். இப்படியெல்லாம் லாச்சப்பலில் நாம் சந்தித்துப் பேசமுடிந்ததா முன்பு.
விஜி: புலிகள் உடல் ரீதியாக அழியவேண்டும் என்பதல்ல. அவர்களது சிந்தனை தான் அழியவேண்டும் என்பதாக இருந்தது.
சோலையூரான்: இண்டைக்கும் அந்த சிந்தனைக்கு எதிராக தொடர்ச்சியாக வேலைசெய்து கொண்டுதான் இருக்கிறோம்.
வாசுதேவன்: இந்தப் புத்தகத்தில நிறையவே தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விசயங்கள் இருக்கு. அநகாரிகதர்மபாலாவின் வருகை அவரது செயல்பாடுகள் பற்றியெல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் அதற்காக சிங்கள ஆய்வாளர்கள் பலருடன் கலந்து ஆலோசித்த அனுபவத்தில்தான் எழுதியிருக்கின்றார். பொலநறுவையில் நிகழ்ந்த இரண்டு படையெடுப்புகளால் வந்து இரண்டு இராச்சியமாக பிரிந்துபோகிறது. அதற்கிடையிலான காட்டுப்பகுதி வந்து சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்குமான இயல்பான எல்லையாக வருகிறது. அதற்குள் எவரும் போகவுமில்லை. அங்கு இரண்டு மதங்களுடைய முக்கியததுவமும் குறைந்திருந்தது என்று சொல்லுகிறார். ஆனால் காலனித்துவ காலம் இங்கு வந்து கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்கு முயலும்போதுதான் இங்குள்ள சமூகங்களும் இரண்டாக பிரிந்துபோகும் நிலை ஏற்படுகின்றது. இந்தக்காலத்தில் இறையியல் சபை அங்கத்தவர்களான ரசியாவைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் இலங்கை வருகிறார்கள். இவர்கள் பௌத்த மதம் குறித்து ஆய்வுசெய்தபோது தேரவாத பௌத்தம் இலங்கையில் இருப்பதை அறிந்தே அங்கு சென்றார்கள். அந்தக்காலகட்டத்தில அமெரிக்காவில எந்த மதங்கள் நல்லமதம் என்று கண்டுபிடிப்பதற்கான எழுச்சியான காலகட்டமாக இருந்தது. இன்றைய காலகட்டமும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கின்றது. இந்த பௌத்த மதத்தை அவர்கள் இலங்கை முழுவதிற்குமாக வளர்ச்சிபெற வைப்பதற்கான முயற்சிகளை செய்து கொண்டு போகும்போது இந்த முயற்சிகளில் ஈடுபடுகின்றவரின் செயலாளராக இருந்தவர்தான் அநகாரிக தர்மபாலா என்பவர். அநகாரிகதர்மபால என்பது அவரது பெயரல்ல அதனது அர்த்தம் வீடற்றவர், அல்லது தர்மத்திற்கு வேலை செய்பவர் என்பது. இந்த அநகாரிகதர்மபால தான் இலங்கையில் பரவலாக இருந்து வந்த பௌத்தத்தை சிங்கள் மொழியோடு இணைக்கும் வேலையை செய்தார். இதற்கு அடிப்படைக்காரணமான தூண்டுதலாக இருந்தது காலனித்துவ கிறிஸ்தவ மதங்களாகும்.
உதயகுமார்: அதற்கு முதல் தமிழ் பௌத்தர்கள் இருந்திருக்கிறார்கள்.
வாசுதேவன்: நிச்சயமாக. பராக்கிரமபாகு காலத்திலேயே தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து ஆட்சி செய்திருக்கின்றார்கள்.
நாதன்: இந்த யுத்தத்தில இரண்டுதரப்பிலும் பிழை இருப்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறோம்.இரு தரப்பிற்புமிடையில்யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்பட்டு இருந்ததுதானே அந்தவேளையில் யுத்த நிறுத்தத்தை மீறியவர்கள் யார்? என்பது பிரதானமான கேள்வி என்றுதான் நான் நினைக்கின்றேன். புலிகளா? அரசாங்கமா யுத்த நிறுத்தத்தை மீறியது.
வாசுதேவன்: நாதன் இதில ஒரு பொய்விவாதம் ஒன்றிருக்கு. சிங்கள ஆட்சியாளர்கள் விடுதலைப்புலிகளை எப்போதுமே நம்பவில்லை.அதேபோன்று விடுதலைப் புலிகளும் சிங்கள ஆட்சியாளர்களை நம்பவில்லை. இந்த சர்வதேசம் ஏதோ ஒரு செற்றப்பிற்காக ஒரு சமாதான உடன்படிக்கை நாடகத்தை தொடக்கியது. தொடக்கிவிட்ட அவர்கள் இந்த சமாதான ஒப்பந்தம் எவ்வளவு காலததிற்கு நீடிக்கும் என்ற எந்த வரையறையும் வைக்கவில்லை. இது ஒரு காலவரையறை அற்ற ஒப்பந்தமாக இருந்தது. இவ்வளவு காலத்திற்குள் இதை முடியுங்கள் என்று எந்த கண்டிசனும் வைக்கவில்லை. அரபாத்திற்கு என்ன நடந்ததோ அதோபோன்ற விசயம் தான் நடந்தது. அரபாத் கையெழுத்து வைத்ததோட பாஸ்தீன இயக்கமும் இல்லாதுபோனது. அதேபோன்றுதான் இலங்கையிலும் நடந்தது. அதேபோல தமிழர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் ஒரு ஒற்றுமையான சம்பவம் என்னவென்றால். யூதர்கள் எல்லோருமே அறுதியாக நமபுகிறார்கள் எங்களுக்கு அந்த நிலம் கடவுளால் அருளப்பட்டதாக.
அதேபோல் அநேகமான சிங்களவர்களும் கருதுகிறார்கள் அந்த நிலம் பௌத்தத்தின் வளர்ச்சிக்காக புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் என்று. இந்த அடிப்படை வேரை எப்படி பிடுங்குவது என்பதுதான் பிரச்சனை. இதனால் நாங்கள் சிங்களவர்களை கூடாதவர்கள் என்று கூறமுடியாது. இது ஒரு ஆழமான தத்துவ பிரச்சனையாக உள்ளது. அதற்காக அடிமட்டத்தில இருந்து பேசுவது எப்படி, அதற்கான வழி என்ன. இவற்றையெல்லாம் அரசியல் சார்பு நிலைகளுக்கு அப்பால் சென்று பார்த்தால் இந்த துன்பம் வந்து எவ்வளவு காலத்திற்கு நீடிக்கப்போகின்றது என்பதுதான் சிக்கலாக இருக்கின்றது.
தில்லைநடேசன்: வாசுதேவன் இந்தக்குழப்பகார அநகாரிக தர்மபாலவைப் பற்றி ஆய்வு செய்ததுபோல எங்கட ஆறுமுக நாவலர் பற்றியும் ஆய்வு செய்யவேண்டியுள்ளது. மற்றது விடுதலைப் புலிகள் அழிக்கப்படவேண்டும் என விரும்பியவர்கள் என்றது தவறு. அந்தக்காலகட்டத்தில இருந்து விடுதலைப்புலிகளின் சிந்தனையைத்தான் நாங்கள் எதிர்த்த நாங்களே தவிர தனிப்பட்டரீதியாக விடுதலைப்புலிகள் அழியவேண்டும் என கருதியதில்லை. இலக்கியச் சந்திப்பின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருந்தது.
வாசுதேவன்: இதில ஒரு பாதர் பத்மநாதன் என்று நினைக்கிறன் அவர் சொல்லுறார் எங்களுக்கு விடுதலைப் புலிகளுடன் முரண்பாடு இல்லை என்றில்லை, ஆனாலும் நாங்கள் அவர்களை ஆதரிக்கின்றோம் என்று. அதுபற்றி இதில எழுதியிருக்கிறார். அதேபோல சில பாதர்களையும், சிஸ்டர் மார்களையும் நீங்கள் வெளியேறுங்கள் என கேட்கப்பட்டபோது அவர்கள் தாங்கள் ஒருதரையும் விட்டு வரமாட்டோம் எனக் கூறியருக்கிறார்கள். எனவே மக்களை விட்டுவரமாட்டோம் என்று கூறினார்களா? புலிகளைவிட்டு வரமாட்டோம் என்றுகூறினார்களா?
விஜி: பாதர் மார், சிஸ்டர் மார் எல்லோரும் அனைத்தையும் கடந்து சிந்திக்கக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை இருந்தால்தான் நீங்கள் அப்படி கேட்கமுடியும்.
தில்லைநடேசன்: விடுதலைப் புலிகளின் சிந்தனை என்பது அவர்களுக்கே உரிய சொந்தமான சிந்தனை என்று கருதாதீர்கள். அது வந்து யாழ்ப்பாண சமூகத்தின் அடி வேரில் இருந்த வாற சிந்தனை அமைப்பு. இந்த சிந்தனை அமைப்புதான் அபாயகரமானது.
சுந்தரலிங்கம்: ஆரம்பத்தில் புலிகளும் இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள். பின்பு அவர்கள் கலந்து கொள்ளவில்லை காரணம் அவர்கள்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை அவர்களால் ஏற்றுக்காள்ள முடியவில்லை.
விஜி: கருத்தை எதிர்கொள்ள முடியாதவர்களால அங்கு வரமுடியாமல் போனது.
தில்லைநடேசன: அவர்கள் சொல்லுற கருத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் நாங்கள் இருக்கவில்லை என்பதையும் ஏற்றுக் கொள்ளவேணும்.
விஜி: அவங்க அடிச்சவங்கப்பா.
வாசுதேவன்: குறிப்பா சோபாசக்தி, சேனன், வின்சன் இந்த மூன்று பேரும் வந்ததில் இருந்து இலக்கியச் சந்திப்பின் நிலையே மாறிவிட்டது.
அசுரா: இது பொய்க் கதை.
விஜி : சேனன், வின்சன் இருவரும் பிரான்சில நடந்த சில இலக்கியச் சந்திப்பில் மட்டும் தான் கலந்து கொண்டவர்கள்.
சோபாசக்தி: ஐயோ உண்மையில இலக்கியச் சந்திப்புக்காரர்கள் எங்களை ஒண்டுக்கும் சேக்கிறதுமில்லை, அவங்கள் எங்கள கூப்பிடறதுமில்ல நாங்களல்லோ தண்ணியை போட்டுட்டு பின்னுக்கிருந்து கத்துறது.
வாசுதேவன்: அதுதான் பின்னுக்கிருந்து.
சோபாசக்தி: வழமையாக செய்யுறது அதுதானே.
வாசுதேவன்: இப்ப ஒரு கதையை நான் வெளிப்படையாக சொல்லுறன். வெளிவிவகார அமைச்சர் கதிர்காமர் கொல்லப்படுகின்றார். உடனடியாக பிரச்சாரம் எழுகிறது புலிகள்தான் கொன்றார்கள் என்று. புலிகளுக்கு எதிரான ஒரு அரசியல் வாதி இங்கு வந்து சொல்லுகிறார், அதை உறுதியாக சொல்லமுடியாது புலிகள்தான் கொன்றதென்று. ஆனால் அரசாங்கத்திற்கு ஒருதேவை இருந்தது அவரை கொல்லுவதற்கு. முக்கியமான விசயம் அடுத்த பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் கதிர்காமருக்கு இருந்தது. ஒரு தமிழரை அவ்வாறு அனுமதிக்க முடியாது இது முதலாவது விசயம். இந்த நேரத்தில் கொலை செய்தால் அது புலிகள் சுட்டதாகவே கருதப்படும் அதை உலகமும் ஏற்றுக் கொள்ளும். அதோடு யுதத நிறுத்தத்தை மீறி அவசரகால சட்டத்தை அமல்படுத்துவதற்கு சிறந்த சந்தர்ப்பமாகவும் கருதப்பட்டதாக புலிகளுக்கு எதிரான ஒரு அரசியல் வாதி இங்கு வந்து சொன்னவர். உண்மையா? இல்லையா? இங்க இருக்கிற இரண்டு மூன்று பேருக்கு அது தெரியும் அவர்கள் சொல்லாவிட்டால் நானும் அவர் யாரென்று சொல்லமாட்டேன்.
பலரும் சேர்ந்து: யார் என்று சொல்லுங்கோவன் இதில என்ன இருக்கு. ஓப்பினா கதையுங்க. வாசுதேவன் நாங்களும் தெரிஞ்சு கொள்ள வேணுமல்லா.
வாசுதேவன்: இது நல்லா இருக்கு ஆளக் காட்டித்தா, காட்டித்தா இல்லாவிட்டால் கொல்லுவம் என்ற மாதிரி இருக்கு. காட்டித் தரமாட்டேன் நான். ஒரு எக்ஸ் என்று வைத்துக் கொள்ளுங்கோ. வேணுமென்றால் நான் சொல்லுவதையும் உண்மை என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
யோகரட்ணம்: கதிர்காமரை கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை அவர்கள் மீது மேற்கொள்ளப்ட்டிருக்கும் நீதி விசாரணை பற்றி…
வாசுதேவன்: இலங்கையின் நிதிமன்றம் குறித்து இதில நல்ல வடிவா எழுதியிருக்கிறார்.
யோகரட்ணம்: சரி அது வேண்டாம். மகேஸ்வரனின் கொலை சம்மந்தமாக டக்ளஸ் மீதுதான் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் 150 பக்கங்களைக்கொண்ட நீதி மன்றவிசாரணையின் பின்பு இன்று அந்தக் கொலைக் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட விசாரணையூடாக அவர் புலிஉறுப்பினர் என்பதும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் மகேஸ்வரனின் மனைவி கூட முன்பு டக்ளஸ் மீதே குற்றம் சாட்டியவர்.இதேபோல ஜெராஜ் பெர்னான்டோ பிள்ளையிள் கொலைக்கும் நீங்கள் கதிர்காமரின் கொலைக்கு கூறப்பட்ட நியாயம்தான் கூறப்பட்டது. அவரும் அடுத்த பிரதமாராக வரும் வாய்ப்பு இருந்ததால் அரசாங்கமே அக்கொலையை செய்திருக்கும் என்பதாக. ஆனால் என்ன நடந்தது தற்கொலையாளி தங்கியிருந்த இடம, உடந்தையாக இருந்தவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டு உண்மை வெளிவந்தது. இன்றைக்கு கதிர்காமரை சிங்களவர்கள் எவ்வளவு தூரம் போற்றிப் புகழ்கிறார்கள் என்பதை பார்க்கும்போது எங்களுக்குவியப்பாக இருக்கு. கதிர்காமரின் நினைவுப்பேருரையில் ஒரு சிங்களப் பேராசிரியர் பேசுகின்றபோது இப்படியான திறைமைசாலியை சிங்கள மக்கள் பயன்படுவதற்கு கொடுத்துவைத்தவர்கள் என்று பேசியுள்ளார். எங்கட வழமையொண்டு என்னெண்டா, உதாரணத்திற்கு என்னை கொலை செய்ததை நீங்கள் கண்டிருந்தாலும் கடசிவரையும் நீங்கள் சொல்லப்போறதில்ல எனவே அது இனந்தெரியாதவர்களால் கொல்லப்பட்டது என செய்தியாகின்றது. முடிஞ்சுது அலுவல்.
சோலையூரான்: வடக்குக் கிழக்கில் நடந்தகொலைகளெல்லாம் அப்படித்தான், மாற்று இயக்கத்தில நாநூறு பேர் இருக்கமாட்டாங்கள் அவன் ஆற்ற பிள்ளை ஆற்ற சகோதரம் என்று எல்லோருக்கும் தெரியும் அப்படியிருக்க என்னென்று அவன் இனந்தெரியாதவனாக இருக்கமுடியும். பப்ளிக்காக வந்து சுட்டுட்டு போறான் அனால் அது இனம்தெரியாதவர்கள் என்று செய்தியாகும்.
யோகரட்ணம்: நீங்க அநகாரிகதர்மபாலாவைப் பற்றி பேசும்போது எங்கட ஐயா ஆறுமுநாவலரையும் ஒப்பீடு செய்ய வேண்டிய தேவை இருக்கு.
வாசுதேவன்: எனது ஒரு கவிதையில இந்த இருவரையும் ஒன்றாக கட்டி கொடும்பாவி எரிக்கிற அன்றுதான். கொடும்பாவி என்பதை ஒரு சிம்போலாக எழுதியிருந்தேன். அதாவது ஒவ்வொரு மனங்களிலும் அந்த எரிப்பு நிகழவேண்டும் என்பதாக. நாங்க பெரி ஞானிகள் எல்லாத்தையும் படிச்சுப்போட்டு இருந்து பினாத்திக்கொண்டிருப்போம். பிரச்சனை அதுவல்ல அடிமனத்தில அநகாரிக தர்மபாலாவையும் ஆறுமுகநாவலரையும் எப்படி வெட்டி எடுக்கிறதென்பதே பிரச்சனை.

May 16th, 2012 | : கட்டுரைகள் |

காலக் கொடுமை

ஜெயமோகனின் வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் ‘கற்பழித்ததா இந்திய இராணுவம்’ என்ற கட்டுரையைப் படிக்கையில் மனம் பதறிப்போகிறது. இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய மூத்த இராணுவ அதிகாரிகள் “இலங்கையில் இந்திய அமைதிப் படையினர் பாலியல் வன்புணர்வுக் கொடுமைகளில் ஈடுபடவே இல்லை” என அந்தக் கட்டுரையில் சாதிக்கிறார்கள். அவர்களின் கருத்துகளை வழிமொழியும் ஜெயமோகன் ‘அமைதிப் படையினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாமே புலிகளாலும் அவர்களது தமிழக ஆதரவாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களே’ என்ற முடிவுக்கு வருகிறார். நமது கண்முன்னேயே, இந்திய அமைதிப் படையினரின் போர்க் குற்றங்களிற்கு நேரடிச் சாட்சியங்களான என் போன்ற இலட்சக்கணக்கானவர்கள் உயிரோடு இருக்கையிலேயே, இருபத்தைந்து வருடங்களிற்குள்ளாகவே வரலாறு திரிக்கப்படும் காலக் கொடுமையிது.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்ற நல்வாய்ப்பை நாங்கள் தவறவிட்டுவிட்டோம். அன்று நாங்கள் நிராகரித்த அதே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரியே (பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல் செய்வது ) இப்போது தமிழர் தரப்புகள் போராடிக்கொண்டிருக்கின்றன என்பதுதான் இன்றைய அரசியல் எதார்த்தமாயிருக்கிறது. ஆனால் இந்த எதார்த்தம் எந்த வகையிலும் இலங்கையில் இந்திய இராணுவம் நடத்திய போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் அராஜகங்களையும் நியாயப்படுத்திவிடாது.
ஜெயமோகன் சொல்வது போல புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் சம்பவங்களை மிகைப்படுத்தி பிரச்சாரம் செய்யக் கூடியவர்கள் என்பது உண்மைதான். ஆனால் அதைக் காரணமாக வைத்து இந்திய அமைதிப் படையினரின் போர்க் குற்றங்களை மறைப்பது நியாயமற்றது.
இந்திய அமைதிப்படையினர் பொதுமக்கள் மீது நடத்திய கொலைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் நான் நேரடிச் சாட்சி. ஒவ்வொரு நாளும் பாலியல் வன்புணர்வுக்குச் சம்பவங்கள் நடைபெற்றன. 10 வயதுச் சிறுமியிலிருந்து 80வயது மூதாட்டிவரை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். சிறுவர்களும் தப்பவில்லை.
இவையெல்லாம் ஆதாரபூர்வமாகப் பல இடங்களில் தொகுக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் முதன்மையான ஆவணம் யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கத்தால் வெளியிடப்பட்ட ‘THE BROKEN PALMYRA’ ஆகும். இதனது தமிழ் வடிவம் ‘முறிந்தபனை’. ராஜினி திரணகம, ராஜன் ஹுல், தயா சோமசுந்தரம், கே. சிறீதரன் ஆகியோரால் இந்த ஆவணம் உருவாக்கப்பட்டது. ‘முறிந்தபனை’யின் இரண்டாவது பகுதியில் 5வது அத்தியாயம் முழுவதுமாக ஈழத்தில் பெண்கள்மீது IPKF இழைத்த கொடுமைகள் விரிவாகச் சாட்சியங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அத்தியாயத்தின் தலைப்பு: “அக்கா, அழுவதற்கு இனி என்னிடம் கண்ணீர் இல்லை”.
‘முறிந்த பனை’யின் புதிய பதிப்பு அ.மார்க்ஸின் விரிவான முன்னுரையோடு தமிழகத்தில் கிடைக்கிறது (பயணி வெளியீடு). www.noolaham.org இணையத்தில் PDF வடிவத்தில் முறிந்த பனையைப் படிக்கலாம்.
ஆம் மூத்த இராணுவ அதிகாரிகளே! நீங்கள் ஈழத்தில் பலநூறு அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றீர்கள். பலநூறு பாலியல் வன்புணர்வுகளைச் செய்தீர்கள். பல்லாயிரக்கணக்கான மக்களை அவமானப்படுத்தினீர்கள்.
ஜெயமோகனுக்கும் ஒரு வார்த்தை: ‘முறிந்த பனை’ ஆவணத்தை உருவாக்கியவர்கள் புலிகளோ அவர்களது ஆதரவாளர்களோ அல்ல. அந்த ஆவணத்தை உருவாக்கியவர்களில் மூவர் இன்றுவரைக்கும் புலிகளின் அரசியலைக் கடுமையாக விமர்சித்து வருபவர்கள். நான்கமவரான ராஜினி திரணகம ‘முறிந்த பனை’ ஆவணத்தை உருவாக்கியதற்காக விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்.
VN:F [1.9.4_1102]

Friday, September 21, 2012

சட்ட படி சாதி மறுப்பு திருமணம்   செய்யுது கொண்டவர்களை ரூபா 5,00000(ஜ ந்து )லச்சம் பணம் வாங்கி கொண்டு பிரிக்க நினைத்த சாதி வெறியன் செஞ்சி உட்கோட்ட ..துணை கண்காணிப்பாளர் .பன்னிர்செல்வம் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டம் பிரிவு 4இன் கீழ் தமிழக அரசு நடைவடிக்கை எடுக்குமா ?
விழுப்புரம் மாவட்டம்- செஞ்சி உட்கோட்டம் காவல் நிலையத்தில் -சட்டப்படி சாதி மறுப்பு திருமணம் செயுது கொண்டவர்களை கைது செயுது காவல் துறை உதவி யுடன் -சாதி வெறியாட்டம்...                                                                        

Wednesday, February 8, 2012

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நோக்கிய சிவில் சமூகத்தினது கோரிக்கை சாமானிய மக்களின் உளவிருப்புகளின் பிரதிபலிப்பு அல்ல.

அண்மையில் சிவில் சமூகத்தினர் எனும் பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நோக்கி ஒரு பகிரங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையானது கொண்டுள்ள விடயதானங்கள் பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதோடு பொதுமக்களிடையே பெரும் குழப்பநிலையையும் தோற்றுவிக்கத்தொடங்கியுள்ளது.
முப்பது வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மீள உயிர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. நீண்டகால யுத்தத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்ட அப்பாவி மக்களின் சின்னாபின்னமாக்கப்பட்ட வாழ்வு எதிர்காலம் மீதான நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மெல்ல மெல்ல நகர ஆரம்பித்துள்ளது.
 வடக்கு கிழக்கு மக்கள் பிரிவினைவாதத்தையும் வன்முறைக் கலாசாரத்தையும் மறந்து இலங்கையராக பெரும்பான்மையின மக்களுடன் ஐக்கியப்பட்டுவாழ தலைப்பட்டுள்ளனர். நாட்டில் குடிகொண்டிருந்த பகைமை உணர்வுகளும் இனக்குரோதங்களும் பழங்கதையாய்ப்போய் இனங்களிடையேயான பரஷ்பர புரிதலும் இன நல்லிணக்கமும் மேம்பட்டுவருகின்றன. இந்தநிலையில்தான் தமிழ் மக்கள் சார்பில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினைக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரச தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது. இப்பேச்சுவார்த்தைகள் இடையிடையே முறிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவருகின்றபோதிலும் மீண்டும் மீண்டும் நம்பிக்கையுடன் கூட்டமைப்பினர் அரசுடனான பேச்சுக்களை தொடர்துகொண்டே வருகின்றனர். அதனைத் தொடர்வதைத் தவிர வேறு வழியேதும் இல்லை என்பதை அமெரிக்காவரை சென்று களைத்துவிட்ட கூட்டமைப்பினரும் உணர்ந்துகொண்டதனால்தான் என்னவோ அரசுடன் பேசி இணக்கப்பாடு ஒன்றைக்காணும் முயற்சியில் கூட்டமைப்பினர் இறங்கியுள்ளனர் எனத் தெரிகின்றது.
இதற்கிடையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றைக் கூட்டுகின்றேன், அங்கே அனைத்து தமிழ் கட்சிகளும் ஒருமித்த தீர்வொன்றுடன் வந்து முன்வையுங்கள்;. அதை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்று ஜனாதிபதியும் அடிக்கடி கூறியுள்ளார். இந்திய தரப்பும் அதையே வேண்டி நிற்பதாக அறிய முடிகின்றது. கடந்தகாலங்களில் ஜனநாயகப் பாதையில் பயணித்திருந்த தமிழ் கட்சிகள், அல்லது ஜனநாயகப் பாதைக்கு திரும்பிய தமிழ் கட்சிகள் ஏதாவது தீர்வை முன்வைக்கின்ற வேளைகளிலோ ஏற்றுக்கொள்ளுகின்ற வேளைகளிலோ அதற்கு புலிகள் முட்டுக்கட்டை போட்டு வந்திருந்திருந்தனர். அதிர்ஸ்ட வசமாக அந்த இக்கட்டான நிலைமை இன்றில்லை. இந்த சூழலை பயன்படுத்தி ஏதாவது ஒரு குறைந்தபட்ச தீர்வில் தமிழ் கட்சிகள் ஒன்றிணையும் வாய்ப்புக்கள் அதிகரித்திருக்கின்றன. இப்படியானதொரு சூழலை பயன்படுத்திக்கொள்ள கூட்டமைப்பினர் மனதார முன்வருவார்களா என்கின்ற கேள்விகள் ஒருபுறமிருக்க பெரும்பான்மையான மக்களின் உளவிருப்பம் அதைநோக்கியே காணப்படுகின்றது. அதை உணர்ந்துகொண்டதனால்தானோ என்னவோ கூட்டமைப்பினரும் அப்படியொரு தீர்வை நோக்கி நகரவேண்டிய நிலைமையில் இருக்கின்றர்கள்.
முதலில் தம்மோடு மட்டுமே அரசு பேசவேண்டும் என்று கூட்டமைப்பினர் புலிகளின் பாணியில் மார்பு தட்டிக்கொண்டாலும் அது ஜனநாயகத்துக்கு விரோதமான ஏகபிரதிநிதித்துவ கோரிக்கை என்பதனால் அதையிட்டு கூட்டமைப்பினரது இறுக்கம் நெகிழும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே நடத்தப்படப் போகும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுத்து முதலில் ஏதாவதொரு தீர்வினை ஏற்றுக்கொள்வதையிட்டு சிந்திப்பார்கள் என்று மக்கள் நம்பியிருக்கின்றனர். இதுவே எமது மக்களின் இன்றுள்ள அவசியத் தேவையுமாகும்.
இந்தநிலையில்தான் சிவில் சமூகத்தின் சார்பில் கூட்டமைப்பினரை நோக்கிய மேற்படி கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை வெளியாகியுள்ளது. இவ்வறிக்கையானது கொண்டுள்ள கோரிக்கைகளின் சாராம்சம் பேச்சுவார்தைகளின் ஊடாக கூட்டமைப்பினருக்கும் அரசுக்குமிடையில் எந்தவிதமான தீர்வும் எட்டப்பட்டுவிடக்கூடாது என்பதை நோக்கியதாகவே காணப்படுகின்றது. மீண்டும் மீண்டும் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்று புலிகளின் பாணியில் பிரிவினைவாதக் கருத்துக்கள் மீது கட்டப்பட்டவையாகவே இக்கோரிக்கைகள் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி இவ்வாறான தூண்டுதல்களும், உருவேற்றுதல்களும் மென்மேலும் முரண்பாடுகளை வளர்க்கவே உதவும். தீர்வுகளை நோக்கி இருதரப்பினரும் நகரும் வாய்ப்பினை அது சீர்குலைக்கும்.
சிவில் சமூகத்தின் அரசியல் வெளிப்பாடுகள் என்பது ஒரு சமூகப்பொறுப்புமிக்கதாக மிளிரவேண்டும். அமைதியையும் சமாதானத்தையும் நோக்கி மக்களையும் கட்சிகளையும் நாட்டையும் வழிநடத்த அந்த வெளிப்பாடுகள் முயலவேண்டும். ஆனால் இங்கோ வெளியாகியுள்ள சிவில் சமூகத்தின் அறிக்கையானது இன்நோக்கங்களுக்கெல்லாம் எதிர்மாறானதொன்றாகவே காணப்படுகின்றது என்பதுதான் ஆச்சரியமாகும்.
சமாதானம் என்பதோ தீர்வு என்பதோ இருதரப்பினரதும் பரஷ்பர விட்டுக்கொடுப்புகளிலும், சமரசங்களிலும் இருந்தே கட்டியெழுப்பப்பட வேண்டியதொன்றாகும். அதைவிடுத்து விடாப்பிடியாக நிற்பவர்களால் ஆக்கபூர்வமாக எதையுமே செய்யமுடியாது.  புலிகள் இருந்த காலத்தில் கூட்டமைப்பினரை தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற தீவிரவாத பிரிவினைக் கொள்கைகளுடனேயே அவர்கள் வழிநடத்தினார்கள். அதன்காரணமாகவே பேச்சுவார்த்தைகளில் தீர்வுகள் எட்டப்பட முடியாமல் போயிற்று. பல பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் கொண்டுவரப்பட்ட தீர்வுப்பொதியில் இன்றைய மாகாணசபைகளைவிட கூடிய அதிகாரங்கள் அடங்கியிருந்தன. ஆனாலும் புலிகளின் அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு தமிழ்தேசியக் கூட்டமைப்பினரே அத்தீர்வுப்பொதியை நிராகரித்தனர். அன்று கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சந்திரிகாவின் தீர்வுப்பொதியை எதிர்த்திருக்காவிட்டால் அமைதியும், தீர்வும் எப்போதோ ஏற்பட்டிருக்கும். அது மட்டும் அன்றி அதன்பின்னரான எவ்வளவோ அழிவுகளும் இழப்புகளும் தவிர்க்கப்பட்டும் இருக்கும். அது போன்ற அரிய பல சந்தர்ப்பங்களை கூட்டமைப்பினர் நிராகரித்து வந்தமைக்கு புலிகளது தீவிரமான தேசியவெறியும், இறுக்கமான போக்குகளுமே காரணமாயின. புலிகளைப் பொறுத்தவரையில் வன்முறைமீதும் பயங்கரவாத நடவடிக்கைகள் மீதும் நம்பிக்கை கொண்ட அரசியல் ஞானசூனியங்கள் அவர்கள். அவர்களால் அப்படித்தான் வழிகாட்டமுடியும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் இன்று வெளியாகியுள்ள கூட்டமைப்பினரை நோக்கிய அறிவுறுத்தல் கோரிக்கைகள் ஒரு சிவில் சமூகத்தின் பெயரால் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அன்றைய புலிகளது அறிவுறுத்தல்களுக்கும் இன்றைய சிவில் சமூகத்தினரது அறிவுறுத்தல்களுக்கும் இடையில் எவ்வித வேறுபாடுகளும் தெரியவில்லை. எப்படியான ஆலோசனைகளையும் அறிவுறுதல்களையும் புலிகள் கடந்தகாலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்கி எந்தவொரு சமாதானத்தையும் எட்டமுடியாதவாறு தவறாக வழிநடாத்தினார்களோ அதிலிருந்து சற்றேனும் பிசிறாமல் அதே பாணியிலான அறிவுறுதல்களே ஆனோசனைகள் எனும் பெயரில் இன்று இந்த சிவில் சமூகத்தினராலும் வழங்கப்பட்டிருக்கின்றன.
 இதற்கு முழு சான்றாக சிவில் சமூகத்தினரின் கோரிக்கைகளில் காணப்படும் தேர்தல் பகிஷ்கரிப்பு அறிவுறுதல்களைக் கொள்ளலாம். அதாவது வடமாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படும் பட்சத்தில் அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பகிஷ்கரிக்க வேண்டும் என்று அப்பட்டமாக கேட்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் என்பன ஜனநாயகத்தின் உயிர்நாடிகள் என்பார்கள் அரசியல் அறிஞர்கள். ஜனநாயக ஆட்சியொன்றின் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்றாகவே தேர்தல்களும் வாக்களிப்புகளும் நடாத்தப்படுகின்றன. அத்தகைய தேர்தலை அதுவும் சுமார் 25 வருடங்களின் பின்னர் மறுக்கப்பட்டிருந்த வடமாகாண மக்களுக்கான அந்த வாய்ப்பினை பகிஷ்கரிக்கக் கோருவதென்பது நிட்சயமாக ஒரு சிவில் சமூகத்தினரின் பொறுப்புமிக்க கடமையாக இருக்கமுடியாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
 இந்த நிலையில் வடகிழக்கு இணைப்பு பற்றி மேற்படி சிவில் சமூகத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கையானது கிழக்கு மாகாணத்தின் இயல்புநிலையை சீர்குலைக்கும் முயற்சியாகவே காணப்படுகின்றது. அதுமட்டும் அன்றி கிழக்குமாகாண மக்களின் இறைமைக்கு எதிரான கருத்தாகவே இதனை நாம் காண்கின்றோம். கிழக்கில் மறைந்திருக்கும் தேசியவாத உணர்வலைகளை கிளறிவிட்டு தமிழ் தேசியம், முசுலிம் தேசியம் என்ற குரோதங்கள் மீள எழுவதற்கு இந்த இணைப்புகோரிக்கை வழிவகுக்க நேரிடும். அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் யாரும் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேசமாட்டார்கள்.
சுமார் அரைநூற்றாண்டு காலத்தால் உழுத்துப்போன வடக்கு – கிழக்கு இணைப்பு கோரிக்கையை தூசுதட்டி எடுத்து சிவில் சமூகத்தினர் எனும் பெயரில் மீண்டும் அரசியல் முக்கியத்துவம் கொடுக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளமையானது கிழக்கு மாகாண மக்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப்போடும் முயற்சியாகும். இவ்விணைப்பு கோரிக்கையானது காலமாகிவிட்ட கதை என்பதை கூட்டமைப்பினரும் புரிந்துகொண்டுள்ளனர் என்பதனால்தான் “பிரிந்த கிழக்கில் போட்டியிட மாட்டோம்” என்று  அன்று கூறியவர்கள், “கிழக்கு மாகாணசபை என்ற ஒன்றே எம்மைப்பொறுத்தவரை இல்லை” என்றவர்கள் இன்று தனித்த வடக்கு மகாணசபைக்கு போட்டியிட தயாராகிவருகின்றனர்.
இன்று கிழக்கு அமைதிப் பூங்காவாக இருக்கின்றது. அபிவிருத்தியில் கிழக்கு முதல்வர் மன்னராக திகழ்கின்றார் என்று கூட்டமைப்பு எம்பி செல்வராசாவே புகழாரம் சூட்டியிருக்கின்றார். வடக்கும் கிழக்கும் அடாத்தாக இணைக்கப்பட்டிருந்த 22 வருடங்களும் உக்கிரமடைந்திருந்த தமிழ் – முசுலிம் குரோத நிலை இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இனநல்லுறவு மேலோங்கியுள்ளது.
இந்த நிலையில் வடக்கு கிழக்கு இணைவு பற்றி மேற்படி சிவில் சமூகத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கையானது கிழக்கு மகாணத்தின் இயல்பு நிலையை சீர்குலைக்கும் முயற்சியாகும். கிழக்கில்  மறைந்திருக்கும் தேசியவாத உணர்வலைகளை கிறளிவிட்டு தமிழ் தேசியம்,  முசுலிம் தேசியம் என்று குரோதங்கள் மீள எழ இந்த இணைப்ப கோரிக்கை வழிவகுக்க நேரிடும். அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் யாரும் இன்றைய நிலையில் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைப்பது பற்றி பேசமாட்டார்கள். ஆனால் யேசுவின் பெயரால் சமாதானம் செய்யும் பேராயர் தலைமையிலான இந்த சிவில் சமூகத்தினர்  அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றார்கள். தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்று சாமானிய மக்களின் வாழ்வியல் தேவைகளுக்கு குழிபறிக்கும் இவ்வரசியல் கோசங்களை இந்த சிவில் சமூகத்தினர் முன்வைத்திருப்பது மிகவும் வேதனைமிக்க செயலாகும்.
ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி.

இனங்களுக்கிடையிலேயான புரிந்துணர்வின் அவசியத்தை வலியுறுத்தும் அறிக்கையும்… புகலிட வெள்ளாள மார்க்சியமும்”

-இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி-
வடக்கிலிருந்து இனச்சுத்திகரிப்பிற்குள்ளான முஸ்லிம் சமூகத்தின்  மீதான அக்கறையில்  “தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில்,அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்”  எனும் தலைப்பில் ஓர் அறிக்கை வெளிவந்த செய்தி பலர் அறிந்ததே. அந்த அறிக்கையில் கையொப்பம் இட்டவர்கள், இப்படியொரு அறிக்கை வெளியிடவேண்டும் என சிந்தித்து அவ்வறிக்கையை தயாரிக்க காரணமாக இருந்தவர்கள் என அனைவர் மீதும் எமக்குள்ள தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, விமர்சனங்கள் என்பதற்கும் அப்பால், எதிர்காலங்களில் இனங்களுக்கிடையிலேயான ஒருமைப்பாட்டினதும், இனங்களுக்கிடையிலேயான புரிந்துணர்வின் முக்கியத்துவமும், கருதி அவ்வறிக்கையை  நாம் ஆதரிக்கின்றோம்.
இவ்வறிக்கை வெளிவந்தபோது அதனது  அவசியத்தை உணர்ந்து எமக்குள் உரையாடியதோடு வேறுபணிகளில் எமது கவனத்தை செலுத்தினோம். இவ்வறிக்கைக்கு எதிராக வெளிவந்த ‘கோட்பாட்டுப் பிரசங்கங்களையும்’ நாம் பொருட்படுத்தவில்லை.
சமீபத்தில் பல நாட்கள் இலங்கையில் நின்று  அங்குள்ள நிலைமைகளையும் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தவர்கள் தான்  இவ்வறிக்கை வெளிவரத் தூண்டுதாலக  இருந்துள்ளனர். எப்போதுமே தமது எண்ணங்களோடும், தமது சித்தாந்தங்களோடும்,கோட்பாடுகளோடும் உடம்பு நோகாம,அலையாம கொம்யூற்றர் முன்னால் இருந்து கொண்டு அறிக்கை விடுபவர்களை நாம் எப்போதுமே பொருட்படுத்துவதில்லை.
இருந்தபோதும் தீபம் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக அவ்வறிக்கை மீதமான விவாதம் நிகழ்ந்த பிற்பாடு அவ்வறிக்கையானது வெகுஜன எல்லைக்குள் சென்றுவிட்டது. எனவே அவ்றிக்கையை பலப்படுத்த வேண்டிய பணியை உணர்ந்துகொள்வதோடு ‘புகலிட வெள்ளாள மார்க்சியர்கள்’ குறித்த மீள் பார்வையின்  நிர்ப்பந்தமும் எமக்கு ஏற்பட்டுள்ளது.  
இந்த ‘புகலிட வெள்ளாள மார்க்சியர்கள்’ உடம்பு நோகம, அலையாம தமது கனவுகளோடு கொம்யூற்றர் முன்னால் இருந்து எழுதுபவர்கள் என்பதற்கு ஓர் ஆதாரம்: // பாசிச இலங்கை அரச அமைச்சர் ஒருவரை ஐரோப்பாவிற்கு அழைத்து தலித் மாநாட்டை நிகழ்த்திவிட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரலெழுப்புவதாகக் கூச்சலிடும் இவர்கள் அபாயகரமானவர்கள்// என தொலைக்காட்சியில் அறிக்கைக்கு எதிராக ‘கோட்பாட்டுப் பிரசங்கம்’ நிகழ்த்திய திரு.நாவலன் அவாகள் தனது இணையத்தளத்தில் எழுதியுள்ளார்.
இவர்களுக்கு நடைமுறை உண்மைகள் எதுவும் தெரிவதில்லை, தெரிந்து கொள்ள வேண்டும் எனும் அக்கறையுடன் உழைப்பதற்கும் இவர்கள் தாயாரில்லை. அறிக்கை எழுதியவர்களுக்கும் தீபம் தொலைக்காட்சியில் அறிக்கையின் பயன்பாடுகள் குறித்துப் பேசியவர்களுக்கும் இலங்கை அமைச்சரை ஜரோப்பாவிற்கு அழைத்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் உபதலைவர் யோகரட்ணம் அவர்கள் எழுதிய நூலின் வெளியீட்டிற்காக தலித் சமூக மேம்பாட்டு முன்னணியே நூல்வெளியீட்டிற்காக அமைச்சர் வாசுதேவநாணயக்கார அவர்களை பிரான்சிற்கு அழைத்தது. வாசுதேவநாணயக்காரா அவர்கள் தனிப்பட்ட வகையில் தோழர் யோகரட்ணம் அவர்களின் நீண்டநாளைய நண்பரும்கூட. கடந்த காலங்களில் சிங்கள இடதுசாரிகள் தலித் சமூகத்தின் மீதான மேட்டுக்குடி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல்வேறு உதவிகளைளை செய்தவர்கள். அதன்மூலமாக தலித் சமூகம் பல்வேறு உரிமைகளைப்  பெற்றதென்பதும் வரலாற்று உண்மை.  அந்தவகையில் வாசுதேவநாணயக்காரா அவர்களை அழைத்து கௌரவப்படுத்தியதை தலித் சமூகத்தின்  ஒரு வராலாற்றுக் கடமையாகவும் நாம் கருதுகின்றோம்.
சம்பவம் இவ்வாறு இருக்க, தலித் மாநாட்டிற்கு அமைச்சரை அழைத்ததாகவும் அமைச்சரை அழைத்தவர்கள் தன்னோடு விவாதம் செய்தவர்கள் என்பதாக   கோட்பாட்டுப் பிரசங்கரான நாவலன் அவர்கள் எழுதியுள்ளார். தனக்குமிக அருகில் நடந்த ஓர் சம்பவத்தின் உண்மைநிலையை அறிந்து கொள்வதற்கான  முயற்சியை மேற்கொள்ள முடியாதவர் எவ்வாறு சமூகத்தில் நிலவும் மாற்றங்கள், பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகளின் தன்மைகளை புரிந்துகொள்ளமுடியும்!
முதலில அதிகாரத்தை பெறுவோம் அதற்கு பிற்பாடு எமக்கிடையிலான பிரச்சனைகளை பேசித்தீர்ப்போம் எனும் அறிவுரைகளையும்,போதனைகளையும் நாம் இன்று நேற்று கேட்டுப்பழக்கப்பட்டவர்கள் அல்ல. மேட்டுக்குடி சாதியினரால் தலித் சமூகம் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்காக அன்று சோல்பெரிகெமிசனிடம் நியாயம் கேட்கமுயன்றபோது இவ்வாறான போதனைகள்தான் எமக்கு அருளப்பட்டது. அன்றைய வெள்ளாள மிதவாதிகள் போதனைகளுக்கு அப்பால் பகுதிநேர செயல்பாட்டாளர்களாகவும் இருந்தவர்கள். ஆனால் இன்றைய புகலிட வெள்ளாள மார்க்சியர்கள் வெறும் போதகர்கள் மட்டுமே. இந்த வெள்ளாள மார்க்சியர்களின் கருத்தியலோடு நாம் முற்றாக முரண்படுவது மட்டுமல்லாது…., இவர்கைள அனுதாபத்தோடு அணுக வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதையும் நாம் உணர்ந்துள்ளோம். (…..)
புலிகளால் தான் மூஸ்லிம் மக்கள்  வெளியேற்றப்பட்டவர்கள் வடக்கிலுள்ள மக்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறி யாழ்ப்பாண சமூகம் தப்பித்துக்கொள்ள முடியாது. விரும்பியோ விரும்பாமலே புலிகளை தமிழ் பேசும் மக்களின்  ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்ட சமூகம் தமிழ் சமூகம். எனவே முஸ்லிம் சமூகத்தின் வெளியேற்றத்திற்கான குற்ற உணர்வை  தலித் சமூகம் உட்பட அனைவரும் வெளிப்படுத்த தாயாராக இருக்கவேண்டும்.  “முஸ்லிம் மக்கள் மீதான பிரசைகளின் குழுவினால் தயாரிக்கப்பட்ட  மீட்சிக்கான தேடுகை: வடக்கு முஸ்லிம்களின் கதை என்ற ஆவணம்,முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்ப பட்டமை தொடர்பாக தமிழ் சமூகத்தின் மௌனம் பற்றி கண்டனம் மிக்க வெளிப்படுத்தல் ஒன்றை அண்மையில் மேற்கொண்டுள்ளது. நல்லிணக்கம் பற்றிய ஓர் உண்மையான  செயற்பாட்டினை நோக்கி நாம் நகர வேண்டுமாயின் நாம் இந்த மௌனத்தை கலைக்க வேண்டும்” என்பதாக விவாதத்திற்குள்ளான அறிக்கையில் பதிவாகியுள்ள விடயத்திலிருந்து நாம்அறிந்து கொள்வதென்ன! முஸ்லிம் சமூகமானது யாழ்ப்பாண சமூகத்தை நம்பத்தயாராக இல்லை. அவர்களது ‘மௌனத்தை கலைக்க வேண்டும்’ என்பதின் சொற்பிரயோகத்தின் நியாயத்தை நாம் புரிந்து கொள்வதெப்படி.  எம்மிடமிருந்து எவ்விதமான குற்றஉணர்வும் வெளிப்படாத  ‘கள்ளமௌனத்தைக்’ கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள் என்பதுதான் உண்மை.  யாழ்ப்பாண மேலாதிக்கத்தால் பாதிப்பிற்குள்ளான சமூகங்களின் துயரத்திற்கும், சிங்கள அரச அதிகாரத்தால் தமிழர்கள் அடைந்த துயரங்களுக்கும் உள்ள வேறுபாடுகளையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். முஸ்லிம் சமூகமானது யாழ்ப்பாண சமூகத்திடமிருந்து தமக்கான நஸ்ர ஈட்டை எதிர்பார்க்கவில்லை. குறைந்த பட்சம் மௌனத்தை கலைத்து எமது குற்ற உணர்வை வெளிப்படுத்தினால் அதுவே அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்ந்து வாழ்வதற்கான அடிப்படை நம்பிக்கையை  ஏற்படுத்தும்  என்றே நாம் கருதுகின்றோம். யாழ்ப்பாணிய பாராம்பரியப் பண்பாட்டு விளைவின் ஓர் அம்சமாகவும் முஸ்லிம் சமூகத்தின் வெளியேற்றம் நிகழ்ந்தது என்ற  உண்மையையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
இவ்வாறான சாராம்சத்தை கொண்டதாக அமைந்துள்ள அறிக்கையை சிங்கள அரசின் பிரித்தாழும் நோக்கத்திற்கு சார்பாக அமைந்துள்ளது எனகூறுவது மிக அபத்தமானது. அவர்களே அறியாத இந்த ‘சனாதன  மனநிலையைத்தான் ‘புகலிட வெள்ளாள மார்க்சியம்’ என நடைபெற்ற தீபம் தொலைக்காட்சி விவாதத்தில் உருவி எடுத்து அம்பலப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
எதுவாக இருப்பினும் இவ்வாறான விவாதங்கள் தொடர்ந்து நிகழ்வது மிக ஆரோக்கியமானதே. விவாதத்தில் பங்கு பற்றிய இருதரப்பினரையும் நாம் பாராட்டுகின்றோம். அதற்கு தொடர்ச்சியாக களம் அமைத்து கொடுத்து வரும் தீபம் தொலைக்காட்சிக்கும் இவ்வாறான நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி நிகழ்த்திவரும் அனாஸ் அவர்களுக்கும் எமது நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
——
வெளிவந்த அறிக்கை
தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்
2009ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவுற்ற பின்னணியில், இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனக் குழுக்களும் தமது கடந்த காலத்தை மீள்பார்வை செய்வதும், மீள்மதிப்பீடு செய்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விடயங்களாக விளங்குகின்றன. எமது கடந்த கால செயற்பாடுகளின் மீதான ஒரு விமர்சன ரீதியான சுய பார்வையின் மூலமாகவே அரசின் முன்னும் சிவில் சமூகத்தின் முன்னும் இன்று தீர்வை வேண்டி நிற்கும் பிரதானமான விடயங்கள் பற்றி எதிர்காலத்தில் கருத்தாழம் மிக்க வழிமுறைகளில் நாம் சிந்திக்க முடியும்.
யுத்தம் தீர்க்கமாகமுடிவுற்ற போதிலும், இனப்பிரச்சினைக்கான முடிவு இன்னமும் தென்படவில்லை. இனப்பிரச்சினையானது குறுகிய மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை வேண்டி நிற்கிறது. பெரும்பான்மைவாத அரசிடமிருந்து ஒரு நீடித்திருக்கக் கூடிய தீர்வைப் பெறுவதற்கான தேடுகையில் தமிழ்ச் சமூகம் இன்று பிரதானமாகக் கரிசனை கொண்டுள்ளது. இராணுவ மயமாக்கத்தினாற் தொடரும் பாதுகாப்பற்ற நிலைமை ஓர் உடனடிக் கவனமாக அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டமும், வன்முறை நிறைந்த அரசியற் கலாசாரமும் சமூகத்தின் ஜனநாயகக் கட்டமைப்புக்களை மேலும் சிதைவுக்குட்படுத்தியுள்ளன. மீள்குடியமர்வு, மீள்நிர்மாணம் போன்ற விடயங்கள் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. காணிப் பகிர்வு, அரச மற்றும் சமூக வலையமைப்புக்களினைத் தொடர்புகொள்ளுதல், மொழி சமத்துவம், அதிகாரப் பகிர்வு, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், பால், வர்க்க, மற்றும் சாதி அடிப்படையிலான அடுக்கமைவுகளின் தொடரும் இருப்பு போன்றன இன்றைய அரசியல் நிலவுருவின் பகுதிகளாக விளங்குகின்றன.
இந்த வகையில் 21 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தொடர்பான விடயத்தை நாம் இங்கு எழுப்புகின்றோம். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் யுத்த நடவடிக்கைகளும், ஆயுதப் போராட்டமும் வலுப்பெற்று வந்த சூழலில், தமிழீழ விடுதலைப் புலிகள் ஏறத்தாழ் 80, 000 முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றினார்கள். அன்றைய காலத்தில் ஆயுத ரீதியாகப் பலம் மிக்க அமைப்பாக, வட பகுதியின் பெருமளவிலான நிலப்பரப்பை தன்வசம் வைத்திருந்த விடுதலைப் புலிகள் ஒரு சமூகம் முழுவதையுமே இரண்டு தினங்களுக்குள் வட மாகாணத்தில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் அவர்களுக்கு 2 மணி நேர அவகாசம் மாத்திரமே வழங்கப்பட்டது. இந்த வெளியேற்றத்தின் பின்பு, வெளியேற்றப்பட்ட சமூகங்கள் தமது சொந்த நிலங்களுக்கு மீளவும் திரும்பிச் செல்வதற்கு உதவும் வகையில் பல்வேறு அமைப்புக்களாலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. போர் நிறுத்த உடன்படிக்கைக் காலப்பகுதியில், உடனடி மனிதாபிமான மற்றும் மீள்கட்டுமாணத் தேவைகளுக்கான செயலகம், இலங்கை அரசுடனும், விடுதலைப் புலிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்துவதன் ஊடாக, முஸ்லிம் மக்களின் மீள்திரும்புதலுக்கு வழிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டது.
இன்றைய அரசியல் சூழலில், வட புலத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையும், அவர்களின் மீள்திரும்புகையும், மீள்குடியமர்வும் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சிவில் சமூகங்களின் மீதான தெளிவான ஒரு சவாலாக உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த காலப்பகுதியில் இருந்து முஸ்லிம் மக்கள் வடக்கில் உள்ள தமது தாயகங்களுக்கு படிப்படியாகத் திரும்பத்தொடங்கியிருந்த போதிலும், அவர்கள் மீளத்திரும்புவதற்கு உகந்த சூழல் அமைந்திருந்திருக்கவில்லை. மீளத்திரும்பியவர்கள் அரசிடமிருந்து குறைந்தபட்ச உதவிகளைக்கூடப் பெறமுடியவில்லை. மேலும் அவர்கள் நிருவாக மையங்களின் விரோதப் போக்குகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் பண்பாடு மற்றும் நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாமற் போனமை அவர்களின் மீள்வருகையினை வட பகுதியில் உள்ள சமூகங்கள் குறைந்த அளவிலேயே ஏற்றுக்கொள்கின்ற தன்மையினை ஏற்படுத்தியிருப்பதுடன், திரும்பி வரும் மக்களுக்கு இடராகவும் அமைகின்றது.
போரின் போதும், போரின் பின்னரும் தமிழ் சமூகம் மிகுந்த உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றது என்பதனை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அதே போன்ற இடர்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட வட பகுதியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் நிலையினை நாம் நினைவில் நிறுத்துவது அவசியமானது. தமிழ் சமூகம் அனுபவித்த வேதனைகளையும், இன்னல்களையும் காரணங்காட்டி முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட விடயத்தை ஓரங்கட்ட முடியாது. வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தங்களின் முன் எமது இருப்புக்காக எந்த அளவுக்கு நாம் போராடுகிறோமோ அதே அளவுக்கு நாம் எமது செயல்களின், எமது உறுதிக்கூற்றுக்களின், எமது மௌனங்களின் அரசியலினை மீளாய்வுக்குட்படுத்துவது அவசியமாகும்.
முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை கடந்த முப்பதாண்டு காலத் தமிழ்த்தேசிய அரசியற் பிரசாரத்தின் குறுகிய நோக்குடைய, பிற சமூகங்களினை ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய உந்துகையின் மிகவும் மோசமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். எங்களுடைய சிவில் மற்றும் அரசியற் தலைமைகள் இதனை விளங்கிக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ தவறியமை, கடந்த காலத்தினையும், எம்மத்தியில் வாழும் சிறுபான்மையினர் தொடர்பாக எமக்கு உள்ள தார்மீக மற்றும் அரசியற் பொறுப்புக்களையும் நாம் நியாயபூர்வமான முறையில் அணுகுவதிலிருந்து எம்மை தடுத்துவிட்டது. தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இடையிலான உறவுகள் துருவப்பட்டுப்போவதற்கு நாம் எவ்வாறு காரணங்களாக இருந்திருக்கிறோம் என்பது பற்றிய ஒரு சுயவிசாரணை முப்பது ஆண்டு காலப் போரின் முடிவின் பின்னரும் கூடஎம்மத்தியில் உருவாகவில்லை. அரசியல் அதிகாரப் பகிர்வு, சமவுரிமை என்பன அனைத்து சிறுபான்மை சமூகங்களுக்கும் உரித்தான விடயங்கள் என்பதனையும், தமிழ் சமூகத்துக்கு மாத்திரமே உரித்தான ஏனையோரைக் கருத்திற் கொள்ளாத ஒரு அரசியற் தீர்வு இல்லை என்பதனையும் நாம் இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.
நீடித்திருக்கக்கூடிய ஓர் அரசியற் தீர்வினை அடைவதற்கு இனங்களுக்கு இடையில்– குறிப்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே– நல்லிணக்கமும், உரையாடலும் அவசியமான செயற்பாடுகளாகும். விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீதான பிரசைகளின் குழுவினால் தயாரிக்கப்பட்ட “மீட்சிக்கான தேடுகை: வடக்கு முஸ்லிம்களின் கதை” என்ற ஆவணம், முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப் பட்டமை தொடர்பாக தமிழ் சமூகத்தின் மௌனம் பற்றி கண்டனம் மிக்க வெளிப்படுத்தல் ஒன்றை அண்மையில் மேற்கொண்டுள்ளது. நல்லிணக்கம் பற்றிய ஓர் உண்மையான செயற்பாட்டினை நோக்கி நாம் நகர வேண்டுமாயின் நாம் இந்த மௌனத்தைக் கலைக்க வேண்டும்.
எங்களது இருப்புக்காக நாம் புதிய செயற்பாட்டியற் பாதைகளை உருவாக்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இன்றைய காலப்பகுதியில், ஏனைய சமூகங்களுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல்களிலிருந்து உதயமாகும் பதில்களை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். நாம் நீதியானதும், ஜனநாயக பூர்வமானதுமான ஒரு அரசியற் தீர்வைத் தேடுகையில் இது மிகவும் பிரதானமானது. இதற்கான ஒரு படியாக முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக பகிரங்கமான எதிர்ப்பு வெளியிடப்படல் வேண்டும். இந்தப் பலவந்தவெளியேற்றம் போன்ற ஒரு வெறுக்கத்தக்க செயல் எம்மத்தியில் இனிவருங் காலங்களில் ஒரு போதும் நிகழமாட்டாது என நாம் முழுமனதுடன் கூறவேண்டும். இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை நாம் ஒரு போதும் குற்றம் எனக்கருதாது இருக்கமாட்டோம் எனக் கூறவேண்டும். இந்த சம்பவத்தையும், அதன் தொடர்ச்சியையும் மீள்நோக்க வேண்டியஅதேவேளை, உரையாடல்களை ஏற்படுத்தவும், வடக்கில் முஸ்லிம் மக்களின் இலகுவான மீள்திரும்புகைக்கும், மீள்குடியமர்வுக்கும் உதவும் வகையில் பல்லின சமூகங்களை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துதல் அவசியமானது.
ஏனைய சமூகங்களின் இடர்களையும், நலன்களையும் கருத்திற் கொள்ளாது, தமிழ் சமூகம் தன்னிச்சையாகவும், மற்றைய சமூகங்களிலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கியும் தொடர்ந்து செயற்பட முடியாது. எந்தவொரு சமூகத்தினையும் பாதிக்கும் அநீதிகள், ஒடுக்குமுறைகள், வேற்றுமைப்படுத்தல்களினை நாம் அக்கறையுடன் அணுக வேண்டும். எல்லா மட்டங்களிலும் சமூகத்தின் பன்முகத்தன்மையினை எம்மத்தியில் ஊக்குவிப்பதற்கும், ஜனநாயகம், நீதி, சமத்துவம் என்பவற்றின் நலனை மையமாகக் கொண்ட பல்வேறு சமூகங்களையும் இணைத்துச் செயற்படுகின்ற ஓர் அரசியலினைப் பற்றிக் கொள்ளவும் நாம் எதுவித தயக்கமும் இன்றி உறுதி பூணுவோம்.
NAME SIGNATURE
1. Mr. P. Ahilan
2. Dr. Darshan Ambalavanar
3. Ms. Jovita Arulanantham
4. Ms. Kundhavi Balachandran
5. Mr. Sivakolunthu Buvanakumar
6. Dr. Godwin Constantine
7. Dr. Kumar David
8. Mr. R. Devarajan
9. Ms. Cayathri Divakalala
10. Dr. S Ganesan
11. Mr. Shaseevan Ganeshananthan
12. Mr. P.B. Gowthaman
13. Dr. Rajan Hoole
14. Ms. Sithiravel Ithaiyarani
15. Mr T. Antony Jeganathan
16. Ms. Vasuki Jayasankar
17. Dr. T. Jayasingam
18. Mr. D.B.S. Jeyaraj
19. Mr. Theliwattai Joseph
20. Mr. Ahilan Kadirgamar
21. Mr. Silan Kadirgamar
22. Ms. Niyanthini Kadirgamar
23. Ms. Sarvam Kailasapathy
24. Ms. Dushiyanthini Kanagasabapathipillai
25. Dr. S.V. Kasynathan
26. Mr. Thirukovil Kaviyuvan
27. Mr. Sathy Kulasingam
28. Mr. Prithiviraj Kulasingham
29. Prof. Vijaya Kumar
30. Ms. Maha Luxmy Kurushanthan
31. Mr. K.C. Logeswaran
32. Mr. S. Manisegaran
33. Mr. Chandrasekaran Manimaran
34. Mr. P. Muthulingam
35. Mr. V. Nandakumar
36. Ms. Malini Paramaguru
37. Ms. Nirmala Rajasingam
38. Ms. Vasuki Rajasingam
39. Mr. Sanjayan Rajasingham
40. Mr. C. Rajeshkumar
41. Ms. A. Renu
42. Ms. Kumudini Samuel
43. Ms. Rani Samuel
44. Dr. Paikiasothy Saravanamuttu
45. Dr. Muthukrishna Sarvananthan
46. Mr. Ambika Satkunanathan
47. Mr. Shyam Selvadurai
48. Rev. Jothini Seenithamby
49. Dr. T. Shanaathanan
50. Ms. M. Mangaleswary Shanker
51. Ms. C. Shanthini
52. Mr. Shobashakthi
53. Mr. P.N. Singham
54. Ms. Vasuki Sivakumar
55. Mr. K.S. Sivakumaran
56. Dr. Sumathy Sivamohan
57. Mr. Subramaniam Sivathasan
58. Mr. Balasingam Skanthakumar
59. Mr. M. Sooriyasekaram
60. Dr. K. Sritharan
61. Rev. M. Jude Sutharshan
62. Mr. H.D. Thampoe
63. Ms. Priya Thangarajah
64. Mr. Kandiah Thanikasalam
65. Mr. R. Thevamaran
66. Prof. S. Thillainathan
67. Dr. Sharika Thiranagama
68. Mr. M. Thiruvarangan
69. Mr. Uma Varatharajan
70. Mr. Godfrey Yogarajah
71. Mr. Ronnie Yogarajah

துரோகி: ஈழ அரசியலின் பூமறாங்

எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது- அது 1990- விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா எனப்படும் மாத்தையா எனது சொந்தக் கிராமமான தம்பலகாமத்திற்கு வருகிறார். ஊரே திரண்டு அவரை வரவேற்கிறது. வீதிகள் தோறும் நிறைகுடம் சகிதமாக மக்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர். எங்கள் முறையின் போது நான் மாத்தையாவிற்கு சந்தனப்பொட்டு வைத்த நினைவுகள் இப்போதும் பசுமையாகவே இருக்கினறன. அப்போது ’இணக்கம்’ என்ற சொல்லைத் தவிர வேறு ஏதும் அறிந்திராத வயது. தமிழ் தேசியம் என்னும் சொற்தொடரை நான் ஒரு பேச்சுகுத்தானும் கேள்வுற்றிராத காலம் அது. எனது கிராமத்தில் ‘இயக்கம்’ என்னும் சொல்லைக்கூடப் பெரியளவில் புழக்கத்தில் இருக்கவில்லை. பொதுவாக இயக்கங்களைப் ‘பொடியள்’ என்றே மக்கள் அழைப்பதுண்டு. பின்னர் காலம் என்னையும் தமிழ் தேசிய பக்கமாக நகர்த்தியது. ஆனால் ஆச்சரியம்- தமிழ் தேசியத்தைச் சொற்களாகக்கூடக் கேள்வியுறாத காலத்தில் மலர் தூவி வரவேற்கப்பட்ட மாத்தையா,நான் தமிழ்த் தேசிய அரசியல் குறித்து அறிந்து கொள்ள முற்பட்டபோது, எனக்கு துரோகியாகவே அறிமுகமானார்.
எவ்வாறு மாத்தையா துரோகியானார்? எந்த அரசியல் மாத்தையாவை துரோகியாக்கியது? ஏவ்வாறு பல்வேறு இயக்கங்களின் தலைவர்களும் துரோகியானார்கள்? இந்த துரோக வாதங்களை மக்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்? நான் நன்கு அறிவேன்,இது பற்றி வெளிப்படையாக பேசுவதால் என்னையும் இந்தப் பூமாறங் துரத்தும்.ஆனால் இப்போது சில விடயங்கள் குறித்துப் பேசாது விட்டால் பிறகு எப்போதுமே பேச முடியாமல் போய்விடும். இன்று ஒரு போராட்டம் எப்படியிருக்கக் கூடாது என்பதற்கு ஈழ விடுதரைப் போராட்டம் உதாரணமாயிருக்கிறது. ஆகவே நாம் பல்வேறு விடயங்கள் குறித்தும் வெளிப்படையாகவே பேசியாகவேண்டும். இது நமது தலைமுறைக் கடமையாகும்.
ஈழ அரசியலைப் பொறுத்தவரை இன்று யாரெல்லாம் துரோகியல்ல என்பதைக் கண்டுபிடிப்பது தான் கடினமானது. அந்தளவிற்கு துரோகிகள் மலிந்துகிடக்கும் தேசமிது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நேற்று வரை போராளிகளாக இருந்த பலர் துரோகிகளாக்கப்பட்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் துரோகிகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. யுத்தத்தின் தீர்மானகரமான முடிவின்போது. அரச படைகளிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகள் கூட நாளை துரோகப்பட்டியலில் இடம்பெறலாம். ஏலவே சிலர் சேர்க்கப்பட்டும் விட்டனர். இறுதியில் ‘துரோகி’ அது எவரையும் விட்டுவைக்காது போகலாம்.
ஈழ அரசியலை பொறுத்தவரை எந்தப் பக்கம் திரும்பினாலும்- அவன் துராகி- அவங்கட ஆள்- எங்கடயவல் இல்ல- இவ்வாறான கோஷசங்களைத்தாம் கேட்கமுடிகிறது. உண்மையில் துரோக வாதத்தின் ஊற்று எது? இதை தீர்மானிக்கும் அரசியல் எத்தகையது? இந்தக் கட்டுரை அரசியல் அர்த்தத்தில துரோகி அல்லது துரோகம் என்னும் சொற்களை கட்;டுடைக்க விளைகிறது. இதை விழங்கிக் கொள்வதற்குச் சற்று பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கிறது. ஈழ அரசியல்,தமிழீழ அரசியலாக உருமாறுவதற்கு முற்பட்ட காலத்து மேடை அரசியல் கோஷங்களை இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டிருக்கிறது.ஈழத்து அரசியல் சூழலில் முதல்முதலாக துரோகி அல்லது துரோகம் என்ற சொற்களை அரசியலுக்கு அறிமுகம் செய்தவர்கள் மிதவாத தலைவர்களே தவிர ஆயத இயக்கங்களல்ல.
இலங்கையில் முதலாவது தமிழ் அரசியல் கட்சியான ஜி.ஜி.பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கூட்டத்தில்தான் எங்களது தீர்மானத்துக்கு எதிராக கைகைளை உயர்த்துவோர், கைகளை இழக்க வேண்டிவரும் என்ற எச்சரிக்கை குரல் ஒலித்தது அகில இலங்கை தமிழ் காங்கிரசின் ஊடாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த, தந்தை செல்வா என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம், காங்கிரசிலிருந்து வெளியேறித் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். இப்போது காங்கிரஸ் தரப்பினரை பொறுத்தவரையில் செல்வநாயகம் ஒரு துரோகி. இப்படித்தான் துரோகவாத அரசியல் கருக்கொண்டது.
தமிழரசு கட்சி கூட்டங்களின் போது பாம்பை விடுதல்,கூட்டத்தின்போது பறை மேளமடித்து தெர்ந்தரவு செய்தல், கட்சி பந்தலை இரவோடு இரவாக உடைத்தல் – இப்படித்தான் அன்று (தங்களின்) துரோகிகளான,தமிழசுக் கட்சியினரைக் காங்கிரஸ் பழிதீர்த்தது. மறுபுறமாக செல்வநாயகம் டட்லி சேனநாயகா அரசுடன் கைகோர்த்துக் கொண்டபோது தமிழரசு கட்சியில அங்கம் வகித்த வி.நவரெட்ணம் செல்வநாயத்தை துரோகி என்றார். இதன் தொடர்ச்சியாக நவரெட்ணம் தமிழர் சுயாட்சி கழகத்தை உருவாக்கினார். பின்னர் இடதுசாரிகள் சிறலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து ‘தோசே மசாலட வடே அப்பட எப்பா’ (தோசையும் மசால் வடையும் எங்களுக்கு வேண்டாம் – தமிழ் மக்களின் உணவு பழக்கத்தை காட்டுவதன் மூலம், தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு எதிரான சுலோகத்தை இவ்வாறு முன்னிறுத்தினர்) என்று பிரச்சாரம் செய்தபோது ஒட்டுமொத்த இடதுசாரிகளும் துரோகியானார்கள்.
பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி மேடைகளில் ‘துரோகி’- என்னும் சொல் தராளமாகவே பயன்படுத்தப்பட்டது. அப்போது அரசாங்கத்துடன் இணைந்திருந்த அரசியல் தலைவர்கள் குறிப்பாக அல்பிரட் துரையப்பா ’இயற்கை மரணத்துக்குரியவர் அலல’ என்றே அன்றைய கூட்டணியின் முக்கிய தலைவர்களான காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் போன்றோர் மேடைகளில் முழங்கிக் கொண்டீருந்தனர். இதையே பின்னர் பிரபாகரன் தத்தெடுத்துக் கொண்டார். 1975ம் ஆண்டு பிரபாகரன் அல்பிரட் துரையப்பாவைத் ‘துரோகி’ என்ற அடைமொழியுடன் படுகொலை செய்தார். ஈழத் தமிழர் அரசியலில் துரோகிகள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்னும் அரசியல் அறிமுகமாகிறது. அல்பிரட் துரையப்பா மீதான படுகொலை நடவடிக்ககையே புலிகளின் முதலாவது தாக்குதலாக பின்னர் பதிவு செய்யப்பட்டது. அல்பிரட் கொலைக்கு எந்தவொரு கூட்டணி தலைவரும் கண்டனம் தொவித்திருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் அதைத்தான் விரும்பியிருந்தனர். ஆனால் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்தைத் ’துரோகி’ என்னும் அடைமொழியுடன் புலிகள் படுகொலை செய்யதபோதுதான் தாங்கள் வீசிய ’துரோகி’ – பூமாறங் தங்கள் கழுத்தையும் குறிவைக்கிறது என்னும் உண்மை கூட்டணி தலைவர்களுக்கும் உறைக்கத் தொடங்கியது. ஆனால் பிரபாகரனோ அதை விடுவதாக இல்லை. எப்படித் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிமுகப்படுத்திய தமிழீழ சுலோகத்தைப் பிரபாகரன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாரோ அப்படியே ‘துரோகி’ என்னும் அழித்தொழிப்புவாத அரசியலையும் கெட்டியாகப்பிடித்துக் கொண்டார்.
வுரலாற்றில் எந்தவொரு பெறுமதியுமற்ற ‘துரோகி’ என்னும் சொற்பிரயோகத்தை ஒரு கருத்தியலாக வளர்த்தவர்கள் மிதவாதத் தலைவர்களே, விடுதலைப்புலிகள் அந்தக் கருத்தியலைத் தங்களது ஏகப்பிரதிநிதித்துவத்துக்குப் பயன்படுத்திக் கொண்டனர். தமது அரசியல் வேலைத் திட்டத்திற்குத் தொந்தரவாக அல்லது இடைஞ்சலாக இருந்தவர்க்ள அல்லது எதிர்காலத்தில் அத்தகைய ஒரு நிலைக்கு வரக் கூடியவர்கள் என்று கருதப்பட்டோர் அனைவரையும் மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்தும் தந்திரோபாயமாகவே இந்தத் ‘துரோகி’ அல்லது ‘துரோகம்’ என்னும் சொற்கள் அடுத்தவர்கள் மீது சுமத்தப்பட்டன. மிதவாத அரசியல் தலைவர்களால் முன்தள்ளப்பட்ட அரசியல் சுலோகத்தை அப்பழுக்கில்லாமல் உள்வாங்கிக் கொண்டன. ஆனால் புலிகள் போன்று இதை மிகவும் மூர்க்மாகவும் நுட்பமாகவும் எந்தவொரு இயக்கமும் பயன்படுத்தியிருக்கவில்லை. ஆனால் புலிகள் வீசிய பூமாறங் இப்போது அவர்கள் கழுத்துகளையும் குறிவைத்திருப்பதுதான் இதிலுள்ள முரண்நகை.
புலிகள் டெலோவை தாக்கி அழித்ததிலிருந்து ஏனைய இயக்கஙகளைப் போராட்ட அரசியலிருந்து அப்புறப்படுத்தியது வரை அனைத்தையும்’துரோகம்’ என்னும் ஒரு வார்த்தை கொண்டே நியாயபப்டுத்தினர். டெலோவை தாக்கியழித்தமைக்கு புலிகள் சொன்ன காரணம்- அவர்கள் இந்தியாவை இங்கு கொண்டுவர முயல்கின்றனர். டெலோவை புலிகள் தாக்குவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ‘பொதுமக்கள்’ என்ற பேரில் பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.டெலோ ஒரு மக்கள் விரோத அமைப்பு என்றவாரான கருத்து வெகுசன மனோநிலை ஆக்கப்பட்டது. பின்னர் புலிகள் டெலோவை அழித்தபோது ஏற்கனவே தயார்படுத்தப்பட்டிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதே போன்று பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப். தாக்கப்ட்டபோதும அதே மக்கள் புலிகளுக்கு இளநீர் வெட்டிக் கொடுத்தனர்.
புலிகளே மற்றய இயக்கங்களை தாக்கியழிக்க முயன்றனர். எந்தவொரு இயக்கமும் புலிகளை தாக்கியழிக்க முயன்றதாக சான்றில்லை. ஆங்காங்கே சிறிய சச்சரவுகள் இடம்பெற்றிருப்பினும் புலிகளை அழித்துத் தங்கள் தலைமையை உறுதி செய்துகொள்ள வேண்டுமெனும் முனைப்பில் எந்தவொரு இயக்கமும் செயற்பட்டிருக்கவில்லை. இதை விடயமறிந்த அனைவரும் அறிவர். ஆனால் சகல போராட்ட இயக்கங்கள் மத்தியிலும் தலைமை குறித்த ஈடுபாடும் எதிர்பார்ப்பும் இருந்தததையும் மறுப்பதற்கில்லை. அத்தகைய தலைமை குறித்த எதிர்பார்ப்பே டெலோவை அழிக்க முயலும் புலிகள், நாளை தங்களையும் அழிக்க தயங்கமாட்டார்கள் என்ற உண்மையை விளங்கிக் கொள்ள முடியாத நிலைக்குள் அவர்களை தள்ளியது எனலாம். புலிகள் டெலோவை அழிக்க முற்பட்ட போது ஏனைய இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு புலிகளை எச்சரித்திருந்தால் அல்லது தடுத்திருந்தால் புலிகள் அடங்கியிருப்பர் அல்லது அழிந்திருப்பர். ஆனால் அந்த நேரத்தில் அவ்வாறு எந்தவொரு அமைப்பும் சிந்தித்திருக்கவில்லை.டெலோவை அழிப்பதில் வெற்றிகொண்ட புலிகள், அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்த முடியும் என்ற இறுமாப்பில் ருசி கண்டனர். இதற்கு அந்த நேரத்தில் புலிகள் தவிர்ந்த இயக்கங்கள் இந்தியாவுடன் தொடர்பிலிருந்ததை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
ஆனால் இவ்வாறு புலிகளால் வஞ்சிக்கபட்ட இயக்கங்கள், பிற்காலத்தில் தங்களின் பாதுகாப்புக் கருதிச் சில நடவடிக்கைகளை முன்னெடுத்ததும் உண்மையே அதில் விமர்சனம் இல்லாமல் இல்லை. ஆனால் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராட முன்வந்த பலரையும் அரசின் பக்கமாக சாயவேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியவர்கள் புலிகள்தாம். புலிகள் தமிழ் மக்களுக்காக போராடும் ஏகபோக உரிமையைக் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள முற்பட்டதன் விளைவால், மிக உயர்ந்த இலட்சிய எண்ணத்தோடு வந்த பலர் போராட்ட அரசியலில் இருந்து அன்னியப்பட நேர்ந்தது. இது பற்றப் புலிகளால் தடைசெய்யப்பட்ட ஒரு முன்னணி இணக்கத்தின் மூத்த உறுப்பினருடன் பேசிக்கொண்டீருக்கும் போது அவர் கூறினார்- தமிழ் மக்களுக்காக நீங்கள் போராடக் கூடாது என்று சொல்லுவதற்குப் பிரபாகரனுக்கு என்ன உரிமை இருக்கிறது. அவர் எவ்வாறு அப்படி சொல்ல முடியும். எப்போது புலிகள் ஏனைய இயக்கங்களை அழித்து, தாங்கள் மட்டுமே போராடுவதற்குத் தகுதி உள்ளவர்கள் என்றனரோ அப்போதே தமிழர் விடுதலைப் போராட்ட அரசியல் முற்று பெற்றுவிட்டது, தவிர பிரபாகரனால் ஒரு போதும் எதையும் அடைய முடியாது என்பதும் அப்போதே தெளிவாகிவிட்டது.
இதிலுள்ள இன்னொரு முரண்நகையான விடயம் என்வென்றால்,தங்களுடைய நலனுக்காக அரசுடன் கூட்டுச் சேரும் அரசியலையும் தொடங்கி வைத்தவர்களும் புலிகள்தாம். இது பலரும் தொட்டுக் காட்டாத விடயமாகும். நான் இங்கு புலிகள் என்று குறிப்பிடுவது அதன் தலைமையையே அன்றி, தன்னலமற்றுப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட போராளிகளை அல்ல, இந்தியாவை வெளியேற்றும் நோக்கில் புலிகளே முதன்முதலாக அரசுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டனர்.
இந்திய படைகள் வடகிழக்கில் நிலை கொண்டிருக்கும் வரை தனது ஏகத்தலைமைவாத அரசியலை முன்னெடுக்க முடியாது என்று கருதிய பிராபகரன் பிரேமதாசாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டார். அன்னறைய சூழலில் புலிகளுக்கு எதிர் நிலையில் இருந்த இயக்கங்கள் அரசுடன் சேர்ந்திருக்கவில்லை. அப்போது தங்களது செயல்பாட்டிற்கு வகையில் ‘அரசு புலிகள் பேச்ச – புலிகளால் மேற்கொள்ளப்ட்ட ஒரு தந்திரோபாய நடவடிக்கை’ எனும் தலைப்பில் சிறு கைநூல் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். நான்கு கேள்விகளுக்குப் பதிலளிப்பது போன்று தொகுக்கப்ட்டிருந்த மேற்படி நூலில் – இனவாத சிறிலங்கா அரசாங்கத்துடன் பேசுவது சரியான ஒன்றாகுமா என்னும் கேள்விக்கு – இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதில தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையே பொது நலன்கள் சந்தித்துக் கொள்கின்றன.எங்கள் நடவடிக்கை,யப்பானைச் சீனாவில் இருந்து வெளியேற்றுவதற்காக மாவோ, சியாங்காய் ஷேக்குடன் சமரசம் செய்து கொண்டதற்கு ஒப்பானதாகும் என்று பதிலளித்திருந்தனர்.
இதன் மூலம் தங்களது சொந்தநலன்களுக்காக எதிரியுடன் கூட்டுச் சோந்த புலிகள், மற்றவர்கள் தங்களது அரசியல் தெரிவுக்காக அரசுடனோ அல்லது இந்தியாவுடனோ சேர்ந்திருக்கும்போது அதை துரோகம் என்றனர். இராணுவத்துடன் தங்களது இருப்புக்காகச் சேர்ந்தியங்க முடியும் என்றும் வழிமுறைகளை சொல்லிக் கொடுத்தவர்களும் புலிகள்தாம். மன்னார் முள்ளிக்குளத்தில் அமைந்திருந்த புளெட் இயக்கத்தின் பிரதான முகாமைக் கடற்படையின் உதவியுடனேயே புலிகள் தாக்கி அழித்தனர்.அதில் புளெட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ஈழத் தமிழர் போராட்ட அரசியலில்(சொந்த நலன் கருதிய) எங்கள் இருப்புக்காக இராணுவத்துடன் இணைந்திருப்பதும் தவறல்ல என்னும் தந்ரோபாயத்தை முதலில் அறிமுகம் செய்தவர்கள் புலிகளேயன்றி வேறு எவருமல்லர். தாங்களே முதன்மை பெற வேண்டுமெனும் பிரபாகரனின் பிடிவாதம்தான், இறுதியில் தன்னலமற்று போராடப் புறப்பட்ட பல ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள், பிற்காலங்களில் நாட்கூலிகளாக வேலை செய்ததை நான் கண்டிருக்கிறேன். இப்போது அந்த நிலை புலிகளின் போராளிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. புலிகளின் எதேச்சதிகாரச் செயல்பாடுகளால் ஏற்பட்ட வெறுப்பால்தான், புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் பலவும் அரசில் தஞ்சமடைய நேர்ந்தது. அத்தகையதொரு நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர் என்பதைத்தான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் அரசும் புலிகளின் இராணுவரீதியான செயற்பாடுகளை எதிர்கொள்ளுவதற்கு மற்றைய இயக்கங்களைப் பயன்படுத்திக் கொண்டது.
சுருக்கமாச் சொன்னால் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் எனின் அதில் ஒருவர்தான் இருக்க முடியும்- அது பிரபாகரன் தலைமையிலான புலிகள் மட்டும்தான். பிரபாகரனின் முடிவுக்கு மாறாக எவர் சிந்திப்பினும் அது துரோகம். எனது சிறு பிராயத்தில் மலர் தூவி வரவேற்கப்பட்ட மாத்தையா துரோகியானதும் இந்தப் பின்புலத்தின் விழைவுதான். டெலோவை அழிப்பதற்குப் புலிகள் என்ன பழிளை போதித்தனரோ அதே பழியை மாத்தையா மீதும் சுமத்தினர். மாத்தையா இந்திய உளவுத்துறையான ‘றோ’ உடன் இணைந்து பிரபாகரனை கொல்லச் சதி செய்தார் என்பதுதான் மாத்தையா மீதான குற்றச்சாட்டு. ஆனால் அது குறித்த எந்தவொரு ஆதாரத்தையும் புலிகள் பகிரங்கபடுத்தவில்லை. ஆனால் புலிகளிடம் அப்படி எந்தவொரு ஆதாரமும் அவர்களிடம் இல்லை என்பதுதான் உண்மை. மாத்தையாவின் குழுவில் இருந்த ஒருவருக்கு இந்திய உளவுத்துறை நடிகையொருவரை செட்பண்ணிக் கொடுத்தே மாத்தையாவை தங்கள் வலையில் வீழ்த்தியதென்றுகூடக் கதை சொல்லப்பட்டது. உண்மையில் பிரபாகரனின் முடிவு என்று வாதிட்டால், அதை செயல்படுத்த எத்தனித்தால் அதன் விளைவு துரோகியாகச் சாவதுதான்.
இன்று ஈழத் தமிழ் மக்கள் தங்களின் தலைவராக அங்கீகரித்திருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஒரு காலத்தில் புலிகளின் துரோக பட்டியலில் இருந்தவர் என்பது பலருக்கும் தெரியாத சங்கதி.சந்திரிகா அரசின் ஊடாகத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு முயன்றதால், சம்பந்தன் ‘போட்டுத் தள்ள வேண்டியவர்கள்’ பட்டியலில் இணைக்கப்பட்டார். அன்றைய சூழலில் சம்பந்தன் தனது வீட்டிற்கு நூறு மீற்றர் தொலைவிலுள்ள தனது குடும்ப ஆலயத்துக்கூட பாதுகாப்பு இல்லாமல் போக முடியாமல் இருந்தவர் என்பதும் பலருக்கு தெரியாத சங்கதியே! ஏற்கனவே சம்பந்தனின் ஆலோசகராகத் தொழிற்பட்டுக் கொண்டிருந்த கலாநிதி நீலன் திருச்செல்வம் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்த நிலையில்,அடுத்தது சம்பந்தன்தான் என்று வெகுசனப்பரப்பில் பேசப்படுமளவிற்கு நிலைமைகள் இருந்தன. நோர்வேயின் சமாதான முயற்சி சம்பந்தனின் உயிரை காப்பாற்றியது. அன்றைய நிலைமையில் சம்பந்தன் போன்ற ஜனநாயக அரங்கில் தடம்பதித்திருந்த தலைவர்களின் ஆதரவு புலிகளுக்குத் தேவைப்பட்டது. புலிகள்தாம் எல்லாம் என்பதைச் சம்பந்தன் ஒப்புக்கொண்டதால் ‘துரோகி’ சம்பந்தன் புலிகளின் வட்டத்திற்குள் சிறந்த தலைவரானார். இது பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார். புலிகள் அமிர்தலிங்கத்தை துரோகி என்று சுட்ட போது உடுப்பிட்டி சிவா எனப்படும் சிவசிதம்பரம் காயத்துக்குள்ளானார். பின்னர் அதிஷ்டசவமாக தப்பித்தும் கொண்டார். ஒரு வேளை சிவசிதம்பரம் அன்றே கொல்லப்பட்டிருந்தால் ‘துரோகி’ ஆனால் பிழைத்துக் கொண்டதால் தம்பிதான் எல்லாம் என்று தியாகி ஆகிவிட்டார்.
ஆனால் இதிலுள்ள சுவாரசியம் என்னவென்றால், பிரபாகரன் யாரையெல்லாம் துரோகி என்று துரத்தினாரோ, அவர்களே இன்று ஈழத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்களாக வெளித் தெரிவதுதான்.
சிவவராம்- இந்தப் பெயர் நான் எழுதத் தொடங்கிய காலத்தில் எனக்கு ஆதர்ஷமான பெயர். ஒரு வகையில் நான் அரசியல் ஆய்வுத்துறைக்குள் வர வேண்டுமென்னும் உத்வேத்தை அளித்த பெயரென்றும் சொல்லலாம். ஆனால் இப்போது வெளிவரும் தகவல்களோ அனைத்தையும் புரட்டிப்போடுவதாக இருக்கிறது. நண்பர் நடராசா குருபரன் எழுதிவரும் ‘மௌனம் கலைகிறது’ என்னும் தொடரில் 2004 இல் விடுதலைப்புலிகளின் இராணுவ கட்டமைப்பபை நிலை குலையச் செய்த, கிழக்குத் தளபதியும் பிரபாகரனின் நம்பிக்கை நட்சத்திரமுமான கருணாவின் பிளவின் பின்னணியில் செயலாற்றிய மூளை சிவராமே என்று பதிவு செய்திருக்கிறார். கருணா பிளவின் பின்னரான நிலைமைகள் தனக்குப் பாதகம் என்பதை அறிந்ததும், சிவராம் பிரபாகரன் பக்கமாக சாய்ந்து கொண்டு, இராணுவ அர்த்தத்தில் வன்னியின் முக்கியத்துவம் என்ன என்பதை விளக்கும் வகையில் கருணாவுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். பின்னர் விடுதலைப் புலிகள் கருணாவை இராணுவரீரியாக எதிர் கொண்டபோது, அதற்கும் பிறிதொரு விளக்கத்தைக் கொடுத்திருந்தார். இதுவரை சிறிலங்கா இராணுவத்தை எதிர் கொண்டு வந்த புலிகள் தங்களது படைப்பிரிவொன்றையே வெற்றிகரமாக எதிர்கொண்டதன் மூலம் புதியதொரு அனுபத்தைப் பெற்றுக் கொண்டனர் என்பதாக, புலிகள் கிழக்கின் கருணா அணியினரைத் தாக்கியழித்ததை நியாயப்படுத்திருந்தார். வாசித்த நாங்களோ சிவராமின் இராணுவ விஞ்ஞான அறிவையெண்ணி மெச்சிக்கொண்டோம்.ஆனால் அதன் சூத்திரதாரியே சிவராம் எனும்போது என்ன சொல்வது! பபின்னர் சிவராம் படுகொலை செய்யப்பட்டபோது பிரபாகரன் தனது அதியுயர் விருதான ’மாமனிதர்’ விருதை வழங்கிக் கௌரவித்தார். புலிகளின் இராணுவ மரியாதையோடுதான் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இப்போது ஈழத் தமிழ் தேசிய அரசியலில் சிவராமின் இடம் என்ன- மாமனிதரா, தேசியவாதியா, துரோகியா, தியாகியா- சிவராம் யார்? எனவே இங்கு ஒரு விடயம் தெளிவாகிறது. பிரபாகரனின் முடிவுகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தால் அவர் தியாகி, சிறந்த தமிழ் தேசியவாதி- எதிர்த்தால் அவர் பக்கம் எத்தகைய நியாயம் இருப்பினும் அவர் ஒரு துரோகியே! கடந்த முப்பது வருட கால அரசியலில் துரோகி- தியாகி எனபது பிரபாகரனை ஆதரித்தல் எதிர்த்தல் என்பதில் தங்கியிருந்தது.
புலிகளின் வீழ்ச்சியை தொடர்ந்து இந்த (துரோக) முத்திரை குத்தும் அரசியல் நகைப்பிற்கிடமாகியது. அதுவரை புலிகளை எதிர்த்து நின்றவர்களையும் புலிகளை நிராகரித்தவர்களையும் மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்தவதற்காக பயன்டுத்தப்பட்ட ‘துரோகி’ என்னும் வாதம், ஆச்சரியகாரமான வகையில் அதன் மூத்த உறுப்பினர்களுக்கும் பலவருடங்களாகப் புலம்பெயர்ந்த நாடுகளில் பிரபாகரனுக்கு சேவகம் செய்தவர்களுக்கும் எதிராக திரும்பியது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போரின் போது வீரச்சாவடைந்து விட்டார் என்னும் தகவலை வெளியிட்ட புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பி. துரோகியானார். பின்னர் புலிகளின் சொத்துக்களை பதுக்கிக் கொள்வதில் ஏற்பட்ட கோஷ்டி மோதல்களின் காரணமாக பலர் துரோகிகளாக்கப்பட்டனர். காஸ்டோ பிரிவின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள் இருந்ததால் தங்களது செயற்பாடுகளுக்குக் குந்தகமானவர்கள் என்று கருதப்பட்டடோர் மீதெல்லாம் பிரபாகரன் வீசிய துரோகி-பூமாறங் அவரது சகாக்களையே பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
அல்பிரட்துரையப்பா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சபாரத்தினம், மாத்தையா, பத்மநாபா, நீலன்திருச்செல்வம், கருணா இன்னும் நூற்றுக் கணக்கானோருடன் நீண்டு கிடக்கும் பிரபாகரனின் துரோகி பட்டியலில் இப்போது பல புலிகள். இறுதியில் அது பிரபாகரனையாவது விடடுவைக்குமா என்பது சந்தேகமே!
யதீந்திரா
( நன்றி காலச்சுவடு பிப்ரவரி 2012)
Comments are closed.